புதன், 3 செப்டம்பர், 2014

உளுந்தே இல்லாத தோசைபோட்டு

உளுந்தே இல்லாத தோசைபோட்டு
ஒருபயனும் இல்லாமல் விறகேபோல‌
விழுந்தே உண்கின்றார் வேலைபார்ப்போர்
வேறுவழி இல்லாமல் ஐயோபாவம்!

அரிசிமாவில் ஆட்டாவைக் கலந்துவிட்டார்.
அடிப்பிடிக்க மாட்டாதாம் அடித்துச்சொல்வார்.
வரிசையிலே நிற்கின்றார் அதனையுண்ண!
வந்த நாட்டில் தாயில்லை அதனாலன்றோ!

கட்டியான இட்டிலியோ கண்ணராவி
கருகிவீசும் பழஞ்சாம்பார் என்னசெய்ய!
விட்டகன்று நல்லுணவு தேடியுண்டால்
விதவிதமாய் நோய்களுமே வாராதையா.

கருத்துகள் இல்லை: