சனி, 11 ஜூன், 2016

பிரேதம்

ஒருவர்  இறந்துவிட்டால் .  அவர்தம் உடலைச்   சிலர்  வீட்டுக்குள் வைத்து வேண்டியவற்றைச் செய்கிறார்கள்.

வேறு சிலர் வீட்டுக்கு வெளியில் பந்தல் போட்டு அங்கு கிடத்தி  வைக்கிறார்கள் .

சிலர் வீட்டுமுன் பந்தல் போட்டாலும்,   பிணத்தை வீட்டிலேயே வைத்து, பந்தலில்  வந்தவர்கள்  அமர்ந்திருக்க வழி செய்வர் .

இங்குச்  சீனர்கள் பிணத்தை வெளிப் பந்தலில்தான்  வைத்து,  சடங்குகளைச் செய்கிறார்கள்.

இந்தியாவில் எந்த இடம்  எந்த வகுப்பினர் என்பதைப் பொறுத்து  இருவிதமாகவும்  நடைபெறுவதும் உண்டு என்று  தெரிகிறது.



சென்ற நூற்றாண்டிலோ அதற்கு முன்போ இருந்த பழக்க வழக்கங்கள்

இந்த நூற்றாண்டில் மாறியிருக்கலாம் . ஆகையால் இப்போது நீங்கள்

கடைப்பிடிப்பது நீங்கள் பழமை என்று நினைக்கும் ஒரு புதுமையாய்

இருக்கக் கூடும் . நம்மனோர் இதை எல்லாம் எங்கே எழுதிவைத்தனர்?

இருந்தால் இலக்கியங்களிலிருந்து சலித்து எடுக்கலாம். இல்லாவிட்டால்

வெள்ளைக்காரன் எழுதிவைத்ததைப் படிக்கலாம். இது நிற்க:



சாவு ஒரு தீட்டு.    அதை  ஒதுக்கமாகக்  கவனிக்கவேண்டும்.  மனத்தாலும் செயலாலும் புறத்தே வைக்கவேண்டும் என்பது பொதுவாகத் தமிழர்  கொள்கை  எனில் அது தவறாகாது என்று நினைக்கிறோம் .  நேரம் ஆகிறது, சீக்கிரமாக  எடுங்கள்  என்று  உறவினர் கூவுவதையும் கேட்டிருக்கலாம்.

இவற்றைத் தவறு என்று  சொல்லவில்லை.  நிலைமை அப்படி .

இவனுக்கு இன்னும் கேடு வராமல் உலவிக் கொண்டிருக்கிறானே என்று சொல்லும் வசையில்  கேடு என்பது சாவையே குறித்தது.

ஏதம் என்பது கேடு.    பிணம் ஒரு ஏதம் .   பிணம் புறத்தே கிடத்த வேண்டிய ஏதம்.  அப்படியா?

புற ஏதம்  >  பிரேதம் ஆகிறது.  புலியைப்  பிலி  என்று சொல்லும் பேச்சுத் தமிழர்  அமைத்த திரிபு.   ஏதம் என்பது இப்போது பேச்சு வழக்கில் மறைந்தது.

ஆங்கிலமும் பிறவும் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி விட்ட இற்றை  நாளில் புறமும் ஏதமும் தாக்குப் பிடிக்குமோ?

Paragraphs: justification fault inherent in this editor. We have tried  but  it could not be corrected.

கருத்துகள் இல்லை: