வெள்ளி, 24 ஜூன், 2016

கொலையும் காரணங்களும்

கொலைகள்  பலப்பல  கூறுவர்ஏன்  என்றுபல
கூறாது  மறைவுண்ட  ஊறுதளம்  உண்டுபல
கலையும்  இதுவாமோ கருத்துயர்ந்த மாந்தனுக்கே  
கண்டொழி   தண்டனையும் மரணமென விண்டதுவே

கொலைகள்  பலப்பல -  உலகில்  நடைபெறுங் கொலைக்குற்றங்கள்  அதிகம் .
கூறுவர்ஏன்  என்றுபல -  காரணங்கள்  பல  கூறுவர்  ஆய்வு செயதோர் .
கருத்துயர்ந்த மாந்தனுக்கே  -  பகுத்தறிவுள்ள மனிதனுக்கு
கலையும்  இதுவாமோ  -  காரணங்கள் உரைப்பதுவும்  ஒரு கலைதான் .அன்றோ ?
கூறாது  மறைவுண்ட  -  காரணம் கூறாது மறக்கப்பட்டு நம்  நினைவிலிருந்து
அகன்று போன ;
ஊறுதளம்  உண்டுபல  -   இக்கொலை  நிகழ்வுகள் எழும்      நிலைகளும் '  சார்புகளும் பலவாகும்;
மரணமென விண்டதுவே  ‍ மரணம் என்று சொல்லப்பட்டதுவே;
கண்டொழி   தண்டனையும்  ‍  அவற்றை கண்டுபிடித்து ஒழிக்கும் தண்டனையும் ஆகும் .

But critics have argued that even in countries where death is the only sentence for murder,  it has not been proven to be a deterrent! This the author is aware but not taking any stand on it.

கருத்துகள் இல்லை: