சனி, 3 மார்ச், 2018

ஆண்டாள் அடிவீழ்வாய்




ஆண்டாள் அடிவீழ்வாய்  அம்மாவே மன்னிஎன்
றீண்டுநீ வேண்டிடில் தாண்டுவை ----மாண்டாலும்
உன்றன் வினைக்கடல்; ஒண்ஞாலம் பின்வருமே
கன்றுநிலை காண்மாறும் மாடு.




நன்கொடை பல்கலையின் நற்றமிழ்  நாற்காலிக்

கென்கோ தமிழ்மக்காள் இன்னிசையே ---- முன்காலே

சேற்றில்  அதைமீட்டுச் சேர்ந்திடுக கோதையடி;

மாற்றிப் பிறத்தலது மாண்பு.
 

உரை:

பாடல் 1:

ஆண்டாள் அடிவீழ்வாய் -  ஆண்டாள் அம்மையை
விழுந்து வணங்கு;
அம்மாவே மன்னி என்று -  என் தாயே என்னை
மன்னித்துவிடு என;
உன்றன் வினைக்கடல் -  கடல் போன்ற விரிந்த உன்
தீவினைகளை;
ஈண்டு நீ வேண்டிடில் - இங்கே நீ இவ்வாறு வேண்டிக்
கொண்டாய் என்றால்;
மாண்டாலும் - பின் நீ மாண்டுவிட்டாலும்;
தாண்டுவை - நீ மாற்றிக்கொள்ளுதல் ஆகும்.
ஒண்ஞாலம் - ஒளிபொருந்திய இவ்வுலகமானது;
பின் வருமே -  உன்னைப் புகழ்ந்து உன் பின்னால்
வரும் நிலை அடைவாய்;
கன்று நிலை மாறும் மாடு -  ஒரு மாடு கன்றாய்
இருந்து வளர்வது போல.
இறுதியடி முழு விளக்கம் இங்கு, காணச்
சொடுக்குக:
http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_53.html


பாடல் 2:


நன்கொடை பல்கலையின் நற்றமிழ்  நாற்காலிக்
கென்கோ - (இவர்) பல்கலைக்கழகத்துக்குத்
தமிழ் வளர்க்க நன்`கொடை  அளித்திருப்பது;

தமிழ்மக்காள் இன்னிசையே -  செவிகட்கு இனிய
இசையே ஆகிறது,  தமிழ் மக்களே!

முன்காலே  சேற்றில் -  ஆனால் (இவர்) முன் கால் சேற்றில்
மாட்டிக்கொண்டுள்ளது;

அதைமீட்டுச் சேர்ந்திடுக கோதையடி - (இவர்க்குச்
 சொல்வது)
 அக்காலைத் திருப்பி எடுத்துக் கோதை நாய்ச்சியாரின்
திருவடிகளில் (வீழ்ந்து )  முதலில் சேவித்துணர்வாய்.
என்றபடி.

This commentary is suspended.
(Third party suspected of causing 
computer to hang.)
Used retrieval procedures to save.
First publ: 31.1.18 2.27 am.
edited:  9.16 am on 3.3.18


கருத்துகள் இல்லை: