வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஊரும் பேரும். ( கிராமம், காராகிரகம், கிரகம், கிருகம், நத்தம் பிறவும்)


  1. முன் காலங்களில் வெளிச்சமும் காற்றுவசதியும் இல்லாத அறைகளில் கைதிகளைப் பூட்டிவைத்தனர் என்று அறிகிறோம்.   அதனால் காராகிரகம்" என்ற சொற்புனைவு தோன்றிற்று.  இது:


கார்  +  ஆகு + இரு + அகம்

என்னும் நான்'கு சிறு சொற்கள் இணைந்த புனைவு ஆகும்.

கார் :  கருப்பு.    கரு என்பது  கார் என்று திரியும்.  கார்முகில் என்பதுகாண்க.
ஆகு என்பது ஒரு வினைச்சொல்.
இரு  ( இருத்தல், வினைச்சொல்)
அகம்  - இடம், வீடு.

இச்சொல்லிலிருந்து  "கிரகம்" என்ற சொல்லைத் தனிச்சொல்லாக்க ஓர் உந்துதல் வந்தது..

இருக்குமிடம் என்னும் பொருளில்  இரு+ அகம் = இரகம் என்பது கிரகம் எனத் திரிதற்கு இஃது வழிவகுத்தது.

கிரு +  அகம் >  கிரு+ கம் >  கிருகம்  என்பது இன்னொரு புனைவு.

மா+ உலகம் என்பது   மா+ கம் என்று பகவொட்டு ஆனது.   மாக விசும்பு : விண்வெளி,    மா உலகம் என்பதில்  உல என்பது களைவுற்றது.

மக்கள் இருப்பதற்கு இடம் என்னும் பொருளில்   இரு+ ஆகும் + அம்  =  இரு+ ஆம் + அம் =  இராமம் > கிராமம் என்றுமாகும்.

பண்டைத்தமிழில்  "கம்"  > கமம் என்பதும் கிராமம் அல்லது சிற்றூர் குறித்தது.

க என்பது கிர என்று அயலில் திரியும்.

க > கிர > கிரா > கிராமம் என்று திரிதலும் கூடும்.  கமம் > கமா என்பது "காமா" என்று சிங்கள மொழியில் திரிந்தது.  கத்ரிகாமா.  இன்னும் "கதிர்காமம்". இராமம் என்பது கிராமம் என்றுமாதல் கூடும்.  ஆதலின் இது இருபிறப்பிச் சொல்

கம்+ போங்க்  என்ற தென் கிழக்காசியச் சொல்லிலும்  கம் உள்ளது.

புகுதல் என்பது மணமாகிப் புகுதல் அல்லது சென்று வாழ்தல்.

புகும் கமம்  >   கம் + புகும் > கம்பூங்க் > கம்போங்க் என்பது மறுதலைப் புனைவு.

கம் என்ற பழஞ்சொல்,   கண் >  கம் என்று விளைந்த சொல்.  கண் என்பது இடம்.  ண்>ம் ஆதல் மட்டுமின்றி,  கண்> கணம் , இடைக்குறைந்து  கம் என்றுமாகும்.  ஆதலின் கம் என்பது தமிழே   ஆகும்.

பல தென் கிழக்காசிய மொழிகளில் மண்டிங்க்  அல்லது திராவிட  ( தமிழ் இனமொழி) ச் சொற்கள் உள்ளன என்று பிறரும் கருதியுள்ளனர்.  ( வின்டர்ஸ் என்னும் ஆய்வாளர் உரை).

தவளை என்ற சொல்லும் தென் கிழக்கு ஆசியாவில் வழங்கும்.  தாவு + அளை = தவளை,  நெடிற்குறுக்கம்.  தோண்டு> தொண்டை,  சாவு > சவம் , கூம்பு > கும்பம்,  கூடு >  குடும்பு, குடும்பம்;  கூவு > குயில்,   காழ் > கழுதை  என்பன காண்க.

குமரி> குமர் > கிமர்  .

கம் + புகு + சி + யா > கம்பூச்சியா.   ( எ-டு:  பகு> பா:   பகுதி > பாதி)

கிராமம் போட்டு வாழ்ந்தவர்கள்:  கம்+போடு+ சி + யா>  கம்போட்சியா > கம்போட்ஜா.

குமரிக் கடல்கோளில் தப்பிச்சென்று கமம் அல்லது கிராமம் போட்டவர்கள். ( என்பர்).

நத்தம் என்பது ஓர் ஒட்டுக் கிராமம்.  பல வசதிகளும் உள்ள பெரிய கிராமத்தை ஒட்டியுள்ள சின்னஞ் சிறு ஊர்.  நத்துதல் - ஒட்டியிருத்தல்.

நத்து > நத்தை.
நத்து > நத்தம்.  (ஊர்ப்பெயர்:  இடையநத்தம்).

நத்தி வாழ்தல் >  அண்டி வாழ்தல்.

தண்செய் > தஞ்சை (ஊர்பெயர்).   ஆற்றுப்பாய்ச்சலால் தண்மை பெற்ற ஊர்.   செய் என்பது நிலம்.  நன்செய், புன்செய் முதலிய காண்க.
ஆனால் அங்கு அரசனின் மரணதண்டனை பெற்ற கைதிகளுக்கு  அது தம்+ சாவு+ ஊர் = தஞ்சாவூர்  ஆய்விடும்.( சோழப்பேரரசர்கள் காலத்தில்)

அடுத்து உரையாடுவோம்.


  • தட்டச்சுப் பிழை  காணின்  - பின் திருத்தம்.

கருத்துகள் இல்லை: