ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

டி. ஆர். மகாலிங்கம் ‍ டி. ஆர். ராஜகுமாரி. (இதய கீதம்).

டி. ஆர். மகாலிங்கம் ‍  டி. ஆர். ராஜகுமாரி. (இதய கீதம்).
======================================================

இவர்கள் பாடிய ஒரு பழைய பாட்டு மிக்க இனிமையாய் இன்னும் விரும்பப் படுவதாய் உள்ளது. அந்தப் பாடலைக் கம்பதாசன் என்னும் புகழ்பெற்ற கவிஞர் எழுதியிருந்தார். பாடல் வருமாறு:

X :வானுலாவும் தாரை நீஎன் இதய கீதமே.

Y :ஆனந்தமே என் ஜீவனாகும் இதய கீதம் நீயே.

X:அழகாய் அலைமோதும் கடலின் அமுதமாகும் உன் மொழியே.

Y:ஆசை ஜோதி வீசும் அருணோதயம் உன் விழியே.

X & Y: ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே.

X: வீசும் தென்றல் காற்றினிலே
விந்தை மேகம் போலே!

Y:  நீல வாவி மீதே
நீந்து மனம் போலே.

X: காதல் நாடும் வண்டின்
கான இன்பம் போலே

X & Y: ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே.

வாழ்விலே நம் ஜீவ பாக்கியம்  இதய கீதமே.

இதிலுள்ள கருத்துகள் ஆழ்பின்னலாக இல்லாமல் எளிமையாகவே உள்ளன.
திரைப்பாடலுக்குரிய தெளிவுடன் உள்ளது. இந்தப் பாடல் கிட்டினால் கேட்டு  மகிழுங்கள்.

இதில் பிழைகள் இருப்பின் தெரிவியுங்கள். நன்றியுடன் திருத்திக்கொள்வேன்.



கருத்துகள் இல்லை: