வெள்ளி, 11 ஜூலை, 2014

காதற் கனவு



யாரேனும் வேண்டியவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்போதுதான் நம் சமையல் திறனை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது என்று சொல்லலாம். சுவையாக ஆக்கிப் பரிமாறி இன்புறலாம்.

வந்தது நல்ல கனாவாக இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். நம் இதயத்துக்கு கனியைப் படைத்து மகிழலாம்.  கொஞ்சம் பைத்தியம் வந்துவிட்டால் வாழ்வே சுவையாக மாறிவிடுகிறது.

தெய்வப் புலமைத்  திருவள்ளுவ நாயனாருக்கும் இத்தகு விருந்துகள் இயல்பானவையாகவே தோன்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பாட்டுடைத் தலைவி, தான் கண்ட இன்பக் கனாவுக்கு விருந்து வைக்க முற்படுதல்  கூடுமோ?

கனவில் காதலன் தூது விடுகின்றான். விழித்து எழுந்தவள், தனியே மஞ்சத்தில் இனிய கனவினால் உறக்கம் கலைக்கப்பெற்று, அதனை எண்ணி, இதற்கு என்ன விருந்து வைப்பேனோ வென்று சிந்தனைச் சுழலில் சிக்கிக்கொள்கிறாள். அதுதான் உண்மைக் காதலும் வள்ளுவனார் தந்த இலக்கியக் காதலும் ஆகும்.
அதை இப்போது கண்டு மகிழ்வோம்,

காதலர் தூதொடு  வந்த கனவினுக்கு
யாது  செய்வேன்கொல் விருந்து.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் பாடப்பெற்ற பாடல், உரை தேவையில்லாத அளவுக்கு இன்னும் தெளி நீராய் உள்ளது.

காதற் கனவு


-----------------------------------------



நல்ல கனவுக்கு விருந்து வைக்கவேண்டும்.

யாரேனும் வேண்டியவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்போதுதான் நம் சமையல் திறனை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது என்று சொல்லலாம். சுவையாக ஆக்கிப் பரிமாறி இன்புறலாம்.

வந்தது நல்ல கனாவாக இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். நம் இதயத்துக்கு கனியைப் படைத்து மகிழலாம்.  கொஞ்சம் பைத்தியம் வந்துவிட்டால் வாழ்வே சுவையாக மாறிவிடுகிறது.

தெய்வப் புலமைத்  திருவள்ளுவ நாயனாருக்கும் இத்தகு விருந்துகள் இயல்பானவையாகவே தோன்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பாட்டுடைத் தலைவி, தான் கண்ட இன்பக் கனாவுக்கு விருந்து வைக்க முற்படுதல்  கூடுமோ?

கனவில் காதலன் தூது விடுகின்றான். விழித்து எழுந்தவள், தனியே மஞ்சத்தில் இனிய கனவினால் உறக்கம் கலைக்கப்பெற்று, அதனை எண்ணி, இதற்கு என்ன விருந்து வைப்பேனோ வென்று சிந்தனைச் சுழலில் சிக்கிக்கொள்கிறாள். அதுதான் உண்மைக் காதலும் வள்ளுவனார் தந்த இலக்கியக் காதலும் ஆகும்.
அதை இப்போது கண்டு மகிழ்வோம்,

காதலர் தூதொடு  வந்த கனவினுக்கு
யாது  செய்வேன்கொல் விருந்து.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் பாடப்பெற்ற பாடல், உரை தேவையில்லாத அளவுக்கு இன்னும் தெளி நீராய் உள்ளது.

(இதை நான் வெண்பா அசைசீர் பிரித்து எழுதவில்லை. வேண்டின் நீங்களே வகையுளி செய்துகொள்ளுங்கள்.  குற்றிகர இலக்கணம் இப்போது வேண்டாம்

கருத்துகள் இல்லை: