சனி, 15 பிப்ரவரி, 2020

மகுடியும் அதை ஊதுதலும்.

இன்று மகுடி என்ற சொல்லை அறிவோம்.

பாம்புக்கு மகுடி ஊதியவுடன் அது இசைக்கேற்ப ஆடத் தொடங்கிவிடுகிறது என்று சொல்வர்.  ஓசையின் எழுச்சியைப் பாம்பு உணர்ந்தாலும் இசையை நுகர அதற்குச் செவி தனியாக அமையவில்லை என்பர்.  கண்ணும் செவியும் ஒன்றாக உள்ளமையின் பாம்புக்குக் " கட்செவி" என்ற பெயரும் உள்ளது.

எனினும் நம் கவிஞர் பெருமக்கள் இசை கேட்டு நாகம் ஆடுவதாகச் சொல்வர். உடுமலை நாராயணக் கவிராயரின் " இசைக்கலையே இனிதாமே" என்ற பாடலில் இசைகேட்டு பொல்லாத நாகமும்  ஆடுமென்பார்.  இசையின் மேன்மையை உணர்விக்க இவ்வாறு கூறுவர்.

மகுடி என்ற சொல் மகுடம் என்ற சொல்லினின்று திரித்து எடுக்கப்பெற்றது ஆகும்.  மகுடியிலும் ஒரு சிறு குடம்போன்ற உறுப்பு குழாயில் உள்ளது காணலாம்.

மகுடம் என்ற சொல்லின் அமைப்பு ஈண்டு காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_11.html

மகுடி என்றால் மகுடத்தை உடைய ஊதுகுழாய் என்று பொருள்.

மகுடி என்ற சொல் மோடி என்றும் திரியும்.

தேடி வந்தேனே புள்ளி மானே
மோடி செய்யலாமோ என் தேனே தானே

என்பது பழைய நாடகப் பாட்டு.

மகுடாதிபதி என்ற கூட்டுச்சொல்லும் உள்ளது.

அறிந்தின்புறுக.

எழுத்துத் திரிபுகள் ( பிழைகள் ) புகின் திருத்தம் பின்.

 

கருத்துகள் இல்லை: