செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஆர் விகுதி காட்டும் மதிப்பும் ஆரியன் என்ற சொல்லும்.

ஆரியன் என்ற சொல்லை ஆய்ந்துகொண்டிருக்கையில்
தமிழில் ஆர் விகுதியும் அர் விகுதியும் என்முன் தோன்றுவதை
உணர்ந்தேன்.   ஆர் என்பதனுடன் ஏர் எரு என்ற சொற்களும்
வந்து நின்றன.

பண்டைக் குமுகங்களில் ஏர்த்தொழிலே பெரிதும் 
போற்றற்குரித்தாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது. 
இதற்கு என்ன காரணம் என்பது தெளிவு. நிலையாக 
ஓரிடத்து வாழ்தலைத் தொடங்கிய மனிதன், தனக்கு 
வேண்டிய உணவினைத் தானே படைத்துக்கொண்டு, 
அத்தொழிலில் ஈடுபடாத பிற தொழில்  மேற்
கொண்டோர்க்கும் அளித்தான். அதனால் ஏரையும்
உழவரையும் பிறர்போற்றி உயர்ந்தோராகக் கருதினர்.
("தொழுதுண்டு பின்செல்லுதல்")

ஆதியில் தோள்வலிமை உடையோர், ஏர்த்தொழில
ரிடமிருந்துநெல் முதலியவற்றை மிரட்டி வாங்கி யுண்டனர்.
இதுபின் சற்று மென்மையாகி விளைச்சலில் ஒரு பகுதியை
ஒப்புவிக்க வேண்டும் என்று விதித்தனர். ஒன்றும் 
செய்யாதார்க்கு உழவன் பங்கு தரவேண்டியதாயிற்று.
உழவனுக்கு வேறு வழிகள் இல்லை. (வரிவிதிப்பு
தொடக்கம் )

இதிலும் போட்டி ஏற்பட்டது. தனக்கு வரவேண்டிய 
பங்கினை, பிறருக்குச் சென்றுவிடாமல் வலிமையுடை
யோன் காத்து, பின் பங்கை எடுத்துக்கொண்டான்.
அரசனாலும் காவலாளிகளாலும் வந்த நன்மை இதுதான். 
இதுவே இன்று பலவித நிறுவாகங்களாக நிலைபெற்று
உள்ளன. ( நிறுவாகங்கள் தோன்றுதல்)

இதை இங்கு கூறக்காரணம் யாதென்றால், ஆர் -ஏர் 
என்பன எப்படி மதிப்பு நிலையை அடைந்து உயர்வு
குறித்தன என்பதை விளக்குவதற்கே.

இந்த வளர்தமைந்த உயர்வு பிற்கால வரலாற்றில், 
உழவரிடமிருந்து அரசர், பூசாரிகள் முதலியோருக்கு
மாற்றப்பட்டது. இதுவே குமுகத்தில் ஏற்பட்ட ஒரு
புரட்சி ஆகும்.

தமிழில் ஆர்  அர் விகுதிகள் பன்மையையும் மதிப்பையும் 
ஒருங்கு சுட்டுவதற்கு இதுவே காரணம்.

வந்தான் (ஓருமை, மதிப்பு இன்மை)
வந்தார் (பன்மை மற்றும் பணிவு , மரியாதை).  ஆர் என்பது
மதிப்பு ஆகும்.

பழ நூல்களில் ஆரிய என்று வருவதை வெளியிலிருந்து
வந்தவர்களைக் குறிப்பதாக வெள்ளைக்காரன் எழுதி
வைத்திருப்பது அவன் தமிழ் மொழியை ஆராயாமையே
காரணம்.

இப்போது நீங்கள் இதனைப் படித்து மேலும் அறிக.
இதுவும் எம் வரைவே ஆகும்.

சொடுக்கவும்:

கருத்துகள் இல்லை: