செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மகுடம் வந்தது சிற்றூர்ப் பேச்சிலிருந்து.


மகுடம் காத்தவர் என் மணாளர் என்றால் கொஞ்சம் ோனைகள் வந்து வாக்கியம் அழகுடன் தொனிக்கிறது. மகுடம் என்ற சொல் எவ்வாறு விளைந்தது என்பதை நாம் அறிவோம்.

ஒரு குடம் போல் இல்லாமல் சற்றே வேலைப்பாடுகளுடன் பொன்னும் மணியும் பதித்துத் தலையில் வைத்துக்கொண்டாலே அரசன் மணிமுடி தரித்திருக்கிறான் என்று மக்கள் உயர்த்திப் போற்றுவர். இப்படிப் போற்றாமல் திமிருடன் : என்ன தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வருகிறான் என்று எவனாவது வாயில் காப்பவன் பேசினால் அவன் தலைபோய்விடும். மகுடத்துக்குப் போட்டி போடுகிறவன், “ முடியா சூடிவிட்டான் இவன்? இவன் தலையில் வைத்திருக்கும் குடத்தை இறக்கி அதை உடைத்துக்காட்டுகிறேன்" என்று கொக்கரித்தால் அதைக் கேட்போர் அரச பதவிக்குப் போட்டி உள்ளது என்று பேசிக்கொள்வார்கள். அரச முடிசூட்டுக்களின் போது இவ்வாறெல்லாம் உரையாட்டுகள் பண்டைக் காலங்களில் நடந்திருக்கலாம்; ஆனால் அப்போது நாம் அங்கில்லை ஆதலால் நாம் அதை இப்போது கற்பனைக் கண்கொண்டே பார்க்கவியலும்.

ஆனால் மகுடம் என்பது மண்டைக்குடம் என்பதன் குறுக்கம்தான். இதைப் புனைந்து அல்லது  பொறுக்கி எடுத்துச் சுருக்கித் தந்தவன் அறிவாளி.

மண்டைக்குடம் > (ண்டைக்)குடம் > மகுடம். இடைக்குறை.

இரண்டு மூன்று எழுத்துக்களை மாற்றியவுடன் சொல்லுக்கு மவுசு வந்துவிட்டாது. மா + பூசு > மா +( ப் )> ஊசு> மாவூசு > மவுசு. ( அழகுறுத்தல் ). மா என்பது ம என்று குறுகிற்று. ப் என்ற எழுத்தை எடுத்துவிட்டபின் நெடில்கள் குறுக்கம் பெற்றன.
 

அல்லது 

மாவு பூசு >  மாவுசு  > மவுசு.  
மா என்பது குறுகிற்று.
பூ என்பது வெட்டுண்டது.

மகுடம்:

தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் என்ற சிற்றூர் நையாண்டிப் பேச்சிலிருந்து வந்தது.

மாவுபூசிய சொற்கள் பற்பல.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனமுறும்.

குறிப்பு
மோனைகள் - முழு  வாக்கிய த் தில் எதுகைகள் உள்ளன. அவை விடப்பட்டன.

கருத்துகள் இல்லை: