ஞாயிறு, 5 ஜூன், 2016

கண்டனம்

மென்மையாகப்  பேசுதல்,   கடுமையாகப் பேசுதல்,  அன்பாகப் பேசுதல், தெளிவாகப் பேசுதல் என்று பல வகை  சொல்வர்.

இவற்றுள்  கடுமைப் பேச்சினை இப்போது காண்போம்.


கோப்பையைத் தட்டிவிட்டான் என்று தந்தை மகனைக் கடிந்துகொண்டார்  என்பது ஒரு வாக்கியம்.

கடிதல் (, கடிந்துகொள்ளுதல்)  என்பதில்   கடு  என்பதே அடிச்சொல்.

கடு >   கடி. >   கடிதல்.


கடிதல் என்ற சொல்லிலிருந்து கண்டித்தல் என்ற சொல் தோன்றியது.


கடி என்ற சொல்லுக்கு  இடையில் ஒரு  ணகர  ஒற்று .இட்டால் :


கடி  >    கண்டி .   (ண்   தோன்றல் .)

பின்பு:


கண்டி +  அன் +  அம்  =  கண்டனம் .     (அன் - இடைநிலை  ) அம்   விகுதி  பெற்றது

கண்டனை என்ற வடிவம் காணின்  அஃது இறுதியில்  ஐ விகுதி பெற்றது ஆகும்.  வரின் காண்க.


கருத்துகள் இல்லை: