செவ்வாய், 5 டிசம்பர், 2017

பாவம் இவர்கள்!



கருகிப்போன கட்சியொன்று
மெருகூட்டி மீள்விக்க,
உருகிப்போன உள்ளமுடன்
ஒருவர்போய்த் தலைவரானார்.

யாரும்போய்த் தாருமென்று
கூறும்போட்டிக் கேறவில்லை.
யார்சென்றும் சேராக்கட்சி
யார்வந்தும் தேருமாமோ?

அணைந்துபோன திரியுமங்கே
புகைந்தெழுந்தே எரிவதுண்டோ!

இவர்கள் பாவம்.

கருத்துகள் இல்லை: