வியாழன், 4 செப்டம்பர், 2014

வீதியிலே நடக்கின்ற வேளை...

வீதியிலே நடக்கின்ற வேளை பார்த்து
விதிமுடிய நேர்ந்ததெனப் பேசும் வண்ணம்
சூதறியா நேரியர்கள் தம்மைக் கொல்லும்
சுடர்விளக்கின் உந்துகட்கோர் கட்டு வைக்கும்
தீதிலதாம் நெறியொன்றே இந் நாள் காறும்
தெரிந்தபெரு மனிதர்களும் கண்டார் இல்லை!
யாதுவழி உயிரிழப்பு குன்றச் செய்ய?
யாமறியோம் தேமருவும் மேலாம் வாழ்வில்.  

கருத்துகள் இல்லை: