வெள்ளி, 16 மார்ச், 2018

வடசொற்கிளவி



வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.    5

என்று தொல்காப்பிய நூற்பா கூறுகிறது.  இருப்பினும்
இதற்கு பல்வேறு  திகழ்த்தல்கள் (வியாக்கியானங்கள் )
விரிக்கப்பட்டுள்ளன.

இதை   ஓர் எளிதான முறையில் இப்போது அறிந்து
இன்புறுவோம்.

எது வடசொல் என்பது பெரிய ஆய்வுக்குரியது.  
எடுத்துக்காட்டாக, கஷ்டம் என்ற சொல் வடசொல்
என்று சொல்வர்.  இதற்குக் காரணம் சொல்லில்
"ஷ்" வருகிறது.  அது வடசொல் என்பதற்கு 
வேறு ஆதாரங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
துணிந்து வடசொல் என்பர்.

அது வடசொல்லாக இருக்கட்டும். தொல்காப்பியம்
கூறுவது என்னவென்றால், இந்த வடசொல்லை 
எடுத்து அங்குள்ள வட எழுத்தை எடுத்துவிட்டால்
அது மிச்சமுள்ள எழுத்துக்களுடனும் இன்னும்
புணர்ந்த எழுத்துக்களுடனும் தமிழ்ச்சொல் ஆகிவிடும்
என்பது.

இப்போது கஷ்டம் என்பதை எடுப்போம்.
அதிலுள்ள ஷ் என்ற வட எழுத்தை விலக்குவோம்.
ஆக, கஷ்டம் >  கடம் ஆகிவிட்டது.

இதில் ஓர் எழுத்தைப் புணர்த்த வேண்டும்.

கடம் > கட்டம் ஆகிவிடும்.

கடம்,  கட்டம் இரண்டும் தமிழ்தான்.

கடு+ அம் =  கடம்.   (குடம் - கடம் என்பது
இருக்கட்டும்,)

கடு+ அம் =  கட்டம்,

இரண்டும் கடு( கடுமை)  என்ற சொல்லினின்று
பிறப்பன ஆகும்.

ஆகவே அவை இரண்டும் தமிழே.

எந்த வட எழுத்து உள்ள சொல்லை எடுத்தாலும்
அந்த எழுத்தைப் பின்னிழுக்க, அது தமிழ்ச்சொல்
ஆகிவிடும்.

இதை இன்னும் ஆராய்வோம்,

23




கருத்துகள் இல்லை: