சனி, 4 ஜனவரி, 2020

நிந்தனையும் நீயெனலும்

( இவ்விடுகையில் ஒரு பகுதி காணாமற்  போயிற்று.  ஆகவ பின் எழுதிச் சேர்க்கப்பட்டவை இதில் உள்ளன. ச்   அதன்பின் காணாமற் போனதும் கண்டுபிடிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது எனினும்  அப்பகுதி தனியாக வெளியிடப்படும்.  அதாவது இங்கு சேர்க்கப்படவில்லை. கள்ள மென்பொருள் நுழைவும் கடவாணைபெறார் புகவும் அறிந்து வருந்துகிறோம். )

Inconvenience to readers regretted.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

TEXT OF THE POST.

நம்மினும் மூத்த பெருமக்களை , முன்நின்று உரையாடும் போது -   நீங்கள் என்றுதான் சுட்டவேண்டும்; "நீ" எனல் பணிவு  அல்லது மரியாதைக் குறைவு என்பது நம் பண்பாட்டு விதியாய் உள்ளது.

இப்பண்பாட்டு விதியினின்றே நிந்தனை என்னும் சொல் தோன்றியுள்ளது.

மூத்த பெருமக்களில் ஒருவர் நீ என்று குறிப்பதை இழித்தலுக்கு ஒப்பாகக்  கரு
தினார். பிறரும் அன்னர்.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் பிற இனத்தாரிடமும் காணப்படுகின்றன.  மலாய் மொழியில் "லூ"( நீ)  எனலாகாது. முன்னிலைப் பணிவை 'அண்டா"  என்று  தான் சொல்லவேண்டும்.  வயதிற் குறைந்தோர் பெரியோர்முன் செல்லும்போது குனிந்தவாறு பணிவினைத் தெரிவித்துக்கொண்டுதான் கடந் து செல்ல வேண்டும்.

நீ என்ற சொல் ஒரு  து விகுதிபெற்று முதனிலை குறுகி " நிந்து" என்றாகி,  பின்னும் ஒரு வினைச் சொல்லாக்க    விகுதியாகிய "இ" என்பதை மேற்கொண்டு நிந்தி என்றாகி நிந்தித்தல் ஆனது.

நிந்தனை என்பது  'நிந்தி' + அன் + ஐ' என்பன புணர்வுற்ற சொல்.  அன் என்பது இடை நிலை ஆகும்.

நீ  என்பதென்ன?  தன்னின் நீங்கிய நிலையே "நீ"  ஆகும்.  நீக்கக் கருத்து.
இதிலிருந்தே பேசுவோன் தன் பண்பினின்றும் நீங்கியதையும் தான் இழிந்ததையும் பிறரை  இழித்ததையும் குறித்துப் பொருள் விரிந்தது.

இதேபோல் "நம்"  என்பதிலிருந்து நம்பு என்ற சொல் தோன்றியதும் காண்க.

ஒப்பீடு: (சொல்லமைப்பு)



நாம் > நம் > நம்பு (வினையாக்க விகுதி "பு") > ( நம்புதல்)
நீ > நின் > நிந்து ( து விகுதி ) > நிந்தி ( இ வினையாக்க விகுதி) > ( நிந்தித்தல் ).



பிறனின் எண்ணத்தைத் தனதாக்கி (நமதாக்கிக்) கொள்ளுதலே நம்புதல். நம்புதல் என்ற சொல்லமைந்தபின் கருத்தமைப்பில் ஒருமை ( தான் ) பன்மை ( நாம் ) என்பன தேவையற்றவை. தேவையானது நாவுரையைச் செவிப்பட்டார் ஏற்பு என்பதொன்றே.



சந்தித்திரிபுகள்:



நின்+து > நிந்து என்பதும் புணர்ச்சியில் பின் > பிந்து > பிந்துதல், முன்> முந்து> முந்துதல் என்பனவற்றின் அமைப்பைப் பின்பற்றியவேயாம்.  முன்> முந்து > முந்திரி, மன் > மன்+ து + இரு + > மந்திரி ( அரசனுடன் நிரந்தரமாய் நின்று ஆலோசனை வழங்கும் பெரிய அலுவலர் ) என்பன காண்க. மன்னுதல் - நிலையாய் இருத்தல். முன்னுதல் பின் மன்னுதலாய்த் திரிந்தது என்றும் அறிஞர் கூறியதுண்டு. சில் > சின் > சின்+து > சிந்து ( சிறு கவி )( சிறு நூல் நெயவு என்றும் கூறுப) என்பதுமது. பல் ( பலர் ) + தி > பன் தி > பந்தி ( பலர் உண்ணும் நிகழ்வு ) என்பதும் அறிக.



நின் + தி : நின்னை ( உன்னைத்) திட்டுதல் என்று சொல்லவும் வழியுள்ளது.


கருத்துகள் இல்லை: