வெள்ளி, 4 ஜூலை, 2014

கத்திலிருந்து கீதைவரை

சில சொற்கள் நாம் எளிதில் கண்டுகொள்ள இயலாதபடி திரிந்துவிடுவதால்,  உரியவற்றோடு அவற்றைத் தொடர்புறுத்தி அறிந்துகொள்ள,  சிற்சில வேளைகளில் இடர்ப்படுகிறோம். சில சொற்கட்கு தலையில் திரிபு. வேறு சில வாலில் திரிந்துவிடுகின்றன. ஆகவே, ஆசிரியர்களும் அவற்றை வேற்றுமொழிச் சொல் என்று கற்பித்துவிடுகின்றனர்.

கத்து என்ற சொல், (கத்) என்ற அடிச்சொல்லில் இருந்து வருகிறது என்று பாணினி முறையில் வைத்துக்கொண்டால், கதறு என்பது (கத்)> கத்+அ+று என்றும், கதை என்பது (கத்) > கத்+ஐ என்றும் தெரிந்துவிடுகிறது.  கத் என்று ஒரு தனிச்சொல் இல்லையென்றாலும், அதைப் பிரிப்பதால், வேரை ஒருவாறு அறிந்துகொள்ள இயல்வதாகிறது.
நல்ல முறைதான்; ஆனால் தமிழ் ஆய்வாளர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை.
சங்கதத்தில் இம்முறையே போற்றப்படுகிறது. இம்முறையினால், (கத்) > கதம், ஆகையால் சங்கதம் என்ற சொல்லில் இறுதியில் இது உள்ளது என்று எளிதில் பிடித்துவிடுகிறோம்.

கத் > கித் > கீதை.  மற்றும் கீதம் என்பது சற்று முயன்று கண்டுபிடிக்கவேண்டியுள்ளது. கத் என்றால் ஒலிசெய்தல் என்பது அடிப்படைப் பொருள்.

கத் என்பது குகை மாந்தனின் காலத்தில் இருந்து பின் தொலைந்துவிட்டது. அதன் பின்பிறப்புகள் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும் காண்போம் அடுத்த அல்லது வேறு  இடுகையில்.

கருத்துகள் இல்லை: