சனி, 11 ஜூன், 2016

வினோதம். சொல்லினழகு.

விநோதம் என்ற இனிய சொல் நம் தமிழ் மூலங்களிலிருந்து எப்படி அமைந்தது என்பதை இப்போது அறிந்து,  ஞாயிற்றின் ஒளியை வியந்து நுகர்ந்துகொண்டிருக்கும்  இந்த ஞாயிற்றுக் கிழமையில் மனமிக மகிழ்வோம்.

வி =  விழுமியது; வியப்புக் குரியது .  இரண்டும் "வி" என்றஎழுத்தில் தொடங்குவதால்  இது பொருத்தமான குறுக்கம்.  இங்கு முன்னொட்டாகப் பயன்படுகிறது.

நோக்கு என்ற சொல்லில்   இறுதி  "கு" என்பது   ஒரு விகுதி.    மூழ்கு,  (  மூழ் )  ,  பெருகு  (பெரு )    என்பவற்றிலும்  இவ்விகுதி சேர்ந்து சொல்லமைதலைக்  காணலாம்,

எனவே  நோக்கு என்பதில்  "கு" வை  எடுத்துவிட்டால்  மீதம்  "நோ "   இதுவே  அடிச்சொல்.  இந்த அடிச்சொல்லுக்கும்  நோக்குதலே  பொருள்.

வி + நோ +  து +  அம் .

வியந்து  (வி )  நோக்குதலுக்கு (நோ )   உரியது   (து )    அம்  -  விகுதி.   அழகு என்பதும்   ஆகும் .

து என்பது  ஒன்றன்பால் விகுதியும் ஆகும் .

வியந்து நோக்கற்  குரித்தே  வினோதம்.

என்னே இச் சொல்லினழகு.  

கருத்துகள் இல்லை: