செவ்வாய், 29 ஜூலை, 2014

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு,,,,,,,,,,,,,,,,,,,,

இது முன் இடுகையின் தொடர்ச்சி .

முன் இடுகை:    http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html

மன்னிய பெரும்புகழ் = மாறாத (நிலைத்த)  விரிந்த புகழும்
 மறுவில் வாய்மொழி =  குற்றங் குறை இல்லாத சொல்லாடலும்  ;

இன்னிசை முரசின் =  இனிமையான  இசைக்குத் ;தாளக்கருவி வாசிக்கும் குழுவினரையும் உடைய ;
உதியஞ் சேரற்கு -  உதியன் சேரலென்ற மன்னற்கு,
வெளியன் வேண்மாள்=    வெளியன் என்னும் குறு நில மன்னனின் மகள் ;
நல்லினி ஈன்ற மகன் =  நல்லினி பெற்ற ஆண்பிள்ளை;

அமைவரல் அருவி =   அழகாக ஓடிவந்து விழும் அருவிகளை உடைய ;
இமையம் விற்பொறித்து = இமையம் வரை படை நடத்தி தன்  அரசு (கொடிச்)  சின்னமாகிய வில்லைப் பதித்து;

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க  =  அலை ஒலி எழும் கடலால் சூழப்பெற்ற தமிழகம் புகழப் பெறுமாறு ;
தன்கோல் நிறீஇ =  தன்  செங்கோலை  நிறுவி;

தகை சால் சிறப்பொடு =  தகுதியான நிறைந்த  சிறப்புடன்;

பேரிசை மரபின் = மிக்கப் புகழுடைய வம்மிசத்தில் வந்த ;

ஆரியர் வணக்கி = வட திசை ஆட்சியாளரை அடக்கி அவர்களிடம்  திறை அல்லது  ஈடாகப் பொருள்பெற்று;

பேரிசை -  கொடைகள் பல செய்து,  அது கேட்ட  அல்லது பெற்ற புலவர் பெருமக்கள் பாராட்டிப் பாட, அதன் காரணமாக வந்த பெரும்புகழ் என்க  அவ்வாரியரும் அத்தகு உயர் மரபில் வந்தோரே.  ஆகவே பேரிசை மரபு என்றார்.  "ஈதல்  இசைபட வாழ்தல்" என்பது யாவரும் ஒப்ப முடிந்த கருத்தாகும்.

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து =  சொல் செயல் இவற்றில் நேர்மை குறைந்த கடுமையான பேச்சினை உடைய மேலை நாட்டினரைக் கட்டிவைத்து;  (கைது செய்து )

நயம் - நா நயம் செயல்  நயம் இரண்டும்;


நெய்தலைப் பெய்து =  தலையில் (சூடான) நெய்யை ஊற்றி; ( தண்டனை ஆதலால் சூடான என்பது . வருவித்துரைக்கப் பட்டது; )

(காபி (குளம்பி ) குடித்தான்  எனில் சூடானது குடித்தான் என்பதே பொருள்.அதுபோல )

கைபிற் கொளீஇ  =  கைகளைப் பின்னாகக் கட்டி;

அருவிலை நன்கலம் =  அரிய விலைமதிப்பு உடைய கப்பலை ;

வயிரமொடு கொண்டு  -  அவர்கள் ஏற்றி வைத்திருந்த வைரங்களுடன் பறிமுதல் செய்து;  வைரமொடு என்றும் வைரத்தொடு  என்றும் வரும்.

இவை சுங்க வரி கட்டாத வயிரங்கள் போலும். இத்தகு பறிமுதல் அரசின் கடமை.  சுங்கவரிக் காவலர் அரசில் திறனுடன் செயல்பட்டனர் என்பது பெறப்படும்.


பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  =  விறலர்  விறலியர் மிக்குடைய பழைய ஊர் ஒன்றின் மக்கட்குத் தந்து;

 பிறர்க்  குதவி =  அவ்வூராரே அல்லாமல் பிறருக்கும் நல்கி ;
அமையார்த் தேய்த்த =  பகைவரை ஒழித்த ;

அணங்குடை நோன் தாள்  =  கடப்பாடுகளை மேற்கொண்டவன் ; (வலிய கால்கள் உடையோன் பல சுமைகள் தாங்குவான்  அதுவேபோல் )

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு

வட திசைச் சென்று வெற்றியுடன் மீளுதல் அக்கால அரசர்க்கு வழக்கம் . புகழ் தரும் என்பதால்.   A real score for them.

நல்லினி என்பது   ( பெண் குழவிக்கு இட )   இனிமையான பெயர்.

2 கருத்துகள்:

மாணவர் களம் சொன்னது…

சிறப்பு. அருமை

SIVAMALA சொன்னது…

நன்றி, நன்றி.