இன்று பிரபலம் என்ற திரிபுச்சொல்லைக் காண்போம்.. இதைத் திரிசொல் என்று சொன்னாலும், திரிபுச்சொல் என்றாலும் பொருள் ஒன்றுதான்.
சிலர் தம் குடுப்பத்திலே நன் கு மதிக்கப்பட்டு, சிறப்புடன் வாழ்வர். வெளியாரில் சிலரும் இத்தகையோரை அறிந்திருப்பர். சிலர் அகத்தும் புறத்தும் மிக்க அரிய புகழை அடைந்து, நாடறிந்த நல்லவராக இருப்பர். இவரை மிக்கப் பிரபலமானவர் என்று சொல்வர்.
அறிமுக நிலை மிக்க விரிவடைந்து, மிக்கப்பகழுடன் இருத்தலே பிரபலம் என்பதறிந்தோம். இத்தகையோரின் பின்பு, பெருந்திரளாக மக்கள் இருப்பர். இந்தச் சொல்லும் நம் ஆய்வில் தமிழே ஆகும். பிறர், பலர் என்ற சொற்களின் அடிப்படையில் அமைந்ததே இது.
பிறர் பலர் > பிரபலம்.
குடும்பத்திலிருதோர் இருப்போர் மட்டுமின்றிப் பிறர்பலரும் அறிந்த நபர் என்று வரையறை செய்யவேண்டும்.
திரிசொற்களை அவை தமிழ் மூலமுடையன வாயினும் சமஸ்கிருதம் என்று வகைப்படுத்தியது சரியென்றே சொல்க. இதற்குக் காரணம் திரிசொற்கள் சமஸ்கிருத்திலிருந்தால் அதை தமிழ்ப்புலவர் எவரும் இலக்கணம் பேசி மறுக்கமாட்டார், தொல்லையும் குறைந்தது . பாணினி என்ற பாணர், இதற்குத் தனியாக இலக்கணம் வகுத்துவிட்டதால், அந்தத் தொல்லை ஒழிந்தது. தமிழ்ச் சொல்லமைப்பில், ஆதியில் எவ்வாறு தமிழ் வளர்ந்திருந்தாலு, அகத்தியர் தொல்காப்பியர் ஆகியோருக்குப் பின்வந்த காலத்தில், தமிழறிவு மேம்பட்டமையினால் இலக்கம் எழுதியோரும் பேசியோரும் கவிதைப் புலமையைக் கொண்டு, சரிதவறு சொல்வோர் கூட்டம் விரிந்துவிட்டது. இவர்களிடம் இரண்டும் இருகண்கள் என்றோ, சமஸ்கிருதமே முந்தியது என்றோ சொல்லிவிட்டால் வாய்மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். வடக்கே தோன்றிய முந்தைய மொழி என்று சொல்வதை வாதம் செய்ய இவர்கள் போன்று கேட்போர் சொல்லாய்வு நிபுணர்களா என்ன?
உண்மையில் இவ்வாறு சொல்வதிலும் உண்மை உள்ளது. உங்கள் வீட்டுச் சட்டியில் பழைய மற்றும் ஓரளவே பழகிய சட்டி பழம்பெருமை உடையதா, போனவாரம் வாங்கியது பழம்பெருமை உடையதா என்றால் பழம் பெருமை உடையது பழையதே ஆகும். ஆனால் சொற்களில் இது எளிதில் அறியத் தக்கதாய் இல்லை. எது திரிசொல், எது இயற்சொல் என்பது சாதாரணப் பண்டிதனுக்குத் தெரிவதில்லை. அவன் சில பட்டங்கள் பெற்றிருந்தாலும் தெரிவதில்லை. எப்படியாயினும், சொற்களைப் பயன்படுத்திப் பொருளை அறிவிப்பதுதான் பேசுவதன் நோக்கம்.
தொல்காப்பியம் நூற்பா சொல் 394:
மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா
தெரியவேண்டுமே!
மொழியைப் பயன்படுத்துகையில் சில கலந்து பேசினாலும் மரணம் ஏற்பட்டுவிடாது.
ஆனால் கவிதை, உரைநடை ஆகியவற்றைக் கையாளும்போது, கவனமாக இருக்கவேண்டும் என்பதே உண்மை.
ஆனால் தமிழும் சமஸ்கிருதமும் மிகப் பழையவை. ஒரு திரிசொல், திரிவதற்குப் பலகாலம் ஆகவேண்டும். இயற்சொற்கள் திரிந்துதான் திரிசொற்கள் உண்டாகின்றன. ஒன்று இயற்சொல்லாய் இருந்து பின்னர்தான் திரிகிறது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக