புதன், 21 மார்ச், 2018

வேதன், வேதனை, வேகம் (அடிச்சொல்: வே)



வேதனை என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  மனிதன் தீயைக் கண்டு அஞ்சியதும் உண்டு. பின் அறிவுபெற்று அதையே தன் கருவிகளில் ஒன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டதும் உண்டு. பிறப்பஞ்சில் இவையாவும் நாமறியாமலே நடந்துள்ளன. பிறப்பஞ்சு என்றால் உலகம். நிலம், தீ, நீர், வளி (காற்று), விசும்பு( ஆகாயம்) என்ற ஐந்து பிறப்புக்கள் கலந்ததே ஆகும். அப்படிச் சொல்கிறது தொல்காப்பியம்.

அதைக்குறிக்க எழுந்த சொல்லே பிறப்பஞ்சு> பிரபஞ்சம்.

நெருப்பை அறிந்த காலத்திலிருந்து  வேதனை, வேகம், வேது, வேதை, வேகுதல்,  வேதல் எல்லாம் வேதனின் அருளால் உண்டாகிவிட்டன. (பதங்கள் )

புண்பட்ட இடத்தில் எரிகிறது என்`கிறான் ஒருவன். என்ன நெருப்பா பற்றி எரிகிறது?  இல்லை சும்மா ஓர் எரிச்சல் உண்டாகிறது.  தோலில் அந்த உணர்ச்சி தோன்றுகிறது.  எரிச்சலா?  என்ன கோபமா? இல்லை, எரிவு!

அறைக்குள் காற்றாடி ஓடாததினால் ஒரே வேக்காளம். வெப்பம் மிகுதி.
வே என்பது ஓர் அடிச்சொல். அதன் பொருள் மிகுதியான சூடு ஏறிப் பொருளை மாற்றும் அளவுக்குச் செல்கிறது. சட்டியில் இட்ட காய் நெருப்பினால் உடனே (சிறிது நேரத்தில்)வெந்து மென்மை அடைந்துவிட்டது. நெருப்பைக் கண்டு பிடிக்கு முன் மனிதன் அதை வெயிலில் வேகவைத்துத்தான் உண்ணமுடியும். நெருப்பு அறிந்த பின்னர் அதைக்கொண்டு உடனே வேகிறது.  வேகம், வேகம் .... உடனே வெந்ததில் வந்த வேகம்.
இப்படித் தீயினால் வேலை வேகமாய் முடிவதை மனிதன் அறிந்து அந்த வே என்பதிலிருந்தே வேகம் என்ற சொல்லைப் படைத்துக் கொண்டான்.

தொடக்கத்தில் அவன் கண்ட வேகம் அதுதான். எறிபடை வேகமன்று. தீயினால் அறிந்த வேகம்.

இப்போது அதுதன் சொல்லமைப்புப் பொருளை இழந்து பொதுப்பொருளில் விரைவு குறிக்கிறது.

புண் எரிவு கண்டாலும் வேகிறது.  வேதனை  :  வெம்மை மிகுந்து எரிவு உண்டாகித் தாங்க முடியவில்லை.  வே+து+அன்+ = வேதனை.

அல்லது: வே+தன்+.   தன்னுள் வேகும் தன்மை. எரிதல்.

து+அன் எனினும் தன் எனினும் ஒன்றுதான். 

வே+ த் + அன் + ஐ என்று காட்டினும் அஃதே.

இவற்றுள் பெரிய விடயம் எதுவும் இல்லை.

வேதன் என்போன் கடவுள். வேதம் > வேதன் எனினும் வேகுதல் = தீ, ஆகையால் வே+ து + அன் = வேதன் எனினும் ஒன்றுதான். எப்படியும் கடவுள்தான்.

 பிழைகள் பின் சரிசெய்யப்படும்.

கருத்துகள் இல்லை: