ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஈரல்

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் பல, அவற்றுள் ஒன்று ஈரல் ‍மூச்சை உள்ளிழுக்கும் செயலைச் செய்கின்றது; இன்னொன்று அரத்தத்தை உள்ளிழுக்கும் (இழுத்து வெளியில் இருக்கும் குழாய்களில் செலுத்தும் ) வேலையச் செய்கிறது.

ஈரல் என்ற பெயர் ஏற்படக் காரணம் உள்ளிழுக்கும் செயல்தான். ஈர்த்தல் -  உள்ளிழுத்தல்.ஈருள் 

ஈர் >  ஈர்த்தல்;
ஈர் >  ஈரல்  (அல் விகுதி}
ஈருள்  :  ஈர்  + உள் (உள் விகுதி)


தமிழில் வழங்கும் இருதயம், இதயம் என்பனவும் இவ்வடியினின்றே தோன்றியனவாம்.

ஈர் > ஈர்+ து + அ + அம்=  ஈர்தயம் >  இருதயம்  > இதயம்.
ஈர் என்பது இர் என்று குறுக்கம் பெற்றது.
து என்ற அஃறிணை விகுதிச்சொல் இங்கு சொல்லாக்க இடைநிலையாய் இடப்பட்டுள்ளது.
அ என்ற சொல்லாக்கச் சாரியை இடப்பட்டுள்ளது.
அகரத்துக்கும் இறுதி அம் விகுதிக்குமிடையே உடம்படுமெய் யகரம் முளைப்பது இயல்பு.

இஃது திறம்பட அமைக்கப்பட்டுள்ளது.
இதயம் என்பது இருதயமென்பதன் இடைக்குறை.

அறிந்து ஆனந்தமடையுங்கள்.

கருத்துகள் இல்லை: