வியாழன், 2 ஜூன், 2016

தக்காளி.

தக்காளி
-----------

தகத்தக என்று  சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்  இருந்து கண்கவர்  காட்சியைத் தருவது தக்காளிப்  பழக்குவியல். இதைக் கண்ட தமிழன், தக என்ற சொல்லினின்று தக்காளி என்ற சொல்லை அமைத்தான்.

தக >  தக+ ஆளி =  தக்காளி.

தகுந்த சத்தினை உடலுக்குத் தருவது  தக்காளி.

தகு+  ஆளி = தக்காளி எனினுமாகும்.

ஆக இது இருபொருத்தமுடைய இருபிறப்பி ஆகும்.

ஆளி, என்பதில்  ஆள்+ இ என்ற  இரு துண்டுகள் உள.

தகத்தக என்ற நிறத்தை ஆள்வது என்ற  பொருளும்,   உடலுக்கு ஊட்டத்தினை மேலோங்கச் செய்வது என்னும்
பொருளும்  உளது.  இ என்பது விகுதியாகும்.

மக என்ற சொல்  மக்கள் என்று புணர்ச்சியில் திரிந்தது கருதத்தக்கது.

கருத்துகள் இல்லை: