ஞாயிறு, 3 டிசம்பர், 2017

ஓடை ( கவிதை, அரும்பொருள்)

“ஓடை” கவிதைக்கு விளக்கம்.

அருஞ்சொற்பொருள்
மேல் இடுகையில் .........
http://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_2.html
............உள்ள ஓடை என்னும் கவிதைக்கு விளக்கம்.
(டென்னிசனின் ஆங்கிலக் கவிதையை ஒட்டியது )

பணிவான : மெல்ல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, தனக்குப்

பணிவு காட்டுகதாகக் கூறுவது கற்பனை

பைய நீ கடலுக்கு ஏகு= மெதுவாக நீ கடலுக்குச் செல்க; அணி குளிர் ஒடை = அழகிய குளிரோடையே!

நல்லோடை = நல்லோடையாய்;

கரையோர மரம்க லங்கும்! - இங்கு கவிஞன், ஓடை மரத்தையும் அழைத்துச் செல்லாமல் தானே ஓடுவதனால், மரம் கலக்கம் அடைவதாகக் கற்பனை செய்கிறான்.

வெண்தளிர் : இது “ஆஸ்பன்” (aspen) என்ற ஒருதளிர் வகை; வெண்மை நிறமுடையது.

அலங்கும் =” கவலைப்படும்.” (Tennyson: to quiver). பிரிவு ஆற்றாமை காரணம். alangku-tal 1. to move, shake, swing, dangle, to be in motion; 2. to be agitated in mind, troubled.

துடித்தது எனில் மிகையாம்.
முரலும் = ரீங்காரம் செய்யும்; மருங்கில் =( உன்) பக்கத்தில் அல்லது அருகில்.

ஆயிரம் ஒளியாய் = ஆயிரம் அல்லது பல இடங்களில் தோன்றுவது;
எல்லோன் = சூரியன்.

அடிகள் இங்கு அகல்வேன் அல்லேன் = என் காலடிகள்
எடுத்துவைத்து இங்கிருந்து உன்னுடன் வரமாட்டேன்.







என்றவாறு:  இது அப்போதே வெளியிடப்பட்ட பொருளுரை.  படித்து
மகிழுங்கள்.

கருத்துகள் இல்லை: