வெள்ளி, 5 செப்டம்பர், 2014

News and comment

செய்தி :  நீரிழிவில்  கால்போன நோயாளியின் வீட்டுள் புகுந்த தெருநாய் அவரைக் கடித்துக் குதறியது. வீடு 5-வது மாடியில். 

* பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்  என்பதை எண்ணும்போது, இது நம்மையும் துயரத்தில் ஆழ்த்துகிறதே ! 

செய்தி: சீனப்   புத்தர் ஆலயத்தில் உண்டியல் பணம் திருட்டு!

* திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பட்டுகோட்டையார் பாட்டு.

செய்தி:  நிலாய்  வட்டாரத்தில் செம்மண் கலந்த குடி நீர் பகிர்ந்தளிப்பு . * ஒட்டகங்கள் இருக்கும் ஊருக்குப் போகவேண்டிய நீர். முகவரிக் குழப்பம்.

செய்தி: அரண்மனைக்குள் அத்து மீறி நுழைந்து,  நாற்காலியில் அமர்ந்து 
தொலைக்காட்சி  பார்த்தான், வழிப்போக்கன் !
நீதி மன்றத்தில் "அது அரண்மனை என்பது தெரியாது"  என்றான்.

*  நீ திபதி ஜெஸ்ஸிக்கா  தாமஸ்:  அது  வீடாக இருந்தாலும் அதே .குற்றம்தான்.

(தாளிகைச் செய்திகளும் நம் கருத்துரைகளும்.)  5.9.2014





Hackers have made some changes to this post, causing some spelling errors.  We have restored as per
original.  No spell errors now   .

If errors crop up again please inform us through the comments feature.

கருத்துகள் இல்லை: