வெள்ளி, 25 ஜூலை, 2014

கீதா சாரம்

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது;
எது  நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது,
எது  நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்

உனக்கு என்னாயிற்று?
எதன்பொருட்டு  நீ அழுகிறாய்?
நீ   என்ன  கொண்டு வந்தாய்?---
அதை நீ இழப்பதற்கு!

நீ எதைப் படைத்தாய்?---
அது வீணாவதற்கு !

நீ எதை எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது !
நீ  எதைக் கொடுத்தாயோ
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!

எது  எனதாக உள்ளதோ அது நேற்று
வேறொருவனுடையதாக இருந்தது!
மறு நாள் அது வேறொருவனுடையதாகும் !
இந்த மாற்றமே உலக நியதி !

பகவத் கீதை 

கருத்துகள் இல்லை: