சனி, 20 செப்டம்பர், 2014

"வாகைத் திணை"

அவர் தேர்வில் வாகை சூடி விட்டார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இங்கு  வாகை சூடுதல்  என்றது வெற்றி பெற்றதை.  சில வேளைகளில் தாளிகைகளிலும் இச்சொற்றொடர்  காணப்பெறுவதுண்டு.

பகை அரசர்களை வெற்றிகொண்ட மன்னன் ,  வாகைப்பூ, இலை முதலியன சூடிக்கொண்டு அதனைக் கொண்டாடுவான். அவ்வரசனைப் புலவர் பாடினால், அப்பாடல் "வாகைத் திணை"யின் பாற்படும். வாகைத் திணையிலும் 33 துறைகள்  உள்ளன.

தமிழ் மொழி விரிந்த பொருளிலக்கணம் உடையது.  வேறெந்த மொழியிலும் பொருளிலக்கணம் இருப்பதாகத் தெரியவில்ல . தமிழனும் தமிழும் அத்தகு புகழுக்குரிய  உலகச் செல்வங்கள்.

இதை விளக்கும் கொளுப் பாடலை இப்போது காண்போம்.

இலை புனை வாகை சூடி  இகல் மலைந்து 
அலைகடல் தானை அரசு அட்டு  ஆர்த்தன்று.

அரும்பொருள் 

இலை -  தளிருடன், புனை -  சேர்த்துக் கட்டி,  இகல் மலைந்து  -- பகை நடவடிக்கை மேற்கொண்டு,   கடல் -  கடல்போன்ற;  தானை = படை; 
அரசு அட்டு =  பகை அரசனை  வென்று;  ஆர்த்தன்று =  ஆரவாரித்தது .  

 இப்பாடல் தெளிவாகவே உள்ளது.

அடுத்த  இடுகையில் தொடரும்,  அதுவரை மேலுள்ளவற்றைப் படித்து .இன்புறுங்கள் .

கருத்துகள் இல்லை: