சனி, 2 டிசம்பர், 2017

ஓடை


ஓடை


பணிவான அலைகள் கண்டேன்
பாய்ந்துநீ கடலுக் கேகு!
அணிகுளிர்  ஓடை உன்றன்
அடிகளைத் தொடர்தல் இல்லேன்.

மெல்லநீ  ஒழுகு  வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்;
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

கரையோர மரம்க லங்கும்!
காணும்வெண் தளிர லங்கும்!
முரலும்வண் டுன்ம ருங்கில்,
முன்செல்க தொடர்தல் இல்லேன்.

ஆயிரம் ஒளிபாய் எல்லோன்;
ஆயிரம் நிலவும் இலங்கும்!
ஆயின் நான் தொடர்தல் இல்லேன்
அடிகளிங் ககல்வேன் அல்லேன்.

டென்னிசனின் ஆங்கிலக் கவிதையைத் தழுவியது.
( எழுதிய நாள்:  on )

ஆங்கிலக் கவியின் ஆயிரம் நிலவு என்ற வரணனைக்
கருத்து, நம் திரைப்பாடல் ஆசிரியர்களாலும்  போற்றப்பட்டதே ஆகும்.

பொருளுரைக்குச் சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_3.html 

கருத்துகள் இல்லை: