வெள்ளி, 18 ஜூலை, 2014

தாதிமார்

தாதி என்னும் சொல் தாளிகைகளில் வருவதுதான்.  இது தமிழா என்போரும் உண்டு.

நல்ல தமிழே. இதன் அடிச்சொல் "தாய்" என்ற  கவின் சொல்.   கவின் -  that which attracts or charms you!!  I will explain this later in another post.

சொல்லின் நடுவில் ஒரு யகர ஒற்று வந்தால், பெரும்பாலும் அது மறைந்து சொல் சற்றே உருமாறும். முதலெழுத்து குறிலாயினும்  நெடிலாயினும் இது நடைபெறும்.

எடுத்துக்காட்டு:

செய்தி  >  சேதி   (யகர மெய் மறைவு; முதலெழுத்து நீட்சி )
வேய்ந்தோன் >   வேந்தன் .  (யகர மெய் மறைவு .  ஒன்  விகுதிக்குப் பதில் அன் , இரண்டும் இணையானவை)
வேய்வு  >  வேவு .(யகர மெய் மறைவு.)
உய்த்தி  > உத்தி.  உய்த்துணர்கை

வேய்தல் என்றால் மேலே இட்டுக்கொள்ளுதல் , அணிதல்,  வேடம்  அல்லது மாறுவேடம் போட்டுக்கொள்ளுதல் ,  கூரை வேய்தல் )

மறைமலை அடிகள் தந்த எடுத்துக்காட்டு:

வேய் >  வேய் + து  + அம் =  வேய்தம் >  வேதம்.  (யகர மெய் மறைவு)

This is therefore well established pattern that is a rule in word formation.

தாய்  >  தாய்தி  > தாதி.

தாதி ,  தாதிமை .  தாதியர்,  தாதிமார்.

தாய்போல் கவனிப்போர் என்பது சொல்லமைப்புப் பொருள்.

It is perfectly  OK to represent this word formation as:

தாய் >  தா (கடைக்குறை ) >  தா+தி ( தி விகுதி) > தாதி.





கருத்துகள் இல்லை: