சனி, 21 மார்ச், 2020

சாஷ்டாங்கம் ‌ - சொல்

இன்று " சாஷ்டாங்கம்"   என்ற சொல் அறிவோம்.

இச்சொல்லின் முந்துவடிவத்தைக் கண்டு ஒப்பிடுவது  எளிதே ஆகும். இதை இவண் செய்து  மகிழ்வோம்.

அங்கத்தை முழுவதும் தரையில் சார்த்தி இறைவணக்கம் முதலியன இயற்றுதல்  "சாஷ்டாங்க"மாகும்.

சார்த்து அங்கம் >. சார்த்தாங்கம்> சாஷ்டாங்கம்   ஆயிற்று..

அதாவது  இஃது பூசைப் பொருள்கள் சார்த்துதல்போல் அங்கத்தைச்  சார்த்துவது.

சார்த்து என்பது பின் "சாத்து‌"  என்று
திரிந்தது.  பின்னர் அயல்சென்று    சாஷ்டா....>   சாஷ்டாங்கமாயிற்று. சாஷ்டாங்கம் வழக்குக்கு வந்த பின் சார்த்தாங்கம் இறந்தது

இவ்வாறு பின்வடிவம் வலுப்பட்டு நின்ற பின் முந்தையது  மூழ்கிப்போன இன்னொரு சொல்: கட்டம் (1)> கஷ்டம்.

கடு + அம் = கட்டம் > கஷ்டம்(1).  இனிக்   கட்டு + அம் = கட்டம்(2)  என்றுமாம். கஷ்டம்(1) என்ற சொல் செய்த பணி என்னவெனில்,  கட்டம்(2) என்பதனுடன்    ஏற்பட்ட பொருள்மயக்கு விலக்கியமை என்பர்.   சாஷ்டாங்கம்  என்பது இவ்வாறு ஒன்றும் உதவிற்றில்லை காண்க.

அங்கம் என்பது முதன்மை  (important)  உள்ளுறுப்புகள் யாவும் உள்ளடங்கிய உடல்.  அடங்கு>. அடங்கம்>    அங்கம் எனக் காண்க. இது  டகரம் ஒழிந்த இடைக்குறைச்சொல்.  இவ்வாறு புனைவுற்ற இன்னொரு சொல் :  கேடு + து =  கேது என்பது.    பெரிதும் கேடு விளைக்கும் கிரகம் அல்லது கோள்  என்பது இதன் பொருள். மற்றொன்று :  பீடு + மன் = பீமன்,  பீடுடைய மன்னன்.

ஒரு திரிந்த  துணுக்கும் ஓர் இடைக்குறைச் சொல்லும் கலந்த மயக்கமே சாஷ்டாங்கமாகும்.

தேய்ந்து அழிதக்கது தேகம்.  இது  தேய் + கு + அம் =  தேய்கம் என்றாகி யகர ஒற்று விலக்கித்  தேகம் என்றமைந்தது.   பேச்சு வழக்கில் திரேகம் என்றொரு சொல்லும் உள்ளது.  அது தோல் திரைந்து பின் அழிதல் என்னும் கருத்தில் அமைந்தது.   திரை+ ஏகு + அம் =  திரேகம்.  திரைந்த பின் ஏகிவிடுவது.  போய்விடுவது என்பதே ஏகு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.  இச்சொல்லமைப்பில் திரை என்ற சொல்லின் இறுதி ஐகாரம் கெட்டது.

நரை திரை மூப்பு மரணம் என்பது தமிழ்நாட்டினர் சொல்லும் முதுகருத்து ஆகும்.

ஒப்பீடு:

வாய்+ தி = வாய்த்தி >  வாத்தி > வாத்தியார் ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை.)  யகர ஒற்று ஒழிந்த சொல்.
அதுவேபோல்  தேய்கம் > தேகம் என்பதும்.

சாஷ்டாங்கம்:

எட்டு உறுப்புகள் தரைப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்பார் உளர்.

சா -  சாய்ந்து,
ட்டு    =   எட்டு   ( திரிபு:  அட்டு )
அங்க(ம்)   மகர ஒற்று விலக்கல்
ஆக சாட்டாங்க > சாஷ்டாங்க என்பது  என்பர்.

எட்டு உறுப்புகள் ஆவன: இரு கைகள் இரு முழங்கால் இரு தோள் மார்பு நெற்றி   ஆக எட்டு என்பர். அங்கம் என்பதில் தோளும் மார்பும் அடங்கிவிட்டன ஆகையால் இது பொருந்தவில்லை.  தோள் முழுமையாய்த் தரையிற் படுவதில்லை. இதனினும் உயிருக்கு வரும் தீமையை உடலுக்குச் சாட்டுதல் என்னும் கருத்துக் கூறி  சாட்டு + அங்கம் = சாட்டாங்கம் என்று புனைந்து  சாஷ்டாங்க என்று திரிப்பின் நல்ல விளக்கமாகுமே! இறைவணக்கத்துக்கு உண்டான புனைவு பின் பிற வணக்கங்களுக்கும் பரவிடில் வியப்பொன்றுமில்லை.



அறிக மகிழ்க.


இங்கு தட்டச்சுப் பிறழ்வுகள் இருப்பின்.
பின் சரிசெய்யப்படும்.

22.3.2020 failed to generate edit preview  .

புதன், 18 மார்ச், 2020

செவிலி ஆவிலி சக்கிலி காப்பிலி முதலானவை

பக்கத்தில் துணைவி என்று யாருமில்லாமல் அலைபவன் பக்கிலி,   இச்சொல் பக்கு + இலி  என்று பிரியும்.   லகரம் ரகரமாகத் திரிவது தமிழில் மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணக்கிட்டுவதாகும்.  பக்கிலி என்பது பின் பக்கிரி என்று திரிந்து அறியாமையால் பிறமொழிச்சொல் என்று தவறாக உணரப்பட்டது.

பகு என்பது பலவாறு திரியும் சொல்.அவற்றில் அனைத்தையும் இங்குக் கூறின் பெருகும்.   பகு என்பது பக்கு என்று திரியும்.   இதன்பொருள் இரண்டாகப் பகுந்தது என்றும் ஆகும்.  பகு என்பது முதனிலை திரிந்து பாகு என்றுமாகும். இதன்பொருள் பல பாகங்கள் கலந்துருவானது என்பதே.  இனி அம் விகுதி பெற்றபின் பாகம் என்றாகுவது பகுதியாவது என்ற பொருள்தரும்,  பக்கு என்பது அம் விகுதி பெற்றுப் பக்கம் ஆகும்.  பக்கு என்பது மெல்லெழுத்து வந்து பங்கு என்றும் ஆம்,   பின் அது அம் விகுதி பெற்று பங்கம் என்றுமாம். எனில் அது பகுதி நலமிழந்தது என்பது. பங்கு என்பது இ விகுதி பெற்றுப் பங்கி என்றும் பின் அது முதல் நீண்டு பாங்கி  ( தலைவியின் பக்கமிருப்பவள் )  அதாவது தோழி என்றும் பொருளுடைத்துமாம்,  \

பகு > பக்கு > பக்கு இல் இ > பக்கிலி > பக்கிரி என்றறிக,

இச்சொல்லின் இடையில் வந்த இல் என்பது இல்லாமைப் பொருட்டு. ஆனால் இல் என்பது இடமென்றும் இல்லமென்றும் பொருளும் உடையதாதலின் அவ்வாறும் சொற்கள் அமைந்துள்ளன.

இதற்கு எடுத்துக்காட்டு.  செம்மை + இல் + இ :  அதாவது சீரான முறையில் இல்லத்திலிருந்து பார்த்துக்கொள்பவள்.   இங்கு மை விகுதி கெட்டு  செ+ இல் + இ =  செவிலி ஆகிற்று.  செம்மை > செவ்வை.  இது அம்மை > அவ்வை போலும் திரிபு.  செவிலி > செவிலித்தாய் என்றுமாம்.

சாக்கிய முனியாகிய புத்தரைப் பின்பற்றி இல்லத்து வாழ்வை அமைத்துக்கொண்டவர் சாக்கு + இல் + இ >  சாக்கிலி என்பது முதலெழுத்துக் குறுகி சக்கிலி எனலும்  ஆகும். இதற்கு வேறு அமைப்பும் கூறலுண்டு என்பது அறிக,  முதலெழுத்துக் குறுக்கம் பல சொற்களில் நிகழ்ந்துள்ளதொன்றாகும்.
இது தமிழ்மொழியில் பல சொற்களில் காணக்கிட்டுமொரு நிகழ்வானதால் விரித்திலோம்.
[ சாக்கிய என்பதில் சாக்(கு) + இய  என்று பிரித்தபின் இய என்பது பெயரெச்சம் காட்டும் பின்னொட்டு என்று காண்க. அயலில் இது சாக்ய என்று குறுகும்‌. சாக்கு + இல் + இ > சாக்கிலி > சக்கிலி.  சாக்கியக் கொள்கையில் இருப்போன்,  அல்லது சாக்கியம் பற்றி வாழும் வீட்டினன் என்று ஏற்ப விரித்தல் கொள்க. ]


சக்கிலி:  மற்றொரு விளக்கம் இங்குக் காண்க:

சக்கிலியன் http://sivamaalaa.blogspot.sg/2015/11/ii.html


" வா ",  "வருவாய் ". முதலிய சொற்கள் ஆன் விகுதியுடன் இறந்தகாலத்தில் வந்தான் என்று குறுகுதலால் இது (ுதல் ுதல்  ுுுதல் ) வினைகளிலும் மிகுதி.   தோண்டு + ஐ என்பது தொண்டை என்று குறுகுதலும் காண்க. பகுக்கப்படுதலின் வெட்டிய கமுகுக் கொட்டை பாக்கு என்று நீடலும் காண்க.  நாக்கு என்பது வினையாக்கத்தில் நக்கு -  நக்குதலென்பதும் அறிக.

ஆவிற்கு இடம் கட்டிக்கொடுத்தவன் ஆவிலி > ஆவிலியன்.   இனி  ஆவிலாமல் வேட்டுவனாக வாழ்பவன் ஆவிலி யாவதும் காண்க. இடனும் வரலாறும் நோக்கிப் பொருள்கொள்ளுதல் வேண்டும்.  பாதுகாப்பிலாதவன் காப்பிலி எனலும் தனக்குக் காவல் இல்லம் அமைத்து வாழ்பவன் காப்பிலி ஆவதும் வரலாறு நோக்கியே தீர்மானிக்கத் தக்கவை என்பதுமறிக.

மூச்சு நிறுத்தி வெளிக்கொணர்தல் ஆவது மூக்கு > முக்கு > முக்குதல் ஆனதும் காணின் நீட்டலும் குட்டையாக்கலும் சொல்லமைப்பில் இயல்பென்றுணர்க.

செவ்வாய், 17 மார்ச், 2020

அரசியலில் ஆதவன்

கீழுள்ள நாலு வரிகள் கொண்ட கவிதை
ஒரு மூன்று ஆண்டுகளின்‌முன்
வேறு நாட்டில் இயங்கிய அரசியல் கட்சியைப் பற்றி‌ வரையப்பட்டது.

இக்கட்சி இப்போது இறங்கிவிட்டது.

ஆம்ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில்  ஆதவன்  என்றிட

ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற‌‌ தூழலில் சிக்கி.

வாசித்து மகிழுங்கள்.

இவ்வரிகளில் வந்த சில சொற்கள் பற்றி அறிவோம்.5

ஆதவன்:  சூரியனைப் போற்றுவது நம் பண்பாட்டில் உள்ளது. தவ ஞானிகளும்
போற்றினர். தங்கள் தவம் அவனால் ஆகும் என்று   நம்பினர்.
amma left with
ஆ :  ஆகும் .
தவம் :   ஞானிகள் செய்வது.  தவமாவது உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை என்றபடியான நெறிநிற்றலாம்.

தவம் ஆகுவதற்கு உதவுவோன் ஆ+தவன்.  இது முறைமாற்றுச் சொற்புனைவு. இவ்வாறு  புனையப் பெற்றவை பலவாகும்.  இதுபோல் புனைவுபெற்ற இன்னொரு சொல் தபு தாரம்  என்பது...   மா+தவன் > மாதவன் எனற்பால சொல் இயல்பாய் அமைந்தது  ஆகும்.  மாதவன் எனின் பெருந்தவமுடையோன்.

ஆதவன் என்பது காரணச் சொல்.

யாதவன் என்ற சொல் பற்றி இவண் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.ht

யா என்பது இவண் ஆ (  மாடு ) என்பதன் திரிபு.   இதுபோலும் இன்னொன்று  ஆடு > யாடு.    தவர் என்பது தமர் ( நம்மவர்) என்பதன் திரிபு.    இனித் தவர் > தவமுடையோர் எனினும் ஒக்குமென்றறிக.

இது இங்கனம் திரிபுற்றது பொருள்மயக்கு அகற்றிற்று.


கட்சி -  கள் + சி.  இது கள் என்ற அடிச்சொல்லில் தோன்றியது.
கள் +து = கட்டுதல்.  காரணத்தால்
கட்டுண்டு நிற்கும் கூட்டமே கட்சியாகும்.


தட்டச்சு த் திருத்தம் பின்.
மறுபார்வை:  20.3.2020.



வியாழன், 12 மார்ச், 2020

வக்கணம் வக்கணை விரித்துரைத்தல்

வரிக்கு வரி அழகு வெளிப்படும்படி ஒன்றை விரித்துரைத்தலும் வக்கணை எனப்படும்.

வரிக்கு வரி + அணி > வரிக்கணி > வக்கணி >  ( இவ்விடத்து வினைச்சொல்லாகி ) வக்கணித்தல் எனவாகி,  அழகுரைத்தல் என்ற பொருளிலும் இச்சொல் வரும்.  இதனை உபசாரம் என்றும் சொல்வர்.

இறைவன்பால் உண்மையான அன்புவைத்தலால் அன்றி வெறும் வக்கணையால் இன்பமில்லை என்பார் தாயுமான அடிகளார்.

வக்கணை தன் ஐகார விகுதியை விட்டு வக்கணம் என்றும் வருதலுண்டு.

வற்கண் > வற்கணி > வக்கணித்தல் ஆகி, வினைச்சொல் ஆவது,  ஒரு+கண்+இ > ஒருக்கணித்தல்  ( ஒருக்கணித்துப் படுத்துறங்கு )  என்பதுபோலும் சொல்லாக்கம்.

ஆணித்தரமாக ஒன்றை விளக்குதல் என்ற பொருளில்,  வன் + கண் + அம் > வற்கணமென்பது திரிந்து வக்கணம் என்றுமாகும் எனவும் அறிக.

இச்சொல் பல்வேறு புனைதிரிபுகளால் பல்வேறு பொருட்சாயல்கள் உடைத்தென்று அறிக.

புதன், 11 மார்ச், 2020

பேச்சில் வக்கணை.

கடிதத்தில் வக்கணையை முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.

https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_11.html


அதன் பொருத்தணை மேலே உள்ளது,  ( link )

பேசும்போது நேரிய முறையில் பேசாமல் வழுக்கலாகவும் தேவைக்கதிகமான முறையிலும் பொருத்தமின்றியும் சொற்களைப் பொழிவது வக்கணை. இது விளக்கம் தான்; வரையறவு அன்று.

வழுக்கலாகச் சொற்களைச் சேர்ப்பிப்பது அல்லது அணைப்பிப்பதுதான்  வழுக்கணை ஆதலின்

வழுக்கு + அணை =  வழுக்கணை

இது வக்கணை என்று ழுகரம் இடைக்குறைந்தது.

ழகர ஒற்றும் வருக்கமும் இடைக்குறைவது மிகுதி.

வழு + கண் =  வழுக்கண்,  வழுக்கண்+ அம் = வழுக்கணம்;  வழுக்கண்+ ஐ = வழுக்கணை, பின்  ுகரம் இடைக்குறை எனலும் இன்னொரு விளக்கம். எனினும் இதில் , அண் என்பதற்குக் கண் ( பொருள் :  இடம் ) மாற்று.

வழு -  குற்றம் ;  வழுக்கு என்பது வழு என்று வருவது மற்றொரு நோக்கில் கடைக்குறை.

வழுக்கு+ அண்
வழு + கண்.

வழு என்ற அடியில்‌  வினைச்சொற்கள்:

வழு > வழுவுதல்
வழு > வழுக்குதல்

ழுகரம் இடைக்குறைதல்:

வழுத்துதல்
வாழ்த்துதல்.
சிற்றூர்களில் முன் இதை வாத்துவது என்பர்.

வாழ்த்தியம்   வாழ்த்தி இசைக்கப்படும் இயம்.

வாத்தியம் ஆனது காண்க.

இவை திரிபுச் சொற்கள்.

இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல் என்று தொடங்கும் ஒரு
தொல்காப்பிய நூற்பா,  அதை மனப்பாடம் செய்யுங்கள்.  நூற்பா எண் மறதி.

வக்கணை -   புகழுரை பின் காண்போம்.

(இதிற் சில  தட்டச்சுப் பிறழ்ச்சிகள் சரிசெய்யப்பட்டன.  15.3.2020.
பின் மறு பார்வை பெறும்.)
Note:
We are in the fear of  grip of covid19 ( corona virus). But will try to function normally.  Flu is also in circulation.


கடிதத்தில் வக்கணை.

ஒரு கடிதம் எழுதினால் அது யாருக்காக எங்கு செல்வதற்காக எழுதப்படுகிறது என்பதைத் தெளிவாக எழுதவேண்டும்.  இல்லாவிட்டால் இதைச் சுமந்து சென்று கொடுப்பவன் யாரிடம் சேர்ப்பது என்று திணறுவான்.

கடிதத்தை இடைவருவோனிடமிருந்து பெற்றுக்கொள்பவனும் அது தனக்குத்தான் என்று  அறிந்துகொள்ள அதற்கான முன் அறிகுறிகளை அறிந்துதான்  அதைப் படிக்கத் தொடங்குவான்.


இவ்வாறு கடிதங்களை வகுத்து அணைப்பிக்க வேண்டும்.  அணைப்பித்தலாவது சேர்ப்பித்தல்.

அண்முதல் - நெருங்குதல். சேர்தல்.
அண்டுதல் -   அடுத்துச்செல்லுதல்.
அண்மை
அணிமை.
எனப் பல சொற்கள்.  இவற்றின் அடிச்சொல் அண் என்பது.

அண் >( அணு )> அணுகு > அணுகு(தல்).
அண் > அன் > அனு>  அனுப்பு > அனுப்பு(தல்)
அண் >  அணை > அணைதல்  ( கப்பல் துறையில் அணைதல் )

இவற்றில் சேர்தல் கருத்து,   தொடர்வதை அறிந்துகொள்ளுங்கள்.

வகுக்கும்  அணை.

மாட்சிமை  பொருந்திய மாமன்னரே!.

இது அணை வாக்கியம்.  அணைக்கும் வாக்கியம்.

வகுக்கு(ம்)  அணை>  வகுக்கணை > வக்கணை.

இடையில் கு என்ற எழுத்து மறைந்து இடைக்குறையானது.

வக்கணை என்பதற்கு வேறுபொருளும் உண்டு. இது பல்பொருளொரு சொல்.

பிற பொருள்  :  அவற்றை அடுத்தடுத்து அறிந்து மகிழ்வோம்.

வக்கணை = கடித முகப்புக் குறிப்புரைகள்.

சனி, 7 மார்ச், 2020

பைசா என்ற சொல்.

பைசா என்ற சொல் பாதம் + அம்சா  என்ற இருசொற்களின் இணைப்பு என்று கூறினாருளர். அப்புறம் பாதம் என்பதைக் கால் என்று பொருள்கூறினர்.  பாதம் கால் ஆனால், கால் என்பது நாலில் ஒருபகுதி என்றனர்.  ஆனால் கால் என்பது தமிழ்ச்சொல்.  நடக்கு காலும் கால்; நாலில் ஒன்றும் கால்தான்,

சிறிய மதிப்புள்ள சிறு காசுகளைப் பைக்குள் போட்டுப் பெட்டிக்குள் வைத்தனர்.   பெட்டி - கல்லாப்பெட்டி.

பைக்குள் வைக்க  (பை).  சாத்தி வைத்தபடியால்  (.சா)

ஓரிடத்தில் வைக்கப்பட்ட சிறு காசுகள்.   பை - சா.

பா (பாதம் ) அம்சா என்பதினும்  பெ (பெட்டி)  + சா ( சாத்திவை)  என்பது இன்னும் பொருத்தமாகும்.

பெ + சா > பை சா.   பெட்டிக்குள் சாத்திவைப்பது.  பெ  சா > பெய்சா > பைசா.
பை + சா > பைசா.   பைக்குள் இட்டுச் சாத்திவைப்பது. மற்ற மதிப்பு நாணயங்களுடன் கலக்காமல்.
பா + சா > பாசா.        பாதத்தின் அம்சம். பாதம் = கால்.  ஆக கால் மதிப்பு.  

பெட்டிக்குள் கண்டபடி கிடக்காமல் பைக்குள் இட்டுச் சாத்துவது பைசா.
பைக்காசு என்பதாம்.

காத்து வைப்பதே காசு. பெட்டி அல்லது பைக்குள் இடுவது காத்துவைப்பதே ஆகும். பைசா பல மதிப்பினது ஆதலின் கால் மதிப்பு என்பது முழுப்பொருள் தரவில்லை.

உருவம்  =    ரூபம்   > -  ரூபாய்.
அரசனின்  முகம்  அல்லது அரசினருடைய முத்திரை உடைய நாணயம்.

தட்டச்சு மறுபார்வை பின்.

துலாக்கோலும் தராசும்

அளந்து தருவதற்கான கருவிக்கு எப்படிப் பெயரிடுவது?

ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்தால் அது எந்த அளவினது என்று மதிப்பிடலாம்.  அதற்கு ஒரு பட்டறிவு வேண்டும். எனினும் அஃது ஒரு மதிப்பீடு மட்டுமே. அவ்வரிசியை ஓர் ஒப்பிடு கோலில் ஏற்றி அளந்து அறிந்தாலே அரிசியின் எடை தெரிகிறது. சோறு சமைக்கும்போது ஓர் அளவு குவளை வைத்துக்கொண்டு  " ஒரு குவளை, இரண்டு குவளை" என்று சமைப்பவர் அளந்து இடுவார். ஆனால் அது அளவுகருவியன்று. கோலின் ஒரு புறத்தில் ஓர் எடைக்கட்டியும் மற்றொரு புறத்தில் அரிசியையும் வைத்து நடுவிற் பிடித்துத் தூக்கி  அறியும் கோல் துலைக்கோல் அல்லது துலாக்கோல் எனப்பட்டது.  துலாக்கோல் உண்மையில் எடையைத் துலக்கும் ஒரு கோலே ஆகும்.

துலக்குகோல் > துலைக்கோல்.
துலக்குக்கோல் > துலாக்கோல்.

துலக்குதல் என்ற சொல்லில்  குகரம் ஒரு சொல்லாக்க விகுதி.  துல் + கு = துலக்கு.   மூழ் > மூழ்கு என்பதிற் கு என்பது வினையாக்க விகுதியானதுபோல் துலக்கு என்பதில் கு என்பதும் விகுதியே. இப்படி அமைந்த இன்னொரு சொல்: விளக்கு(தல்)  ஆகும்.   விள்> விள்ளுதல் ( வெளிப்படுத்தல்).   விள் > விள் + கு = விளக்கு.  விளக்கு என்பதில் விள் - பகுதி. அ - இடைநிலை.   க் என்றுவந்தது சந்தி அல்லது புணர்ச்சி.   கு என்றது விகுதி. துலக்கு என்பதும் அன்னதே.

துலக்குதல் : பல் துலக்குதல் என்பதிலும் அதே சொல் வருகிறது.

எளிதில் அறிய இயலாத ஒன்றை ஒப்பீடு மூலம் அறியலாம்.

சமன்செய்து சீர் தூக்கும் கோல் என்றும் விளக்குவதுண்டு.

அரிசி போலும் அளக்கப்படும் பொருளைப் பிறனுக்கு விற்பதற்கு அல்லது பண்டமாற்றாய்த் தருவதற்கு (  " தரு " )     ஆகும் கோல்  ( "ஆசு" )   தராசு எனப்பட்டது. 

தருதலுக்கு   ஆகும் ஒப்பிடுகருவி.
தரு +  ஆ + சு (விகுதி).
தரு என்பது வினைச்சொல்.  ஆ என்பதும் வினைச்சொல்.  சு என்பது விகுதி.
தராசு.
ஆசு - பற்றுக்கோடு.  ( பற்றிக்கொள்ளுதல்).  தருதற்கு பற்றுக்கோடு ஆகும் கருவி எனலுமாம்.

தர+ ஆசு =  தராசு எனினுமது.


சு விகுதிச் சொற்கள்:   பரிசு.   விழைச்சு.
சு விகுதி இடையிலும் வந்து வேறு விகுதி ஏறும்.   அலை > அலை+ சு + அல் = அலைச்சல்.  இதேபோல் விளைச்சல். குடைச்சல்.  நமைச்சல்.

நீர்ப்பாசனம் என்ற   கூட்டுச்சொல்லில்  பாய் + சு + அன் + அம் >  பா(ய்)சனம் > பாசனம்.  நீர் பாய்ச்சுதல். யகர ஒற்று மறைவு.

யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:  வாய் + தி >  வாய்த்தி > வாத்தி(யார்).  வாய்ப்பாடம் சொல்பவர்.

பாய் > பாய்ம்பு > பாம்பு.  யகர ஒற்று மறைந்தது.   (முனைவர் மு வரதராசனார்.)

இவற்றை அறிக. மகிழ்க.



வெள்ளி, 6 மார்ச், 2020

தொம் > தொந்தி

தொங்கு என்ற சொல்லில் தொம் என்பதே அடிச்சொல்.

தொம் + கு =  தொங்கு.

தொங்கு(தல்) வினைச்சொல்.   தல் என்னும் விகுதி பெற்றால் விகுதி ஒழிய முன்னிற்பது வினை. வினை என்பது செய்கை. தொங்குதல் என்பது வினைக்குப் பெயராகிறது, இதனைத் தொழிற்பெயர் என்று இலக்கணியர் சொல்வர்.

தொம்பல்

இது தொம் > தொம்(பு + அல்) = தொம்பல்   ஆனது.  பு  மற்றும் அல் என்பன விகுதிகள்.  இரு விகுதிகள் பெற்ற சொல் இதுவாகும்.  கலப்பையில் தொங்கிக்கொண்டிருக்கும் ( ஒட்டியிருக்கும்) மண் அல்லது சேறு.

(சேர்ந்துகொண்டிருப்பது சேர் > சேறு.   ( இது வீர் > வீறு போன்றமைந்த சொல்). வைரஸ் என்ற சொல்லின் அடியும் இதுவாகும். விரைவு என்பது ஓர் உள்ளாற்றலால் முடுகி அல்லது விரைந்து சென்றடைதலைக் குறிக்கும்.

இதைப்பின் தனியாக விளக்குவோம்.  இங்கு    விர் > வீறு என்பதை மட்டும் ஒப்பிட்டுக் கொள்க.) 

தொம் > தொம்பு > தொப்பு

தொப்பு தொப்பு என்று நனைந்துவிட்டோம் என்பது காண்க

தொப்பு - துணி நனைந்து தொங்கும்படியாக


தொப்பு > தொப்பை
தொப்பு > தொப்பி.  ஒரு நடுப்பகுதி வெளிவந்த தலையணி.
தொப்பு > தொப்பூழ்.

தொம் என்பதற்கு தொ என்பது அடிச்சொல்.  ஆகவே மூலம்.

தொ >  தொடு,   ப > படு  போல. இதைத் தனியாக விளக்கவேண்டும். தொடும்போது உங்கள் கை இருக்குமிடத்திலிருந்து நீட்டப்பெற்று எதையும் தொடுகிறது.  நீள்வது வெளிவருவதே போன்றது. இருக்குமிடம் விட்டு வெளிவருவது.

தொடு > தொடை.

உடலைவிட்டு நீண்டு கீழாக  வெளிவந்தது.


தொம் > தொம்தரவு. > தொந்தரவு.  ( விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதுபோல ஒன்றைச் செய்து வருத்துவது ),


தொந்தி   ( தொம் தி )   -  வெளித்தள்ளித் தொங்குவயிறு.


விளக்கும்பொருட்டு ஒன்றை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களால் சொல்லநேரும்.  வெளித்தள்ளுதல் தொங்குதல் எல்லாம் அதே.

தொம்பைக்கூத்து, தொம்பைநாற்று  இவை கூட்டுச்சொற்கள்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.

செவ்வாய், 3 மார்ச், 2020

கபிலர் என்னும் புலவர்பெயர்.

எப்பொருளாயினும் அதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதற்கு ஒரு திடமான மனம் வேண்டும்.   ஒளிவு மறைவு என்பதற்கு மற்றொரு சொல் "கட்பு"  என்பதாகும்.

கட்பு என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை முதலில் பார்க்கலாம்,

கள்ளம் என்ற சொல் எதையும் ஒளிப்பதையும் பொய்மையையும் குறிக்கும்.  கள்ளர் என்பது திருடர் என்றும் பொருள்படுவது.  இச்சொல் கருப்புநிறத்தவர் என்றும் பொருள்தரும்.  கள்ளி என்பது திருடி அல்லது மறைத்தவள் என்றும் குறிப்பதுடன் கள்ளிச்செடி, கள்ளிப்பலகை முதலியவையையும் குறிக்கும். இவற்றின் அடிச்சொல் கள் என்பதுதான்.  கள் ஒரு குடிதேறலையும் குறிக்கும்.

கள் என்பது அடிச்சொல் என்றோம்.  இச்சொல்லுடன் ஒரு "பு" விகுதியைச் சேர்த்தால்  கள்+பு =  கட்பு என்ற சொல் உருவாகின்றது.

ஒளிவு மறைவோ அல்லது தீய  பண்புகளோ இல்லாதவர்,  அல்லது எதையும் வெளிப்படையாக அணுகி ஆய்பவர்  என்று பொருள்தரும் ஒரு பெயரை அமைப்பதற்கு:

கட்பு + இலர்  =  கட்பிலர் என்ற சொல் அமையும்.

இச்சொல் மெய் நீக்கப்பட்டால்  அல்லது நாளடைவில் இடைக்குறைந்தால்

கபிலர் என்றாகிவிடும்.

கபிலர் என்ற சொல்லுக்குத் தமிழிலும் சங்கதத்திலும் வேறு பொருள்பல கூறலாம் எனினும் அவற்றை இன்னோர் இடுகையில் காணலாம்.

இடைக்குறைச்சொற்கள் பல ஆய்ந்து முன் கூறியுள்ளோம். பழைய இடுகைகள் காண்க.   நகுலன் என்ற பெயரும் நற்குலன் என்ற சொல்லின் இடைக்குறையாகி நற்பொருளே தரும். வல்லவர் என்ற சொல்லும் வலவர் என்று வருமே. பல்லோர் என்பதும் அர் விகுதி ஏற்குங்கால் பலர் என வருதல் கண்கூடன்றோ? இவையனைத்தும் நீங்கள் ஒப்பிட்டு அறிதற்கானவை.

இதைக் கபி -  குரங்கு  என்று பொருள்படும் சொல்லினடித் தோன்றியதாகக் கொண்டு பொருளுரைப்பாருமுண்டு.   அதையும் பின் காண்போம்,

கபிலர் என்ற பெயருள்ள புலவர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்.    சங்கப்புலவர் கபிலர் என்பவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய "குறிஞ்சிப்பாட்டு" பாடியுள்ளமையால் இப்பெயர் முதன்மை பெறுவதாகிறது.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஆசிரமம் சொல்லில் இரட்டை விகுதி

ஆசு என்னும் சொல் பயின்று அமைந்த பல சொற்களை அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளோம்.  இந்தச் சொல் ஆதல் (ஆகுதல் ) என்ற வினையின் அடிப்படையில் அமைந்ததாகும்.

சு விகுதி வந்த சில சொற்களை இப்போது நினைவுகூர்தல் நலமாகும்.  பரிதல் என்பது அன்பு காட்டுதல் என்றும் பொருள்தரும். பரிவு, பரிந்துரை முதலிய சொற்களில் வரும் பரி என்னும் சொல்லை நீங்கள் மறந்திருத்தல் எவ்வாறு?
பரிசு என்ற சு விகுதி பெற்ற சொல்லும் பரிதல் வினையடிப்படையில் உண்டானதே.

சிசு என்ற சொல் தமிழ்ப் பேச்சு வழக்கில் உள்ள சிறுசு என்பதன் றுகரம் வீழ்ந்த இடைக்குறைச்சொல். சிலர் சிறிசு என்றும் சொல்வதுண்டு.


விகுதி என்பதற்கு இறுதிநிலை என்றும் சொல்வர்.  சொல்லை மிகுத்துப் பொருளைப் பெருக்கிக் காட்டுவதே  விகுதி.   மிகுதி - விகுதி : இதில் மி - வி போலி இருத்தலை உணரலாம்.  மிஞ்சு - விஞ்சு : போலியே இதுவும். மிகுதி என்ற சொல் பொதுப்பொருளில் வர, விகுதி என்பது சொல்லின் நீட்டத்துக்கு மட்டும் வழங்குவதாயிற்று.

இன்னொரு சு விகுதிச் சொல்:  காசு என்பது.   மனிதன் காத்துப் போற்றிப் பயன்பெறுவதனால்  கா(த்தல்) >  காசு ஆயிற்று.  சற்றுக் கரிய நிறம் குறிக்கும் மா என்ற சொல்லினின்று மா+சு  ( மாசு) என்ற சொல்லும் அமைந்தது காணலாம்.  " ு " வினையாக்க விகுதியாகவும் வரும்,  எடுத்துக்காட்டு:  கூசு (கூசுதல்),  பேசு  ( பேசுதல் ).

ஆசு  என்ற சொல் உள்ளமைந்த சொற்கள் பல. இதற்குப் பற்றுக்கோடு என்றும் பொருள். ஆசு எனின் பற்றிக்கொள்ளுதல் ஆகும்.

ஆசு + இரு + அம் + அம்.  =  ஆசிரமம்.

ஆசு -  இரு என்பவற்றின் ஈற்று உகரங்கள் கெட்டன.

இச்சொல் இரண்டு அம்  ஈற்றில் வந்து முற்றிற்று..  இடையில் உள்ள அம்  என்பதைச சொல்லாக்க இடைநிலை என்றும் சொல்லலாம். அன்றி, இரட்டை விகுதி எனினும் பேதமில்லை.

யாரும் பற்றி(க்கொண்டு)  இருக்கும் இடமே ஆசிரமம்.   அனாதை ஆசிரமம் என்பது காண்க.

இவ்வழக்குச் சொல் பிறமொழிகளிலும் வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.

சொல்லவும் எழுதவும் பல உண்டு எனினும் சுருங்கச் சொல்லி முடித்தல் கருதி நிறுத்துவோம். அறிக மகிழ்க.

தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

மகுடமுகித் தொற்று (கொரனாவைரஸ்)

2003 வாக்கில் saars என்னும் பெயரிய சளி மூச்சுத்திணறல்
நோய்நுண்மம் பரவியது.  ஏறத்தாழ் 8000
மக்கள் பாதிப்பு உற்றனர்.  பாவம் 774 பேர் இறந்தனர். அதனினும்
மிக்க பாதிப்பே மீண்டும் மகுடமுகி 1 நோய்நுண்மிகளால் இன்றும்
வந்துள்ளது. பாதிப்பு இப்போது கடுமையானது: 78000+  பேர்
நோய்வாய்ப் பட்டுள்ளனர்.

வரலாற்றில் வந்ததுவே மீண்டும் வந்தது. அந்த உண்மையை
இந்தச் சில வரிகள் தெரிவிக்கின்றன.



வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;
வாழ்க்கையிலே தோன்றியதே தோன்றும் யாண்டும்;


உரலுற்ற நெல்லதுவே பொருளாம் பின்னும்
உலகியலில் உண்மையிதே உணர்வீர் உள்ளீர்
 

விரலுற்ற புண்ணிடமே புண்ணாம் இன்னும்:
வேறுபடல் அrரிதென்பார்   விரிவ றிந்தோர். 


குறிப்புகள் History repeats itself

( a saying in English )


1  மற்ற பெயர்கள்:  முடியுருவினி,  மகுடத்தோற்றினி

2 சிங்கப்பூரிலும் தொற்றியுள்ளது.  ஆனால் பெரும்பாலும்
வெளியார் ஆவர்.

அரும்பொருள்

யாண்டும் -  எப்போதும்.
உரலுற்ற - உரலில் குத்துவதற்கு இட்ட
பொருளாம் மீண்டும் -  குத்துதலுக்குப் பொருளாகும் இன்னொரு
முறையும்.
உலகியலில் - உலக நடப்பில்
உள்ளீர் - மக்களே
விரலுற்ற - விரலில் பட்ட
புண்ணிடமே - புண் பட்ட இடமே
புண்ணாம் இன்னும் - மீண்டும் காயப்பட்டுப் புண்ணாகும்
வேறுபடல் -  மாறிவருதல்
அரிது - மிகக் குறைவு
விரிவு - விளக்கம்.

மாற்றி வாசிப்பு:

வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;  என்பதை
வருமே மீண்டும்  வரலாற்றில் வந்ததுவே  என்று மாற்றியும்
இப்படியே ஆறு வரிகளையும் மாற்றி வாசித்தாலும்
பொருள்மாறாமல் வேறு சந்தம் தரும் வரிகள் இவை.






வியாழன், 20 பிப்ரவரி, 2020

முடியுருவினி ( கொரனா வைரஸ்)

கொரனா வைரஸ் பற்றி எழுதவேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் அவ்வப்போது சில கவிதை வரிகள் தலைக்குள்ளும் இதழ்களிலும் தவழ்ந்து வெளிவரும்.  வசதியான சமயங்களில் எழுதிவைப்பேம். நள்ளிரவின்பின் உறக்கத்தின்போது வரிகள் சொரிவுறுமாயின் அவை விழித்தபின் பெரும்பாலும் நிலைத்திருப்பதில்லை.  அப்படி வந்து உறுத்திய வரிகளில் ஒரு பா இங்கு இடம்பெறுகிறது.

கொரனா  வைரஸ் என்பதைத் தமிழாக்கவேண்டும்,  காரணம் அது கவிதைக்குள் வருகிறபடியினால்.  தமிழ்க் கவியில் பிற மொழிச்சொற்களைப் பெய்து வரைதல் மரபு அன்று,  ஆதலினால்.

அதற்காக யாம் ஆக்கிக்கொண்ட சொல்தான் முடியுருவினி என்பது. முடி அல்லது மணிமுடி போலும் உருவினதாதலின்  "முடியுருவினி" என்றே இவண் வருகிறது.  மகுடமுகி என்றும் சுட்டியிருக்கலாம். மகுடத்தோற்றினி என்றும் இருக்கலாம். இவை பாடலுக்குள் பொருந்தாமை சொல்லாமற் புரிவது.

கவிதை:

முடியுருவினி நோய்நுண்மி அடியெடுத்து வைத்து
கடிநகரிது சிங்கைக்குள் வருதலுக்கென் துணிவே?

உலகிதனிலே தூய்மைக்குப் பெயர்பெறும்அம் மட்டோ?
உடல்நலத் துறை  ஓங்கிற்றே ஒருநகரும் நிகரோ?

பலசாதனைகள் பெற்றிட்டும் ஒருசோதனைமுகர் வைக்க
நிலமகள்தான் இசைவுறுதல்  நிகழாதென்(று) இனி உழைப்பீர். 

அருஞ்சொல்லுரை:

முடியுருவினி = கொரனாவைரஸ்
நோய்நுண்மி  -  வைரஸ்
கடிநகர் -  காவல்மிக்க நகரம்
வருதலுக்கென் -  வருவதற்கென்ன
அம்மட்டோ -  அதுமட்டுமோ
உடல் நலத்துறை =  சுகாதாரத் துறை
முகர்+ =  ( தோல்வி என்று ) முத்திரையிட
முகர ( தோல்வியின் வீச்சினை முகர்ந்து (மோந்துபார்க்க)
என்பதும் பொருந்துமாயினும் சிறப்பில்லை என்று தோன்றுகிறது.

தாழிசை
நிகழாதுழைப் பாயே என்று முடித்தலுமாம். 
 



திங்கள், 17 பிப்ரவரி, 2020

அலாதி

அலாதி என்று நாம் பேச்சில் எதிர்கொள்ளும் சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

அல்லாதன,  அல்லாதவை என்பன அலாதன  அலாதவை என்று கவிதைகளில் தொகுந்து வருதலை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இடையில் லகர ஒற்று மறைவு.

அல் :  அன்மை குறிக்கும் அடிச்சொல்.    அல்+ மை =  அன்மை.
ஆதி :  முன் அல்லது ஆக்க நாட்களில் உள்ளது. தொடக்ககாலத்தது.

ஆதல் : உண்டாகுதல்.  ஆதல் என்பது   ஆ >  ஆகு > ஆகுதல் என்றும் வரும்.  வே > வேகு > வேகுதல் போல.  வே > வேக்காளம்.  வே> வேது > வேதுபிடித்தல்.   வே> வெயில் ( முதனிலைக் குறுக்கம்).

அல் ஆதி > அலாதி என்றால் முன்னில்லாதது. முன் காலத்தில் இல்லாதது. முன்னது அல்லாத ஒன்று.

முன் அதுபோல் இல்லாததென்றால்  அது தனித்தது என்று பொருள்.

அலாதி மகிழ்ச்சி என்றால்  முன் அறிந்திராத மகிழ்ச்சி.

அலாதி என்பதில்  லகர ஒற்று இரட்டிக்கவில்லை.  அல்லாதி என்று சொல்லக்கூடாது.   அலாதி  தான்.

அனாதை என்ற சொல்லில்  அல் என்பது அன் என்று திரிந்தது.  ஆதி + ஐ என்பது  ஈற்று இகரமிழந்து     ஆத் + ஐ  என நின்று ஆதை ஆனது.  ஆகவே அனாதை முன்வரலாறு அல்லது முன்னோர் யாரும் அறியப்படாதவன். இது பெண்பாலுக்கும் ஆகும்.

அன் + ஆதி=  அனாதி.   ஆதியற்றோன். கடவுள்.  நாதி என்பது   அகரமிழந்து நாதி என்றொரு சொல் அமைந்தது. இது பிறழ்பிரிப்புச் சொல்.

அறிவோம் மகிழ்வோம்,

பிழைத்திருத்தம் பின்.

சனி, 15 பிப்ரவரி, 2020

மகுடியும் அதை ஊதுதலும்.

இன்று மகுடி என்ற சொல்லை அறிவோம்.

பாம்புக்கு மகுடி ஊதியவுடன் அது இசைக்கேற்ப ஆடத் தொடங்கிவிடுகிறது என்று சொல்வர்.  ஓசையின் எழுச்சியைப் பாம்பு உணர்ந்தாலும் இசையை நுகர அதற்குச் செவி தனியாக அமையவில்லை என்பர்.  கண்ணும் செவியும் ஒன்றாக உள்ளமையின் பாம்புக்குக் " கட்செவி" என்ற பெயரும் உள்ளது.

எனினும் நம் கவிஞர் பெருமக்கள் இசை கேட்டு நாகம் ஆடுவதாகச் சொல்வர். உடுமலை நாராயணக் கவிராயரின் " இசைக்கலையே இனிதாமே" என்ற பாடலில் இசைகேட்டு பொல்லாத நாகமும்  ஆடுமென்பார்.  இசையின் மேன்மையை உணர்விக்க இவ்வாறு கூறுவர்.

மகுடி என்ற சொல் மகுடம் என்ற சொல்லினின்று திரித்து எடுக்கப்பெற்றது ஆகும்.  மகுடியிலும் ஒரு சிறு குடம்போன்ற உறுப்பு குழாயில் உள்ளது காணலாம்.

மகுடம் என்ற சொல்லின் அமைப்பு ஈண்டு காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_11.html

மகுடி என்றால் மகுடத்தை உடைய ஊதுகுழாய் என்று பொருள்.

மகுடி என்ற சொல் மோடி என்றும் திரியும்.

தேடி வந்தேனே புள்ளி மானே
மோடி செய்யலாமோ என் தேனே தானே

என்பது பழைய நாடகப் பாட்டு.

மகுடாதிபதி என்ற கூட்டுச்சொல்லும் உள்ளது.

அறிந்தின்புறுக.

எழுத்துத் திரிபுகள் ( பிழைகள் ) புகின் திருத்தம் பின்.

 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மகுடம் வந்தது சிற்றூர்ப் பேச்சிலிருந்து.


மகுடம் காத்தவர் என் மணாளர் என்றால் கொஞ்சம் ோனைகள் வந்து வாக்கியம் அழகுடன் தொனிக்கிறது. மகுடம் என்ற சொல் எவ்வாறு விளைந்தது என்பதை நாம் அறிவோம்.

ஒரு குடம் போல் இல்லாமல் சற்றே வேலைப்பாடுகளுடன் பொன்னும் மணியும் பதித்துத் தலையில் வைத்துக்கொண்டாலே அரசன் மணிமுடி தரித்திருக்கிறான் என்று மக்கள் உயர்த்திப் போற்றுவர். இப்படிப் போற்றாமல் திமிருடன் : என்ன தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வருகிறான் என்று எவனாவது வாயில் காப்பவன் பேசினால் அவன் தலைபோய்விடும். மகுடத்துக்குப் போட்டி போடுகிறவன், “ முடியா சூடிவிட்டான் இவன்? இவன் தலையில் வைத்திருக்கும் குடத்தை இறக்கி அதை உடைத்துக்காட்டுகிறேன்" என்று கொக்கரித்தால் அதைக் கேட்போர் அரச பதவிக்குப் போட்டி உள்ளது என்று பேசிக்கொள்வார்கள். அரச முடிசூட்டுக்களின் போது இவ்வாறெல்லாம் உரையாட்டுகள் பண்டைக் காலங்களில் நடந்திருக்கலாம்; ஆனால் அப்போது நாம் அங்கில்லை ஆதலால் நாம் அதை இப்போது கற்பனைக் கண்கொண்டே பார்க்கவியலும்.

ஆனால் மகுடம் என்பது மண்டைக்குடம் என்பதன் குறுக்கம்தான். இதைப் புனைந்து அல்லது  பொறுக்கி எடுத்துச் சுருக்கித் தந்தவன் அறிவாளி.

மண்டைக்குடம் > (ண்டைக்)குடம் > மகுடம். இடைக்குறை.

இரண்டு மூன்று எழுத்துக்களை மாற்றியவுடன் சொல்லுக்கு மவுசு வந்துவிட்டாது. மா + பூசு > மா +( ப் )> ஊசு> மாவூசு > மவுசு. ( அழகுறுத்தல் ). மா என்பது ம என்று குறுகிற்று. ப் என்ற எழுத்தை எடுத்துவிட்டபின் நெடில்கள் குறுக்கம் பெற்றன.
 

அல்லது 

மாவு பூசு >  மாவுசு  > மவுசு.  
மா என்பது குறுகிற்று.
பூ என்பது வெட்டுண்டது.

மகுடம்:

தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் என்ற சிற்றூர் நையாண்டிப் பேச்சிலிருந்து வந்தது.

மாவுபூசிய சொற்கள் பற்பல.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனமுறும்.

குறிப்பு
மோனைகள் - முழு  வாக்கிய த் தில் எதுகைகள் உள்ளன. அவை விடப்பட்டன.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

நானே பேரரசி.....ஊர்பார்க்க...

 








உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து

தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த

சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட

ஒருநகர் முற்றும் வசம்'


தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி

இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்

செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்

கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.

உந்துவண்டி  -   ( கார்).

சிறுநகை -  புன்னகை

சுட்ட - காட்ட  (சுட்டிக்காட்ட)

நன்கு நோக்கா  -  நல்லபடி பார்க்காத

செல்வார் -  கடந்து போகிறவர்

வருவார் -  (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)

வருபவர்

கையசைக்க - (குழந்தையைக் கண்டு)  தம் 

கரங்களை  ஆட்ட 

மெல் - மென்மையான

என் பால்  -  என் மேல்

வாஞ்சை -  அன்பு


எங்கள் பதிவில் தலைப்பில்  ஊர்பார்க்க என்பது  மேலேற்றுத்

திரையில் உர் பார்க்க என்று தெரிகிறது. இதைச் 

சரிசெய்ய முடியவில்லை.





வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தொற்றுநோய்ப் பேரிடர்

தொற்றுநோய் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது.  அது பற்றி இம்மாதத் தொடக்கத்தில் யாமெழுதிய ஒரு கவிதை.

வீட்டி லடங்கிக் கிடமகனே மீ'றிடிலோ
மாட்டிக் கொளநேரும் நோய்த்தொற்றில் ---- மூட்டெளிதே
ஊகான் குறுங்குறுமி ஓங்கிற் றுலகெல்லாம்
வாகாரும் வாழ்வை உக.

மூட்டு எளிதே --  நோயணுக்கள் காய்ச்சல் முதலியவற்றை
மூட்டுதல் எளிதாகும்.
குறுங்குறுமி    --சிறிதான கிருமி.

ஊகான் - சீனாவில் நோய் தொடங்கிய இடம்.
வாகாரும் -  அழகான.
உக - விரும்பு.

புதன், 5 பிப்ரவரி, 2020

எமனாவது எருமைக் கடாவாவது?

எமன் என்ற கருத்தை  ஏளனத்துடன் எடு த்தெறிவோர்  உள்ளனர்.  மக்கள் அனைவரும்  எதையும் ஒருவரேபோல் கருதுவாரில்லை.  ஆகையால் வேறுபடச் சிந்திப்பார்  வாழ்க -, இனி தாக.

ஆனால் எமன் என்ற சொல்  தமிழ்ச் சொல்லே ஆகும். எகர த் தொடக்கத்துச் சொற்கள் யகர வருக்கத்துச் சொற்களாகத் திரிபு அடைதல் ஐயமின்றி நிறுவ ப்படும். எடுததுக் காட்டாக எவர் என்பது யார் என்பதனுடன்
தொடர்புற்ற சொல்லே ஆகும்.  ஆர் > யார் நேரடித் திரிபாகும்.  எமன் >. யமன்  > இயமன் என்று அவை வந்தன.

எமன் எனற சொல் எம்+ அன் என்று பிரியும். நோய் என்பது  உடலிற் பிறப்பது ஆகும். "உடன் பிறந்தே கொல்லும் வியாதி " என்றார் ஒளவைப் பாட்டி.  எப்போது மனிதன் பிறந்தானோ அப்போதே நோயும் கூடப்பிறந்துவிட்டது.  அது முற்றி வெளிப்படக் காலம் எடுத்துக் கொள்ளும்.  அவ்வளவு தான். அது உம்முடைய உரிமைகளில் ஒன்றாவது நிலையினதாகும். கிருமி யென்னும் குறுமியினால் வெளிப்பிணிப்பு ஆயினும் அது உம்முடையதே.  இதை உணர்ந்த பண்டை த் தமிழன் அதை "எமன்"எ‌ன்று ஒத்துக்கொண்டான்.  உருவகம் செய்து " எம்மவன்"  என்றான்.

எருமை,   தூய்மை அற்ற  -  பிற அணியிலுள்ள புற அணியினதான   -  'பிராணி". பல நோய்கள்  தூய்மை இன்மையால் வருதலின் எருமை வாகனம் என்றது மிக்கப் பொருத்தம்.

எத்தகைய வலிமையோனும் சுருண்டு விழுந்து இறந்தால் எமனுக்குக் கடவுள் தன்மை உண்டாகிவிடும். இது மாந்த வரலாற்றுக்குப் பொருந்துவதே.

ஆதலின் எமன் என்றது இந்தக் கொலைவழிகட்கு ஆன மொத்தக் குறிப்பையே ஆமென்று கொள்க.

எமன் என்று எம் என்னும் சொல்லுடன் ஒன்றித்தபடியால் மரணம் விளைவித்த எதையும் அவர்கள் தம்மின் வேறாகக் கருதவில்லை என்று உணர்வீர், மகிழ்வீர். எமன் என்பது உடனுறைவு குறித்து வாழ்வியலை விளக்கவல்ல சொல். இறைவன் தன்னுள் என்னும் கருத்தினுக்கும் இது புறம்பானதன்று என்க.

தட்டச்சு எழுத்துப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.



செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கிருமியும் குறுமியும்.

கிருமி என்னும் சொல்லுக்கு  ஆங்கிலத்தில்  உள்ள "ஜெர்ம்ஸ்" என்ற சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காண்பதற்கில்லை. பூச்சி புழு  என்ற பொருள்தான் காணக்கிடைக்கும். வேறு வழக்குச் சொல் இன்மையால் மக்கள் கிருமி என்றும் சொல்வர். ( பாக்டீரியா, வைரஸ் என்பார் ஆங்கில அறிவுடையார்).

கிருமி என்பது உண்மையில் "கருப்பான து " என்னும் பொருளது ஆகும்.   எப்படி என்றால்  கரிய   பக்கம் என்று பொருள்படும் "கிருஷ்ண பட்சம்" என்ற அயல் திரிபினில் கரு எனற்பாலது  கிரு என்று வந்திருப்பதுதான்.  கிருட்ணனும் கரி‌யோனே ஆவான்.  வானும் கருமையே ஆகும்.

கிருமி என்ற சொல் பழைய சங்கத அகராதிகளிற் காணப்படவில்லை. புதியவெளியீடுகளை யாம் ஆய்வு செய்யவில்லை. நீங்கள் தேடிப்பாருங்கள்.

கிருமி என்பது கரும்புழு என்று பொருளறியக் கூடியதாய் இருப்பதால்,  கருமைக்குத் தீமை என்னும் பொருள் பெறப்படுதல் ஏற்புடைத்தாகும்.
{" He is the black sheep in the family "என்ற வாக்கியத்தை நோக்குக.  English  idiomatic phrase. )

ஆனால் நோயணுக்கள் அல்லது நோய்நுண்மங்கள்  மிக்கச் சிறியனவாதலின், இச்சிறுமைக்கருத்து இச்சொல்லினில் இல்லாமை வேறு ஏற்புடைய பதங்களை தேடுதற்கு உந்தக் கூடும்.  நோயணு என்பதும் நோய்நுண்மம் என்பதும் உதவக்கூடும்.

கிருமி என்பதினும்  "குறுமை"க் கருத்து வெளிவருமாறு குறுமி என்று கூறுதல் பொருத்தமாகும்.  இனிக் குறுமையிலும் குறுமை உடைய சிற்றுயிராதலின் அல்லது நுண்மம் ஆதலின்,   குறுக்குறுமி என்று விரித்தல் இன்னும் நன்று. (கு
றுங்குறுமி எனினுமது).  இனிக் குறுக்குறுமியைக் குறுக்குவோம்.  றுகரத்தைக் களைந்துவிடில் குக்குறுமி ஆகிவிடும்.    கிருமி அல்லது "ஜெர்ம்ஸ்" என்பதற்கு குக்குறுமி என்பது நன்றாகவுள்ளதா?

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல் "குக்கிராமம்" என்பது. இது:

" குறுக்கு+ இரு+ ஆகும்+ அம்"
=  குறுக்கிராமம்". இதில் று விலக்க,
= குக்கிராமம்.

ஆகிவிடுகிறது

குறுக்கமாக அமைந்து குடியிருப்பதற்கான இடம் என்பதுதான் குக்கிராமம் என்பதன் அமைப்புப்பொருள். அமைப்பைக் குறிக்க எழுங்கால் " அம்" விகுதி பொருத்தமானது.  அம் > அமை.

. மிக்கச் சிறிய ஊர் என்பது பொருள்.

குறுக்குதல் என்பது குறுகக் கட்டப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட  ( சிற்றூர்) என்பது.

இடையில் றுகரம் வீழ்தல் சில சொற்களில் நிகழ்ந்துள்ளது.

எ-டு:

சக்கரம் - இது சறுக்கரம் என்பதன் இடைக்குறை.  உருளும் சக்கரம் அமையுமுன் பெரும்பாலும் சறுக்கிச் சென்றவை ஊர்திகள். ஆகவே சறுக்கி இலக்கை அடைந்தன. அல்லது தூக்கிச் செல்லப்பட்டன.   ஆள் இல்லாவிட்டால் சறுக்கலில் விடுதலே சேரிடத்தை அடைய உதவும்.  இதற்கு நிலம் தாழ்ந்துசெல்லவேண்டும். (  இறக்கம்).

இரு அமுக்குருளைகட்கு இடையில் கரும்பை அல்லது வேறு இனிப்பு விளைபொருளை சறுக்கிச் செல்ல விட்டுச் சாறு பிழிந்து அதனைக் காய்ச்சிச் செய்வது  சறுக்கரை.  ( சறுக்கி அரைத்து எடுக்கப்பட்டது ).  சறுக்கரை > சக்கரை  < > சர்க்கரை. இதிலும் றுகர ருகரங்கள் கெடும்.

சறுக்குமரம், சறுக்குக்கட்டை முதலிய வழக்குச்சொற்களும் உள.


மலைகள் குன்றுகளில் சறுக்கி இறங்குதல் நிகழும். மேலேறுகையில் தூக்குவது கடினம். ஆகவே உருளுறுப்பு தேவையாயிற்று.  இதுபின் ஏற இறங்க உதவிற்று.

உருள்+ ஓடு + ஐ = உருளோடை > ரோடை > ரோடா என்பதும் காண்க..

உருள் >  ரு.
ஓடு > ஓடு
ஆ >  ஆ.

ரோடை > ரோதை.

எனவே கிருமிக்குக் குறுமி, குக்குறுமி என்பனவும் கருதத்தக்கவை ஆகும்.

அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் பார்வைக்கு.

சனி, 1 பிப்ரவரி, 2020

அறிவியல் வளர்ச்சியும் நோய்களும்

அறிவியல் முன்னேற நோய்கள் அனை த்தும்
முறிவுறும்  என்றே  முகில்மேல்  ---  பறலானேன்;
கண்டதோ நோயாற் கவிழ்வதாய்;  கார்மழையோ
அண்டுமோ நம்மை நலம் ?

முறிவுறும் -  தீர்ந்துவிடும்
முகில்மேல் -  மேகத்தில்
பறல் -  பறவை;  பற + அல் =  பறல். (அகரம் கெட்டது.)
(பறந்தேன்)
கார்மழையோ -  துன்பகாலமோ
நலம் அண்டுமோ  - நோய்கள் நீங்குமோ நலம் வருமோ என்றபடி.

வியாழன், 30 ஜனவரி, 2020

நித்தம் > நித்தல் > நிச்சம்.

நித்தம்நித்தம்  என் சிங்காரச் செல்வத்துக்கு
முத்தமொன்று தந்துமகிழ்வேன்---- உன்
அத்தை வருவாள் மெத்தையி லிருந்துனை
மெல்லவே அள்ளியணைப்பாள்


என்று ஒரு கவிதையன்று,   ஒரு கவிதைபோலும் வாக்கியத்தைப் படைப்போமானால் அதில் நித்தம் என்ற சொல் கேட்க நன்றாகவே இருக்கும். நித்தம் என்பது எப்படி அமைந்த சொல்?


மாற்றம் ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் இருக்குமானால் அதை நித்தம் உள்ளதெனலாம்.. அது ஓடிவிடவில்லை. என்றும் நின்று நிலவுகிறது. நிலவுதல் என்ற சொல்லிலும் நில் என்பதே அடி.  நிறுத்து என்பதிலும் அதுவே ஆகும் அடிச்சொல்.  நில்> நிறு > நிறுத்து.  நில்> நிலை (  நில் + ஐ = நிலை.)..நில்+ ஐ + அம் = நிலையம்.

நில் என்ற அடியிற் பிறந்த சொற்கள் பற்பல. வேறுவகையில் சொல்வதானால் அனந்தம்.  என்ன அனந்தம்?   அன் + அந்தம்:  அதாவது அந்தம் / முடிவு இல்லாதவை.  அல்> அன்.  முடிவு இருந்தாலும் கற்பனையிற் பறந்து முடிவற்றதாக மிகுத்துச் சொல்வதுண்டு.   நிற்க.

நில் + தல் - நிற்றல்.  நில் + தம் > நிற்றம்.   நித்தம்.  ற்று > த்து என்று பேச்சு மொழியில் மாறும்.         நில் > நிற்று > நித்து > நித்து + இ + அம் = நித்தியம். ( நிற்பது,  மாறாதது. ) இவ்வாறே நில் என்ற இயல்புவழக்குச் சொல் பல சொற்களுக்குத் தாயாக இருந்துள்ளது காணலாம்.

இவற்றை அறிஞர் பிறரும் முன் விளக்கி யதுண்டு.

நித்தம் > நித்தல் ( அம் விகுதிக்குப் பதிலாகவோ மாற்றமாகவோ அல் வந்துள்ளது. ) ;  நித்தம் > நிச்சம்  ( த > ச திரிபு).

இதேபோல் திரிந்த இன்னொரு சொல்:  அத்தன் >  (அப்பன்) > அச்சன் எனக்காண்க.  மாறாமை உடைய அல்லது பெயரில்லாத எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்கவேண்டுமானால்  நிப்பம் என்று பெயர் வைத்துவிடுங்கள்.

இத்துடன் நிறுத்தி இளைப்பாறுவோம்.  மகிழ்க.




தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்








புதன், 29 ஜனவரி, 2020

எலிப்புத்தாண்டும் வியாதிகளும்.

எலிதரு புத்தாண் டியற்றிற்று  யாதோ
நலிதரு கொள்ளைமுன்  நாளில் ------ பலியுறு
மூச்சுத் திணறுசளி மூண்டதுவே இந்நாளில் 
பேச்சிலுமே அச்சம் தரும்.


எலிதரு புத்தாண்டு -  சீனப் புத்தாண்டு எலியாண்டு.
இயற்றிற்று யாதோ -  முடித்தது எதுவோ? ( தந்த பலன் என்ன?)
நலிதரு கொள்ளை  =  கொள்ளை நோய்.(  நலி - நோய்.) நலிவு.
பலியுறு  -  உயிர்ப்பலி மிகுந்த.
மூச்சுத் திணறுசளி -  நிமோனியா.
மூண்டதுவே - தொடங்கியதே.
பேச்சிலுமே -  அதைப் பேசினாலும்.

விய என்பதினின்று வரும் சொல் வியாதி.  விய  +  ஆ (  ஆதல் ) + தி (விகுதி).
வியாதி என்பது பரவுகிற நோய் அல்லது தொற்று. நாளடைவில் அது
தன் நுண்பொருள் இழந்தது,   பொதுவாக நோய் என்ற பொருள்பெற்றது.

விர் > விரி.  விர் > விய்-  விய.  வியன் உலகு - விரிந்த உலகம்..

இந்த எலியாண்டில் நிமோனியா வந்துள்ளது.   முன்னாளில் எலிகடிக் கொள்ளை நோய் எலியாண்டில் வந்ததோ?  (தெரியவில்லை). இது எலியாண்டின் பலனோ?  எ-று.

மறுபார்வை:  தட்டச்சுப் பிறழ்வுகள்.

திங்கள், 27 ஜனவரி, 2020

சவுத்துப்போதல் ஒரு சிந்தனை

முதலில் நாம் சிந்தனையைச் சிந்தனையிலிருந்தே தொடங்குவோம். எண்ணுவதென்பது மனத்துள் நிகழ்வதாகும்.  அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக இல்லாமல் ஒரு சிறு தொடராக எண்ணி அதை வெளிப்படுத்துவதே சிந்தனை ஆகும். வெளிவரும்போதே அதை அடுத்த மனிதன்" சிந்திப்பா"க உணர்ந்துகொள்கிறான்.  சிறு என்பது "சின்" என்பதிலிருந்தும், அது உருக்கொள்வது  "து" விகுதியாலும், வெளிவருவது இ என்னும் வினையாக்க விகுதியாலும் அறிகிறோம். எனவே சின் து இ > சிந்தி ஆகி  சிந்தித்தல் ஆகிற்று. சிந்துதல் என்பது நீர் போன்றவற்றையும் தூள் போன்றவற்றையும்
அதன் இருப்பு நிலையினின்றும் வெளிக்கொணர்தல். நீரைச் சிந்திவிட்டான், மூக்குப்பொடியைச் சிந்திவிட்டான் என்ற சொல்லாட்சிகளைக் காண்க. இ என்பது இங்கு என்ற சுட்டுச்சொல்  ; அஃது இன்னொரு பொருட்பெயருடனோ வினைப்பெயருடனோ இணைகையில் இடமாற்று ஏற்படுவதையும் குறிக்கும்,
அள் > அள்ளு.  அள் > அளி > அளித்தல் என்பது காண்க. அள்ளுதல் என்பது ஒருசேர்ப்பாக எடுத்தல்;  அளித்தல் என்பது அவ்வாறு எடுத்ததை "இங்கு"  (இ) இடமாற்றிவிடுதல். கொடுத்தலுக்கும் மனவிரிவும் அன்பும் தனதே என்று கவர்ந்துகொள்ளாமையும் வேண்டும்,  ஆதலின் வேறு பொருண்மைக் கருத்துகளும் அதில் ஒட்டிக்கொண்டன. சிந்து என்பது பொருட்பெயராய்ச்  சிறுகவியைக் குறித்தது.  அளவடியின் குறுகிய முச்சீரடி அதுவாகும்.  அது சிறு நெய்யுமநூல்வகையையும் குறித்ததென்பர் வரலாற்றாசிரியர். அந்நூல் வணிகப்பொருளாய் நிலவிய காலத்தில் அவ்வணிகம் நிகழ்ந்த இடமாகிய ஆற்றங்கரையும் சிந்து என்று பெயர் பெற்றதென்பர்.  அங்கு வழங்கிய மொழியும் சிந்தி எனப்பட்டு அது பேசியோரும் சிந்திகள் எனப்பட்டனர். இ என்பது உடைமைக் கருத்துமாம்.  சிந்து + இ : " சிந்து "வை உடையது சிந்தி.

( சளித்துன்பம் உடையோன் ஒருவன் )  மூக்கிலிருக்கும் சளியை வெளியிலெடுக்கையும் மொத்தமாக ஒரே வேளையில் எடுத்துவிடல் இயலாமை காரணமாக ஊற ஊற எடுக்கவே " சிந்துதல். "  மற்றும் "மூக்குச் சிந்துதல் "  என்ற சொல்லாட்சிகள் ஏற்பட்டன. எண்ணங்கள் மனத்துள் ஊற ஊற வெளிப்பட்டு அறியப்படுதலின் அது சிந்து சிந்தி சிந்தித்தல் ஆனது. இவை கூறும் அடிப்படைக் கருத்து சிறுமைதான்.
சேர்த்துவைத்து வெளிவந்த மொத்தமன்று என்பதை உணரவேண்டும். எதிலும் இடக்கரைக் ( vulgarity )  கருதுவதன்றி  அடிப்படை கருதவேண்டும்.

மேலே காட்டியதுபோல ஒவ்வொன்றையும் நுணுக்கி எடுத்து ஆய்வு செய்தாலன்றி எதையும் அறிதற்கியலாது.

இப்போது சவுத்துப்போதல் என்பதுபற்றிச் சிந்திப்போம். சவுத்தலாவது இளகுதல், பொருளின் கட்டித்தன்மை குறைந்து குழைவு அடைதல் என்பவாகும். செத்த உடல் முதலில் சவுத்துப்போகிறது.  இந்நிலையில் அதைச் சற்றே வளைக்கலாம். பின்னர் அது கெட்டிப்படுகிறது.  அப்போது அவ்வுடல் விறைத்துவிட்டதென்பர்.  அதன் கால் கைகளை நகர்த்துவது கூடக் கடினம். நகர்த்தினால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி முன்னிருந்ததுபோல் இருக்கும்.  சா> சாதல்.  சா> சாவு.  இது வு என்னும் விகுதி பெற்ற சொல்.  இது அம் விகுதி பெற்று சா > சா+ அம் > சவம் என்றானது.  இதில் சாகாரம் தன் ஒலிநீட்சி குன்றிச் சகரமானது. சா அம் > சவம் ஆனதில் வகர உடம்படு மெய் தோன்றிச் சொல் அமைந்தது.   இதை இவ்வாறன்றி மாற்றுவிளக்காக சா> சாவு ( விகுதி: வு ) > சாவு+ அம் > சாவம் >  ( நீட்சிகுன்றி ) சவம் ஆயிற்றென்று முடிப்பினும் அஃதேயாம்.

இவ்வாறே சா> சாவுறு > சாவுற்றுப்போதல் > சாவுத்துப்போதல் என்ற அடைவு காண்க. சிற்றம்பலம் என்பது சித்தம்பலம் > சிதம்பரம் ( ற்ற > த்த.  இனி ல - ர திரிபு மொழிகள் பலவினுக்கும் பொதுத்திரிபு )  என்றாம்போல சவுத்துப்போனது என்பதும் ஆனது. அதாவது பொருள் இளக்கநிலை எய்தியது, தன் இறுக்கம் குன்றியது என்பதே.

இனிச் சவாரி என்ற சொல் காண்போம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பொருள் பல. அதற்கு ஒத்திருத்தல் என்பதுமொன்று.  பொருந்துதல் தங்குதல் என்றும் உள.  சவம்போல ஒன்றும் இயக்காமல் ( குந்திக்கொண்டு)  செயலின்றி உடன்போவதே சவாரி ஆகும்.

சவ(ம்) >  சவ+ ஆர் + இ = சவாரி,

சவம்போலப் பொருந்திச் செல்லுதல். ஒத்துப்போதல். ஓடுமெதிலும் தங்கிக்கொள்ளுதல் என்பன பொருள்விரியாகும். இஃது ஒரு இனிய செலவொப்பீடு ஆகுதல் காண்க.

நளடைவில் சவ ஒப்பீடு மறைந்து   சவாரி என்ற சொல் தனித்துவம் ( தனி+து+ அம்)  பெற்றதும் நல்லதொரு நிகழ்வே ஆகும்.  இது தமிழர்தம் வணிக அலைவுகளால் பிறவிடங்கட்கும் பரவிற்று. சாலமோன் (  " நல்ல மகன் "  என்ற சொல்லும் இவ்வாறு பரவிய சொல்லே.  மகன் > மோன்.   தோகை  என்ற சொல் எபிரேயமொழியில் காணப்படுவதும் அதைக் கால்டுவெல் சுட்டிக்காட்டியதும் அறிக.  சவுத்த(ல்) என்பது soft  என்பதனுடன் கொண்ட ஒலியொற்றும் காண்க. மற்ற எல்லை தாண்டி உலவும் சொற்களை அவ்வப்போது ஆய்ந்து வெளியிட்டிருக்கிறோம். அவற்றையும் அறிவீராக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்.





வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஒருமை பன்மைக்குள் வந்தது.

ஒரு என்ற எண்ணுப் பெயரினுக்கு  ஒல் எனற்பாலதே  அடிச்சொல் ஆகும்.

ஒல் > ஒர் > ஒரு என்பனவே அடியினின்று வந்த உருவாக்க
 ஓட்டம். ஒல்+  து என்பதே ஒன்று என்று விளைந்தது. ஒன்று என்பதில் ஈற்றில் நின்ற துகரமே ஒருமை உணர்த்தும் விகுதியாகும்.  இதில் எழும் வினா என்னவென்றால்  ஒல் அல்லது ஒன் என்பதே பொருண்மையால் ஒருமையாக, இன்னும் ஓர் ஒருமை காட்டும்  விகுதி எதற்கு  என்பது தான்.

ஒன்று இரண்டு என்பவற்றை அப்போதுதான் உருவாக்கி அல்லது உணரத்  தலைப் பட்டிருந்த அந்த உதய காலத்தில் ஏன் இந்த ஒருமை பன்மை என்ற கருத்தமைப்பினைச் சொல்லமைப்பில் புகுத்தும் போராட்டத்தில் மொழியாக்க முனைப்பினர் ஈடுபட்டனர்     என்பதை அறிந்து கொள்ளும் வழி ஒன்றும் இல்லை. து என்பது அஃறிணை ஒருமை விகுதி என்பதனை எப்போது  வகுத்தனர்
என்பதும் அறியக்கூடியதாய் இல்லை.

இவ்வாறிருக்க இரண்டு  என்பது பொருளிற் பன்மையாய் நிலவ, ஏன் அதனுள் அஃறிணை ஒருமை விகுதி புகுத்தினர் என்பதும் புதிரே ஆகும். இவ்வாறே  மூன்று  (மூல்+து) ,  ஐந்து (ஐ+து ) ,  எட்டு ( எள்+ து),  ஒன்பது ( ஒன்று கழி த் த  பத் து) இன்னும் தொண்டு என்பவற்றிலும் ஏன் அஃறிணை ஒருமைத் து விகுதி ஏற்றினர் என்பதும் கேள்வியாகும்.

நீர் மொழிகளை ஒருவாறு அறிந்தவர்  எனின் உலகில் சில மொழிகளில் ஒருமை பன்மை இல்லை என்பதை அறிந்திருப்பீர்.  இதற்கும் ஒரு வினாவை எழுப்பாமல் விடுப்போம்.  சில மொழிகளில் ஒருமை பன்மை பொருளுக்கு இல்லை.  சொல்லுக்கே உண்டு.  சிலவற்றுக்கு ஒருமை இருமை பன்மை என்று மூவிதம் கண்டுள்ளனர். அதனால் கூடுதல் சாதனை யாதென்பீர்?
மும்மை நான்மை ஐம்மைக்கும் போயிருப்பர். களைப்பினால் ஒதுங்கிவிட் டனர். உலகுக்கு நன்மையே.

தமிழில் வல்லுநர் என்பார்  இதை அறிந் து உலகுக்கு விளக்குபவராகவும் இருக்க வேண்டுமே.  நீரே ஆய்வீர்.

அறிவோம் மகிழ்வோம்.

தட்டச்சுப் பதிவு பின்னர் சரி பார்க்கப் படும்.

வியாழன், 23 ஜனவரி, 2020

எதிர்க்கட்சிகள் பற்றி.

பழைய கவிதை கண்டெடுத்தது இன்னொன்று.
முன் இட்டது இங்கு உள்ளது:   https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_22.html



தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்;

மாணாத செயல்களிலே மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரும் ஆதரவை மாயுறுத்தும் காலை

ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க
ஒல்லுவதோ அரசினர்க்கு கொள்ளாமை கண்டு

நாணாமல் அவர்களையே நன்மன்றில் நிறுத்தல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி அன்றோ.


==============================================================

மாணாத  -  சிறப்பில்லாத, பொருந்தாத.
மாயுறுத்தும் -  அழிக்கும்; குழப்படி செய்யும்.

ஓணான் - பல்லிபோன்ற ஓர் சிற்றுயிரி ( சிறுபிராணி)
ஓல்லுவதோ - முடியக் கூடியதோ

கொள்ளமை = நன்மையாய் இல்லாமை.; கொள்ளத்தக்கதாய் இல்லாமை.
நன்மன்றில் -  தீர்ப்புத் தரும் மன்றத்தில்.அல்லது மக்களின்முன்.
செல்லு(ம்)வழி -  செல்லுவழி

அல்லவோ?.  அன்றோ என்றும் வழங்கும்  .  பழைய  வெளியீட்டில் இது  "ஆமே"  என்று முடிந்தது.  ஆமே =  ஆகுமே.  குகரம் தொக்கது.

ஓர் தூயகருத்து என்று கவிதையில் வரலாம். உரைநடையில் ஒரு தூயகருத்து  என்றே வரும்.- இதற்கான உரிமத்தை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

இது 2015ல் எழுதியது.  இன்னொரு நாட்டின் நடப்பு பற்றியது.
இது இங்கு உள்ளதா என்று தேடிப்பார்க்கவில்லை.

படித்து மகிழ்வீர்.

புதன், 22 ஜனவரி, 2020

கண்டெடுத்தது (கவிதை)

 சேர்த்துவைத்த பழவரைவுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருக்கும்போது முன்னர் எழுதிவைத்திருந்த இரண்டு   கவிதைகள் கிட்டின. அவற்றுள் ஒன்று
உங்களை இப்போது வந்தடைகிறது.

கண்டெடுத்த அக்கவி இதுவே

ஆம் ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில் ஆதவன் என்றிட
ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற தூழலில் சிக்கி.



ஒரு நாட்டின் கட்சிக்கு ஏற்பட்ட நிலைக்கு
இரங்கி எழுந்தது இக்கவி.

ஆக்கிய  ஆண்டு :  2015..  அடுத்து இன்னொன்று இன்னோர் இடுகையில்
படிதது மகிழுங்கள்.






ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அவத்தையும் அவஸ்தையும்.

அவத்தை என்ற உருக்கொண்டு பின்னர் அவஸ்தை என்று உருமாற்றம் அடைந்த சொல் பிறந்த விதம் அறிவோம்.

பச்சை நெல்லை சுடுநீரிலோ நீராவியிலோ வைத்து வேவித்தால் அது அவியல் ஆகிவிடுகிறது.  இப்படிச் செய்யாமல் அதே நெல் புழுக்கமான இடத்தில் காற்றோட்டமின்றி வைக்கப்பட்டுவிட்டால் அதுவும் ஒருவகையில் அவிந்து பயனற்றுப் போகிறது. குளிர்ப்பெட்டியில் நெடுநாள் இருந்த காய் முதலியவையும் அவிந்து  சுருங்கிப் பயனற்றுப் போகிறது.  இப்படித் தாமாக அவிந்துவிட்டவை  அவம் அடைகின்றன. இவை உணவுக்கு ஏற்றவை அல்ல.

எனவே அவம் என்ற சொல்லுக்குக் கேடு (கெடுதல்) என்ற பொருள் உண்டாயிற்று. அவம் என்ற சொல் பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. சில நூல்களில் உள்ளன.

இது ஆன விதம் இவ்வாறு:

அவி > அவிதல் :  வினைச்சொல்.

இங்கு தல் என்பது தொழிற்பெயர் விகுதி.  அவி என்பதே வினை.

அவி என்பது அம் விகுதி பெற்றால்  அவி + அம் = அவம் ஆகிறது. அவி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு   (அவ்)+ அம்= அவம்  என்று நின்று  வ் + அ ஆனவை புணர்ந்தபின் அவம் என்ற இறுதிவடிவம் பெறுகிறது.  அவ் என்பது ஒரு சொல்லன்று. அது ஒரு புணர்நிலை இடைவடிவம் ஆகும்.  பொருள் உடையதே சொல். புணர்நிலையில் ஏற்படும் இடைவடிவம் பொருள் காட்டுதல் இல்லை ஆதலின் அதனை ஒரு சொல் என்று நாம் குறிப்பதில்லை. சில சொற்கள் இவ்வாறு இடைவடிவம் அடைவதில்லை. எடுத்துக்காட்டாக அறு என்ற சொல்லினின்று ஆறு என்ற சொல் ( நதி ) உருவாகுகையில் எந்த இடைவடிவமும் இல்லாமல் முதனிலை நீண்டு திரிபுற்று  "ஆறு" ஆகிவிடுகிறது.  மாறாக,   குவியல் என்ற சொல் உருவாக்கத்தில் குவி என்பது மாற்றம் ஒன்றும் அடையாமல் ஒரு யகர உடம்படு மெய் ஒட்டப்பெற்று அஃது அடுத்து வரும் அல் என்ற விகுதியில் முதனிலையுடன் புணர்ந்து  அவியல் என்ற சொன்னிலையைப் பெற்றுவிடுகிறது.

அறு + அம் என்பவை பகுதியும் விகுதியும் புணர, உகரம் கெட்டு, அற் என்று இடைவடிவம் கொண்டு,  அம் வர  ற் + அ = ற ஆகி,  அறம் என்றாகும். இறுதி நிலை உயிர் கெடுகிறது. வருநிலை அகரம் றகர ஒற்றினைப் பற்றி முழு றகரம் ஆகிவிடுகிறது.

இவ்வாறே  அவம் என்ற முழுச்சொல் அந்நிலையை அவி என்ற வினையினின்று எய்தியவாறு கண்டுகொள்க.

அவத்தை என்ற சொல்லும்,  அவி என்ற வினையினின்று அமைந்த விதம் அறிக.

அவி + அத்து + ஐ. >  அவ்( இ ) + அத்து + ஐ >  அவ் + அத்து + ஐ >  அ (வ்+அ)த்து+ ஐ > அவத்தை  ஆயிற்று.  வினைச்சொல்லீற்று இகரம் கெட்டது.  வகர ஒற்று வருநிலை அகரத்துடன் இணைந்தது.

கொதிநீர்  ஆவி உடலிற்படும்படியான எரிவு ஒத்த துன்பமே அவத்தை ஆகும். அத்து என்பது ஓர் சொல்லாக்க இடைநிலை. இதனை அவம் + தை = அவத்தை என்றும் தை விகுதி என்றும் காட்டினும் அதுவேயாகும்.

வேகும் ஆவியிற் பட்டதுபோலும் துன்பம். இது ஒப்பீட்டில் உண்டான சொல்.

அவஸ்தை என்ற வடிவம், உயர் > உயர்ச்சி >   உசத்தி > ஒஸ்தி ஆனதுபோலும் அவத்தை அவஸ்தை ஆனது.  ஸ் என்றது மெருகு  அல்லது கவின்பொடிப் பூச்சு ஆகும்.

வடவெழுத்து ஒருவினால் உண்மைச் சொல் வெளிப்படும் என்றார் தொல்காப்பிய முனிவர்."  பல்புகழ் நிறுத்தப் படிமையோன் "  அன்னவர்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுத் திருத்தம் பின்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

மரியாதையும் மருவாதையும்

மருவுதல் என்றால் தழுவுதல்,  கைகளால் ஒருவரைச் சுற்றிக்கட்டிப் பற்றிக்கொள்ளுதல்.  இது பணிவின் நிமித்தமாகவும்  அன்பின் நிமித்தமாகவும் வரவினை ஏற்பதன் நிமித்தமாகவும் நடைபெறக்கூடும். வேறு காரணங்களும் பொருந்துமாறு மருவுதல் உளது.  மனத்தால் மருவுதல், காலத்தால் மருவுதல், இடத்தால் மருவுதல் என மருவுதல் பல்வகையாகும்.  சங்ககலத்துடன் இணைந்த காலத்தை சங்க மருவிய காலமென்பர். சங்கத்தின் தாக்கம் மறைந்துவிடாத அடுத்த காலத்தையும் மருவிய காலமென்பதுண்டு.

திருமண உறவால் மகளான நிலையை அடைந்தவளை மருமகள் என்பர்.  மருவு என்ற வினையுடன் தொடர்புடைய "  மரு " என்னும் சொல் மருமகள், மருமகன், மருமக்கள் முதலிய சொற்களிலும் மரு என்பது  தெளிவான அடிச்சொல்லாய் உள்ளது.

மருமகன் என்ற சொல்லின் இடைக்குறை மருகன் என்பது.  இதில் ம என்ற ஓரெழுத்து குறைவாயிற்று.

மரியாதை என்ற தமிழ்ச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஈண்டு உள்ளது .https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_90.html

அதையும் படித்து நினைவுபடுத்திக் கொள்க.

கைகளால் மருவிக்கொள்ளாமல் வாயினால் மட்டும் அன்பின் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது  மரு + வாய் +  தை =  மருவாதை என்பதை அறியலாம்.
இங்கு வாய் என்பது கடைக்குறைந்து  வா என்று நின்றது.  வாய்= து + அம் = வாதம் என்ற சொல்லிலும் வாய் என்பது வா என்று நின்றது.   வாய்ப்பேச்சரிடை வாய் என்பது வா என்று சுருங்கும்.  எ-டு:  வாப்பட்டி. இவ்வாறு குறைந்தமைந்த சொற்களும் உள.

வாய்த்தியார் > வாத்தியார் ( வாய்ப்பாடம் சொல்பவர் ).

நாளடைவில் மரியாதையும்  ( மருவி யாத்துக்கொள்ளுதலும் )  மருவாதையும் (  வாய்மருவுதலும் ) தம்  நுண் பொருள் வேறுபாட்டினை இழந்தன. இன்று ஒன்று மற்றொன்றின் திரிபாக எண்ணப்படுகின்றது.

வியாழன், 16 ஜனவரி, 2020

பிரபஞ்சம்

தமிழ் மொழியின் இனிய சொற்கள் யாண்டும் காணப்படுவனவே. காணவே மொழிகளிடை இழையும் ஓர் அணுக்கம் நமக்குத் தெளிவாகிறது.

எடுத்துக் காட்டாக கஜானா என்ற சொல்லைக் காணலாம்.

காசு + எண்ணாம் = காசெண்ணா (ம்)> காஜாநா ஆகிவிடும். இதில் வந்த மாற்றங்களும் பெரியவை அல்ல. சகர வருக்கத்துக்கு ஜா உள்ளே வந்துள்ளது. அவ்வளவுதான்.  காசினெட்டு என்பதி  ிருந்து  cashewnut வந்தது போலுமே.

உலகில் முதலாகப் பூத்த
வை  ஐம்பூதங்களே. அவையே முற்பிறப்புக்கள்.

பிறப்பு+ அஞ்சு + அம் = பிறப்பஞ்சம்> பிறபஞ்சம் ( இது இடைக்குறைந்து,)
பிரபஞ்சம் என்று இன்று உலவுகிறது.

ஐந்து > அஞ்சு .  இது பேச்சு வழக்குச் சொல்.

அஞ்சுதல் ( அச்சம்) என்னும் சொல் வேறு.

ஐந்து என்ற செந்தமிழை  நுழைத்திருந்தால் "பிரபைந்தம்" என்று விளைந்து  இனிதாய் இருந்திருக்காது.
அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுத் திருத்தம் பின்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

பொங்கல் வாழ்த்துகள்

யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
நாவினிக்கும் முக்கனிச் சக்கரைப் பொங்கலைத்
தேவியர்தம் கணவர் மக்க ளுடனுண்க
நோவெனவொன் றில்லா வாழ்வு  மலர்கவே.

திங்கள், 13 ஜனவரி, 2020

கொடூரமும் நெட்டூரமும்.[ நிஷ்டூரமும்]

ஊறு என்றால் துன்பமென்று பொருள். கெடுதல் என்றும் பொருளுரைக்கலாம். இச்சொல் உறு என்பதிலிருந்து வருகிறது.

படு (படுதல்) என்பது  பாடு என்று முதனிலை திரிந்து பெயர்ச்சொல் ஆகிறது. முதனிலை என்றது முதலில் நிற்கும் ப என்ற எழுத்தை.  அது "பா" என்று நீண்டுவிட்டதன்றோ?  நீள்தல் (  நீடல் )  திரிபு வகைளில் ஒன்று.

இவ்வாறே  உறு  ( உறுதல் )  பெயராவதற்கு ஊறு என்று மாறியுள்ளது.   ஊறுதல் என்ற வினைச்சொல் வேறு.  எடுத்துக்காட்டு: நீர் ஊறுதல்.

கொடுமை என்பது மனிதனோ அன்றி விலங்குகளோ ஏனை உயிரினமோ "உறுவது". இவ்வாறு சொன்னால், பின் ஊறு என்பது ஏன் அம் விகுதிபெற்று ஊறம் என்றாகி, மேலும் திரிந்து ஊரம் என்று ஆகி, கொடுமை உறுவது என்ற பொருளில் கொடூரம் என்று  அமைந்திருத்தல் இயலாது என்ற எண்ணம் தோன்றலாம்.  அவ்வாறாயின்,  ஊறு என்பது அம் விகுதி பெற்றதும் அதன்பின் கொடு என்ற கொடுமை குறிக்கும் சொல்லுடன் இணைந்ததும் ஆகிய செயல்களால் ஆனதோர் பயன் ஒன்றுமில்லை என்று அறிக.  மேலும் கொடுமை என்பதும் துன்பம்; ஊறு என்பதும் துன்பம்,  ஆதலின் பயனொன்றும் இல்லை (mImisaich chol -  மீமிசைச்சொல்) என்பதுடன், அம் விகுதியினாலும் ஒன்றும் கூடுதல் கிட்டவில்லை என்பதும் அறிக.  சிலவிடத்து வெற்று விகுதிகள் இணைப்பும் மொழியிற் காணப்படுமெனினும் இங்ஙனம் அருகியே நடைபெறுதல் நன்று என்பத     ு அறிக.

ஊர்தல் என்பது நெருங்கிவருதல் , நாமறியாமலே மெல்ல வந்து சேர்தல்  என்ற பொருளில்,  கொடு+ ஊர் + அம் = ுஉரம்   ொூரம்
என்ற சொற்புனைவு உண்டாயிற்று  என்பதே பொருந்துவதாகும்.

ஆகவே கொடூரமாவது எதிர்பாராமல் வந்துற்ற மிகுதுன்பம் ஆகும். இது சொல்மைப்பாலும் வழக்காற்றாலும் பெறப்படும் பொருளென்று உணர்க.

நெடிதும் உறும் பெருந்துன்பமே நெட்டூரம் ஆகும்.  இச்சொல் ஒழிய, இதுவே நிஷ்டூரம் என்று மாற்றுரு அடைந்து உலவலாயிற்று என்றறிதல் தடையற்ற சிந்தனையாகுமென்பது அறிக.

அரிதல் என்பது மிகமிகச் சிறிதாக,     அளவிலும் சற்றுக் கூடுதலாக வெட்டுதல் ஆகும்.  அப்படி அரியப் பயன்படும் கத்தி ஆரி ஆகும்.  இதுவும் முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  தொழிலுக்குப் பெயரானது பின்னர் அத்தொழிற்குப் பயனாகும் கத்திவகைக்குப் பயன்படுவதனால் அஃது ஆகுபெயராய் ஒரு கருவியைக் குறித்தது.  சற்று நெடிதான " நெட்டாரி" காணப்படுவதில்லை.  நெடிதானவை அரிதற்குப் பயன்படுவதில்லை போலும்.
இந்த "ஆரி"  கட்டையாக,  (  நீளம் குறைவாக )  இருந்ததால், கட்டை+ ஆரி = கட்டாரி ஆயிற்று.  கட்டை என்பது குட்டை.  குட்டையான பை குட்டான் எனப்படுகிறது. (வெற்றிலைக் குட்டான்).   குட்டையானவர்  "குட்டார்" என்றும் அழைக்கடுவது காண்க.  எ-டு:   குட்டார்க் கங்காணி. (குட்டார் என்பது வழக்கிலிருந்து யாம் அறிந்தது.  அகரவரசையில் தேடிப்பார்க்கவும் ).  சிலவிடத்துக் கட்டாரி என்பது இயற்பெயராகவும் உள்ளது. ஆட்பெயராகும்போது  இங்கு வரும் ஆரி என்பது, ஆர்  = மரியாதைக்குரிய ,  இ  - மனிதரைக் குறிந்த வந்த விகுதி.  (  ந(ண்)பர் ).   அரியும்  குட்டை வாளானது சிறவாமையின்.  கட்டாரி என்பது குத்துவதில் திறனுடைய மனிதர் என்று ஒப்புமை கூறுவதாயினும் அதுவும் கொள்ளாமென்று ஏற்பதில் எமக்கொரு மறுப்பும் இலது காண்க.

கொடூரம் என்பது கடூரம் என்றுமாகும். பின்னுமது  குடோரமென்றும் உருமாறும்.

குட்டன் என்பது மகனையும் குறிக்கும்.   அப்புக் குட்டன் -  அப்புவாகிய குட்டன்; அப்புவின் மகன் எனலுமாம்.

குட்டாரம், குட்டரி என்பன (  சிறிய ) மலை குறிப்பவை.  இங்கு வந்த ஆரம் அரி என்பவை வெட்டுதல் குறிப்பவை அல்ல.   அரு+ அம் = ஆரம்,  அருகிலிருப்பது (குன்று).   அரு+ இ = அருகிலிருப்பது.  குட்டை ( குட்டையானது) என்பதும் குன்று  ( குன்றுதல் ) என்பதும் சிறுமை குறித்து ஒரு பொருளனவாயின.

This post has been hacked. It
defies edits. Re-edit is postponed.
Pl read with care.

சனி, 11 ஜனவரி, 2020

பீச்சக்கை

இன்று "பீச்சக்கை" என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல் ஒரு கூட்டுச்சொல் ஆகும். இதைப் பிரித்தால் இரு சொற்கள் தென்படுகின்றன. அவையாவன:

பீச்சு + கை

பீச்சுதல் என்பது பேதியாகுதல், மலம் கழிதல் என்பதை இங்குக்  குறிக்கிறது. இந்தச் சொல் (பீச்சுதல் ) இப்போது இந்தப் பொருளில் பேச்சு வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணக்கிடைப்பது ஆகும். பீச்சுதல் என்பதன் வேறு பொருள்களை இங்கு நாம் ஆய்வு செய்யவில்லை. இஃது "பல்பொருளொரு சொல்.    " (ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுடையது)”

பீச்சு+ கை என்பது பீச்சக்கை என்றும் பீச்சங்கை என்ற  அம்  என்னும் சொல்லாக்க இடைநிலை பெற்றும் வழங்கும். ஆறு + கரை > ஆற்றங்கரை என்பதில் அம் என்னும் சாரியை வருவது போன்றது இதுவாகும். வேம்பு + குச்சி = பேப்பங்குச்சி என்பதில் அம் இடையில் வருவதும் அது.

கழிவைக் கழுவுதற்குப் பயன்படும் கை என்பது இக்கூட்டுச் சொல்லின் பொருளாகிறது. இது பேச்சுவழக்கில் மட்டும் உள்ளதாகும். பீச்சு என்பது முதனிலைத் தொழிற்பெயராய்க் கை என்னும் சினைப்பெயருடன் ( உறுப்பின் பெயருடன் ) இணைந்தது.

இக்கூட்டினை, “ பீ + சக்கை " என்று பிரிக்கவில்லை அஃது பொருந்தாமையின்.

பீச்சக்கை என்பது இடக்கரடக்கல்.

This has been hacked by intruders and has been
rectified to some extent. Please read with care.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

நீக்கப்பொருள் தரும் தமிழ்ச்சொற்கள்.

நீங்குதல் என்ற சொல்லுக்கு அடியாவது " நீ " என்ற (அடிச்)சொல்.
நிந்தனை:
தான் நீங்கலாக முன் நிற்போனைக் குறிக்கும் சொல்லே " நீ " என்பதாகும்.  அடிப்படைக் கருத்து " நீக்கம்" என்பதே என்றறிக.  இது முன்னிலைப் பதிற்பெயர்.

நீ என்பது சீனமொழியிலும் வழங்குவதாகும்.

நீ என்பது அடிச்சொல்லாய், கு என்னும் வினையாக்க விகுதி பெற்று  " நீங்கு " என்று அமைந்தது. இதுவே பிறவினையாய் "  நீக்கு" என்றமைந்தது.

நீரில் தான் மிதந்த இடத்தினின்று இன்னோர் இடத்துக்கு நீங்கிச் செல்வதே " நீந்துதல்"  ஆகும்.  நீ என்ற சொல்லுடன் து என்னும் வினையாக்க விகுதி இணைந்ததுதான் " நீந்து" என்பது.

இது தொழிற்பெயராகும்போது  " நீச்சு"  " நீச்சல்" என்ற உருக்கள் கொள்ளும்.

பலிநீச்சு என்பது சடுகுடு விளையாட்டுக்கு இன்னொரு பெயர்.

"பலிநீச்சடிக்கவே பல்லு இரண்டு உடையவே..."  என்பது ஒரு சிற்றூர்ப்பாட்டு.

மனிதன் குகைகளிலும் காடுகளிலும் வசித்த தொல்பழங்காலத்தில் கூட்டமாகவே வாழ்ந்தான்.  கூட்டமாக வாழ்வது அவனுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம். உணவுடைய கூட்டத்தாரை இல்லாதவரும் அவர்களுக்குள் வலிமை உள்ளவரும் ஆனோர் வந்து பாய்ந்து அடித்து உணவையும் பிற அரும்பொருட்களையும் எடுத்துச் சென்றனர். ஒரு கூட்டத்தாருக்கு உரிய பொருளை அவர்களுக்கே உரிமை என்று நிலைநிறுத்தும் ஏற்பாட்டுநடக்கை அல்லது விதியமைப்பு உருவாக வெகுகாலம் சென்றது.  உரிமைவிதிகள் பிற்கால ஏற்பாடுகள். உங்கள் பொருள்கள் உங்கட்கே என்பதை இன்னொரு குழுவினர் ஏற்று நடத்தலே பொருளுரிமைக் கோட்பாடு ஆகும்.

இத்தகைய கோட்பாடுகளை மதிக்காமல் நடப்பவனே  "  நீசன்"  " நீச்சன்" என்று அறியப்பட்டான்.  இந்த நீசம் அல்லது நீச்சத்தன்மை கட்டொழுங்கு போற்றி அமைதி காண விழைந்தோரால் கடிந்துகொள்ளப்பட்டது.   நீச்சத்தன்மை மண்கவர்தல், பெண்கவர்தல், பொருள்கவர்தல் ஆகிய மூன்றையும் தழுவிக் கேடு என்று உணரப்பட்டது ஆகும்.

நீ >  நீசு > நீசம்  (  சு, அம் விகுதிகள்).

நீ > நீச்சு ( புணர்வில் வலி மிகுதல் )  > நீச்சு + அம் =  நீச்சம்.

பிறன்பொருள் கொள்வதற்கு ஒரு வலிமை வேண்டியது போலவே அஃது வேண்டாமை போற்றுதற்கும் ஒரு வலிமை வேண்டும் என்பது உணரப்பட்டது. அஃதே  மனவலிமை என வலிமை ஆகும்.  இம்மன வலிமைப் பாதையின் நீங்கி நின்றோன்  நீசன் அல்லது நீச்சன்.  இம்மன வலிமை இல்லாதவன் அல்லது அதனின் நீங்கியோன் நீச குணம் அல்லது நீச்ச குணமுடையோன் என்று அறியப்பட்டான்.  மனிதர்கள் கூட்டமாகச் செயல்பட்டமையின், இத்தகு சில கூட்டத்தார் நீச்சர் அல்லது நீசர் எனப்பட்டது.  மனவலிமை நீங்கியோர் இவர்கள். இது இழிகுணம் ஆதலின் நீச்சர் அல்லது நீசர் என்பதற்கு இழிவு என்பது பெறுபொருண்மை (  பின்னர் அடைந்த பொருள் ) ஆகும். இது அடைவுப்பொருள் எனலும் அது.

அறிந்து மகிழ்க.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மடிக்கணினித் தமிழ் அலைபேசியில் தவழ்கிறது

மடிக்கணினி செய்கின்ற வேலை எல்லாம்
மணிப்பேசி செய்முனைப்புக் காலம் காணீர்
பொடிப்பேழை முன்னேற்றம் கண்ட யர்ந்தோம்
பொன்னான காலமிதில் சங்கம் இல்லை!
இடியப்பம் பிரியாணி ஆகும் மாற்றம்
இக்காலப் பிறழ்வாகும் தக்க தொன்றே;
முடிமன்னர் குடிவாழ்த்தும் அன்னை இன்று
முன்சென்றாள் தன்மகிழ்வுக் கெல்லை உண்டோ?

சனி, 4 ஜனவரி, 2020

நிந்தனையும் நீயெனலும்

( இவ்விடுகையில் ஒரு பகுதி காணாமற்  போயிற்று.  ஆகவ பின் எழுதிச் சேர்க்கப்பட்டவை இதில் உள்ளன. ச்   அதன்பின் காணாமற் போனதும் கண்டுபிடிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது எனினும்  அப்பகுதி தனியாக வெளியிடப்படும்.  அதாவது இங்கு சேர்க்கப்படவில்லை. கள்ள மென்பொருள் நுழைவும் கடவாணைபெறார் புகவும் அறிந்து வருந்துகிறோம். )

Inconvenience to readers regretted.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

TEXT OF THE POST.

நம்மினும் மூத்த பெருமக்களை , முன்நின்று உரையாடும் போது -   நீங்கள் என்றுதான் சுட்டவேண்டும்; "நீ" எனல் பணிவு  அல்லது மரியாதைக் குறைவு என்பது நம் பண்பாட்டு விதியாய் உள்ளது.

இப்பண்பாட்டு விதியினின்றே நிந்தனை என்னும் சொல் தோன்றியுள்ளது.

மூத்த பெருமக்களில் ஒருவர் நீ என்று குறிப்பதை இழித்தலுக்கு ஒப்பாகக்  கரு
தினார். பிறரும் அன்னர்.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் பிற இனத்தாரிடமும் காணப்படுகின்றன.  மலாய் மொழியில் "லூ"( நீ)  எனலாகாது. முன்னிலைப் பணிவை 'அண்டா"  என்று  தான் சொல்லவேண்டும்.  வயதிற் குறைந்தோர் பெரியோர்முன் செல்லும்போது குனிந்தவாறு பணிவினைத் தெரிவித்துக்கொண்டுதான் கடந் து செல்ல வேண்டும்.

நீ என்ற சொல் ஒரு  து விகுதிபெற்று முதனிலை குறுகி " நிந்து" என்றாகி,  பின்னும் ஒரு வினைச் சொல்லாக்க    விகுதியாகிய "இ" என்பதை மேற்கொண்டு நிந்தி என்றாகி நிந்தித்தல் ஆனது.

நிந்தனை என்பது  'நிந்தி' + அன் + ஐ' என்பன புணர்வுற்ற சொல்.  அன் என்பது இடை நிலை ஆகும்.

நீ  என்பதென்ன?  தன்னின் நீங்கிய நிலையே "நீ"  ஆகும்.  நீக்கக் கருத்து.
இதிலிருந்தே பேசுவோன் தன் பண்பினின்றும் நீங்கியதையும் தான் இழிந்ததையும் பிறரை  இழித்ததையும் குறித்துப் பொருள் விரிந்தது.

இதேபோல் "நம்"  என்பதிலிருந்து நம்பு என்ற சொல் தோன்றியதும் காண்க.

ஒப்பீடு: (சொல்லமைப்பு)



நாம் > நம் > நம்பு (வினையாக்க விகுதி "பு") > ( நம்புதல்)
நீ > நின் > நிந்து ( து விகுதி ) > நிந்தி ( இ வினையாக்க விகுதி) > ( நிந்தித்தல் ).



பிறனின் எண்ணத்தைத் தனதாக்கி (நமதாக்கிக்) கொள்ளுதலே நம்புதல். நம்புதல் என்ற சொல்லமைந்தபின் கருத்தமைப்பில் ஒருமை ( தான் ) பன்மை ( நாம் ) என்பன தேவையற்றவை. தேவையானது நாவுரையைச் செவிப்பட்டார் ஏற்பு என்பதொன்றே.



சந்தித்திரிபுகள்:



நின்+து > நிந்து என்பதும் புணர்ச்சியில் பின் > பிந்து > பிந்துதல், முன்> முந்து> முந்துதல் என்பனவற்றின் அமைப்பைப் பின்பற்றியவேயாம்.  முன்> முந்து > முந்திரி, மன் > மன்+ து + இரு + > மந்திரி ( அரசனுடன் நிரந்தரமாய் நின்று ஆலோசனை வழங்கும் பெரிய அலுவலர் ) என்பன காண்க. மன்னுதல் - நிலையாய் இருத்தல். முன்னுதல் பின் மன்னுதலாய்த் திரிந்தது என்றும் அறிஞர் கூறியதுண்டு. சில் > சின் > சின்+து > சிந்து ( சிறு கவி )( சிறு நூல் நெயவு என்றும் கூறுப) என்பதுமது. பல் ( பலர் ) + தி > பன் தி > பந்தி ( பலர் உண்ணும் நிகழ்வு ) என்பதும் அறிக.



நின் + தி : நின்னை ( உன்னைத்) திட்டுதல் என்று சொல்லவும் வழியுள்ளது.


வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஊரும் பேரும். ( கிராமம், காராகிரகம், கிரகம், கிருகம், நத்தம் பிறவும்)


  1. முன் காலங்களில் வெளிச்சமும் காற்றுவசதியும் இல்லாத அறைகளில் கைதிகளைப் பூட்டிவைத்தனர் என்று அறிகிறோம்.   அதனால் காராகிரகம்" என்ற சொற்புனைவு தோன்றிற்று.  இது:


கார்  +  ஆகு + இரு + அகம்

என்னும் நான்'கு சிறு சொற்கள் இணைந்த புனைவு ஆகும்.

கார் :  கருப்பு.    கரு என்பது  கார் என்று திரியும்.  கார்முகில் என்பதுகாண்க.
ஆகு என்பது ஒரு வினைச்சொல்.
இரு  ( இருத்தல், வினைச்சொல்)
அகம்  - இடம், வீடு.

இச்சொல்லிலிருந்து  "கிரகம்" என்ற சொல்லைத் தனிச்சொல்லாக்க ஓர் உந்துதல் வந்தது..

இருக்குமிடம் என்னும் பொருளில்  இரு+ அகம் = இரகம் என்பது கிரகம் எனத் திரிதற்கு இஃது வழிவகுத்தது.

கிரு +  அகம் >  கிரு+ கம் >  கிருகம்  என்பது இன்னொரு புனைவு.

மா+ உலகம் என்பது   மா+ கம் என்று பகவொட்டு ஆனது.   மாக விசும்பு : விண்வெளி,    மா உலகம் என்பதில்  உல என்பது களைவுற்றது.

மக்கள் இருப்பதற்கு இடம் என்னும் பொருளில்   இரு+ ஆகும் + அம்  =  இரு+ ஆம் + அம் =  இராமம் > கிராமம் என்றுமாகும்.

பண்டைத்தமிழில்  "கம்"  > கமம் என்பதும் கிராமம் அல்லது சிற்றூர் குறித்தது.

க என்பது கிர என்று அயலில் திரியும்.

க > கிர > கிரா > கிராமம் என்று திரிதலும் கூடும்.  கமம் > கமா என்பது "காமா" என்று சிங்கள மொழியில் திரிந்தது.  கத்ரிகாமா.  இன்னும் "கதிர்காமம்". இராமம் என்பது கிராமம் என்றுமாதல் கூடும்.  ஆதலின் இது இருபிறப்பிச் சொல்

கம்+ போங்க்  என்ற தென் கிழக்காசியச் சொல்லிலும்  கம் உள்ளது.

புகுதல் என்பது மணமாகிப் புகுதல் அல்லது சென்று வாழ்தல்.

புகும் கமம்  >   கம் + புகும் > கம்பூங்க் > கம்போங்க் என்பது மறுதலைப் புனைவு.

கம் என்ற பழஞ்சொல்,   கண் >  கம் என்று விளைந்த சொல்.  கண் என்பது இடம்.  ண்>ம் ஆதல் மட்டுமின்றி,  கண்> கணம் , இடைக்குறைந்து  கம் என்றுமாகும்.  ஆதலின் கம் என்பது தமிழே   ஆகும்.

பல தென் கிழக்காசிய மொழிகளில் மண்டிங்க்  அல்லது திராவிட  ( தமிழ் இனமொழி) ச் சொற்கள் உள்ளன என்று பிறரும் கருதியுள்ளனர்.  ( வின்டர்ஸ் என்னும் ஆய்வாளர் உரை).

தவளை என்ற சொல்லும் தென் கிழக்கு ஆசியாவில் வழங்கும்.  தாவு + அளை = தவளை,  நெடிற்குறுக்கம்.  தோண்டு> தொண்டை,  சாவு > சவம் , கூம்பு > கும்பம்,  கூடு >  குடும்பு, குடும்பம்;  கூவு > குயில்,   காழ் > கழுதை  என்பன காண்க.

குமரி> குமர் > கிமர்  .

கம் + புகு + சி + யா > கம்பூச்சியா.   ( எ-டு:  பகு> பா:   பகுதி > பாதி)

கிராமம் போட்டு வாழ்ந்தவர்கள்:  கம்+போடு+ சி + யா>  கம்போட்சியா > கம்போட்ஜா.

குமரிக் கடல்கோளில் தப்பிச்சென்று கமம் அல்லது கிராமம் போட்டவர்கள். ( என்பர்).

நத்தம் என்பது ஓர் ஒட்டுக் கிராமம்.  பல வசதிகளும் உள்ள பெரிய கிராமத்தை ஒட்டியுள்ள சின்னஞ் சிறு ஊர்.  நத்துதல் - ஒட்டியிருத்தல்.

நத்து > நத்தை.
நத்து > நத்தம்.  (ஊர்ப்பெயர்:  இடையநத்தம்).

நத்தி வாழ்தல் >  அண்டி வாழ்தல்.

தண்செய் > தஞ்சை (ஊர்பெயர்).   ஆற்றுப்பாய்ச்சலால் தண்மை பெற்ற ஊர்.   செய் என்பது நிலம்.  நன்செய், புன்செய் முதலிய காண்க.
ஆனால் அங்கு அரசனின் மரணதண்டனை பெற்ற கைதிகளுக்கு  அது தம்+ சாவு+ ஊர் = தஞ்சாவூர்  ஆய்விடும்.( சோழப்பேரரசர்கள் காலத்தில்)

அடுத்து உரையாடுவோம்.


  • தட்டச்சுப் பிழை  காணின்  - பின் திருத்தம்.

திங்கள், 30 டிசம்பர், 2019

இருபது இருபதே வந்திடுவாய்!

ஆண்டுகளில் இந்த இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்  னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடுவோம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

This post was hacked
இது சரி செய்யப்பட்டுள்ளது 

புத்தாண்டே வருக test repeat

ஆண்டுகளில் இந்த. இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடு வோ ம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
 வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

புத்தாண்டில் எமக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக
கள்ளமென்பொருளை அனுப்பிச் சில [பிழைகளைப் 
புகுத்திய கெட்டிக்காரர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.  
திருத்தினாலும் பிழை  மீண்டும் தன்னை நிலைநாட்டிக்
கொள்வதுதான் இதில் சிறப்பு ஆகும்.
போர்வெறி சாடுவோம் என்பதைப்  போர்வெறி நாடுவோம்
என்று மாற்றியது என்னே திறமை  அடடா.......

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

வெளியிடாத சிறு கவிதை

முன் எழுதி வெளியிடாத ஒரு கவிதையை இப்போது பதிவு செய்கிறேன்.  படிதது  மகிழுங்கள்.


கலகம் செய்யும் மனப்பாங்கு
கல்லெடுத் தெறியும் குள்ளமனம்
உலகம் வியந்த சுதந்திரத்தை
ஒதுக்கி வீசுதற்  கொப்பாகும்.

நிலவும் வேற்றுமை  எதுவேனும்
 கலந்து நின்று   முடிவெடுத்தே
அல்லன மாற்றி நல்லனவே
ஆக்கும் நெறியே அடைந்திடுவீர்





சனி, 28 டிசம்பர், 2019

விபுலாந்த அடிகள். பேராசிரியர்.

விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர்.  இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!

இப்போது அதைக் கூறுவோம்.


விழுமிய புலம்  =  சிறந்த நாடு.  விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.

இதைச் சுருக்கி  விழுபுலம் எனல்.

அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.

விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன.  இன்னும் இது ு  சொற்றொடர்தான்.

விழுபுலம் >  விபுலம்.  இப்போது ஒரு சொல்லாய் விட்டது.  இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.

ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:

ஆ+ நன்று + அம்  என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.

நன்று என்பது நல்+ து >  நன்+து  என்பதுதான்.

நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே.  நல்+து = நற்று  என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று  நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.

நன் து என்பது  நந்து அல்லது நன்-து என்றும் வரலாம்.  முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன.  சிந்து என்பதும் அதுபோல.   சின்= சிறிய.  து விகுதி.  சில் > சின் ( ந்  ).  சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும்  ல் -ந் ஆகும்.

நன்று -  நற்று போல சிற்று  என்றும் ஒரு சொல் உள்ளது.  சில்+ து = சிற்று.

எனவே  ஆனந்தம் என்பது  ஆ + நல்(நன்) + து +அம்  அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு.  உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.

விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது  பொருள்.

நாமும்  ஆ+நன்+து+அம் காண்கிறோம்.

குறிப்பு

உறுபொருள் -  original or etymological meaning
பெறுபொருள்-  derived  meaning



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதும்போதே இடுகைகள் மறைந்து மீளாமற் போவதால் தட்டச்சுப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை, வெளியிட்ட பின் திருத்தலாம் என்றே வெளியிடவேண்டியுள்ளது. பிழைபொறுத்து நலம் நண்ணுவீராக.  எமக்குக் கரைச்சலுக்குக் குறைச்சல் இல்லை என்றாலும் தளர்ச்சி ஒன்றுமில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

 

 


செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரத்து > ரத்து இன்னும் சில விளக்கம்.

ரத்து அல்லது இரத்து என்பதை அறிவோம்.

இறுதல் என்றால் முடிதல்.  இதிலிருந்து தோன்றிய எச்ச வினைகள்  :  இற்று :  இது வினை எச்சம்.  இற்றுப் போயிற்று என்பர்.  பெரும்பாலும் இரும்புப் பொருள் பற்றிப் பேசுகையில் இச்சொல் பயன்படும். (  சட்டியில் தூர் இற்றுப் போய்விட்டது என்பது காண்க.)   இற்ற என்பது பெயரெச்சம்.  மூவசைகளால் இற்ற இறுதியடி என்பது காண்க.  பெயரெச்சம் பெயரைத் தழுவி நிற்பது. வினையெச்சம் வினையைத் தழுவி நிற்பது.

இறு என்ற வினைச்சொல் தி  விகுதி பெற்று இறுதி என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.   சவ  ஊர்வலம் இறுதி ஊர்வலம் எனப்படும்.   மாநிலங்கள் அவையில் இறுதிக் கூட்டம் என்பது காண்க.

ரத்து என்பது து என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உண்டாகும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.  தொழில் என்றது இங்கு வினைச்சொல்லை.

இறு+ து >  (  இறு+ த் + து )  >   இரத்து  > ரத்து.

இச்சொல் திரிபு அடைந்துள்ளது.  விகுதி வந்து புணர, ஒரு தகர ஒற்று (த்) தோன்றியது.  பகுதியின் ஈற்றில் நின்ற றுகரம் றகரமாக மாறிப் பின் ரகரமாகத் திரிந்துள்ளது.  இரவு என்பது ராவு என்று தலையிழந்து முதல் நீண்டு பேச்சு வழக்கில் வருவது போல, இரத்து என்பது தலையிழந்து நல்ல வேளையாக முதலெழுத்து நீளாமல் ரத்து என்று நின்றுவிட்டது.

இதைப் பாருங்கள்:

இரக்கமுள்ள ஆய்  (  அதாவது அம்மன் ) :  இரக்க ஆய் >  இரக்க ஆயி > ராக்காயி.  தலையிழந்து முதல் நீண்டுவிட்டது.  இரக்கமுள்ள அம்மா > இரக்க அம்மா > ராக்கம்மா.

இரவில் வந்து கடிக்கும் ஒரு சிறுவகைக் கொசு இராக்கடிச்சி > இராக்கச்சி > இராக்காச்சி.  நடுவில் வந்த டி என்னும் வல்லெழுத்து மறைவு. கச்சி காச்சி ஆனாலும் கா(ய்)ச்சுவதற்கு ஒன்றுமில்லை.  ராக்காச்சி என்பது தலையிழந்த சொல்.

கேடு > கே > கேது  (   இராசிநாதன் பெயர் அல்லது கிரகத்தின் பெயர்).
பீடுமன்(னன்)  > பீமன் > வீமன்.

கேடுது >  கேது
பீடுமன் > பீமன் என்றும் காட்டலாம்.

வல்லெழுத்து மறைவு கண்டீர்.

இரக்கம் என்பது ரட்சம் என்று மாறும்.  பக்கி என்பது பட்சி என்று மாறும்.

ரட்ச ரட்ச ஜெகன்மாதா......

அருட்பெரும் உலக அம்மை.

இரக்கம் > ரக்கம் > ரட்சம் > ரட்சித்தல்.

ரட்சகர் ஏசு என்ப.

எனவே

இறத்து > இரத்து > ரத்து.

இறு என்பது இர என்று மாறுதல்போல்  வரு + து > வரத்து (போக்குவரத்து )  என்றும் திரிதல் காண்க.

சின்னாளில் மறுபார்வை