திங்கள், 27 ஜூன், 2016

இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்

மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -

தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? -

புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!'  கம்பன் 9931


புனத்தில் ஆடிக் களிக்கும் அழகிய குலம்   சிறந்த   ஈடற்ற மயில்போலும் பெண்ணாய்!
உன் மனம் களிக்க உன்னை மனுவின் பின்னோன்  ஆகிய  இராமனிடம் சேர்க்கும் பணியின் மேலான வேறு பணியும் உளதோ?

இவ்விராமாயணச் செய்யுளில் இராமன் மனுவின் சந்ததி என்பபடுவதாகவும் கூறுவர்/  மனு திராவிட அரசன் என்கிறது மனு நூல்.  அப்படியானால் இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

மனு >  மனு + அவன்  =  மானவன்   :  மனுவின் பின்னோன்

மானவன்  :  மானமுடையோன்  என்றலுமாம் ,

கருத்துகள் இல்லை: