ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ONAM greetings

மாவலியும் வந்தார்   நம் மக்கள் காண‌
மக்கள்கண்டு மாவலியை வருக என்று
தாவிலதாய்த் தாள்பணிந்து பாடி ஏற்றார்.
தக்கபணி விடைசெய்தார் அதுவாம் ஓணம்!
நோவிலராய் நொடியிலராய் வாழ்க வாழ்க‌
நூலறிவும் நுவலறிவும் உயர்ந்து வாழ்க!
காவலுற வளர்கமலை யாளி மக்க்ள்
கனிந்துமனம் வாழ்த்துகிறேன் சிவமா லாவே.

மாவலி  -  ஓர்  பழங்கால  மாமன்னர்.  தாவிலதாய் =  தூய்மையோடு .. குற்றமொன்றும் இன்றி.

கருத்துகள் இல்லை: