வியாழன், 25 செப்டம்பர், 2014

நிரப்புவது பிறப்புகளை............


பிறப்பினிலே உயர்வில்லை தாழ்வும் இல்லை;
பிரபுவென்றும் அல்லனென்றும் பேதம் இல்லை;

நிரப்புவது பிறப்புகளை நில்லாக் செல்வம்;
நிரப்பியவ‌ர் பிரபுகளென் றேறி நின்றார்;

குறைப்பட்ட ஏழைகளே கீழே சென்றார்
கொள்வறுமைக் கோடெழுந்து யர்ந்தா ரில்லை;

அரைப்பகுதி அறிவுடையார் இன்னும் பாதி
அடையாமல் அதுபோற்றி மேலும் தாழ்ந்தார்

விளக்கம்:

உடலை "இடும்பைக் கொள்கலம் " என்கின்றன  இலக்கியங்கள். பிறப்பில் இது செல்வங்களால்  நிரப்பப்  பெற்றால்,  அப்போதுதான் "பிரபு" ஆகிறான் ஒருவன். அல்லாதவன்  அதற்குத் தகுதி  இல்லாதவன்       இதுவே  உலகச்  சூழல்..

கருத்துகள் இல்லை: