புதன், 16 ஜூலை, 2014

பல்லே இல்லாத பல்லிக்கு...........

இந்த இடுகையின் ஆய்வுப் பொருள் பல்லி  என்ற சிற்றுயிரி ஆகும்.

பல்லே இல்லாத பல்லிக்கு எப்படிப் பல்லி  என்று பெயரிட்டனர்?

பன்றிக்கு நல்லபடியாகப் பெயர் அமைந்துவிட்டது. பன்றிக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பல்லின் காரணமாக  பல் + தி  =  பன்றி என்று பெயர் .  பல் +தி என்பது "பற்றி" என்று வல்லெழுத்து வராமல், பன்றி என்று மெல்லேழுத்தில் போட்டது தமிழனின் சொல்லமைப்புத் திறன் எனில் அது மிகையன்று. சில வேளைகளில் இதற்கு நேர்மாறான உத்தி பின்பற்றப்படும். கன்று + ஆ  = கற்றா என்பது காண்க.

எது இனிமையோ அதுவே அமைக்கப்படும்.

மீண்டும் பல்லியிடம் வருவோம்.

இந்தச் சொல் முன்னாளில் "பல்லிலி "  என்று இருந்தது தெளிவு.  பல் இல்லாதது என்பது பொருள்.  நாளடைவில் அது ஒரு லிகரத்தை இழந்து, பல்லி  ஆயிற்று. "லிலி " என்று முடிவது, வாயொலிக்க   நன்றாக இல்லை.

இரட்டித்த இரண்டு  "லி" யில்  ஒன்று மறைந்தது போலவே வேறு சில சொற்களிலும் நிகழ்ந்துள்ளது .  ஒன்று எடுத்துக்காட்டுவோம்:

ஆதன் + தந்தையார் =  ஆதந்தந்தையர் >  ஆந்தையார்.

இங்கு "தந்தந்" என்று இரட்டித்த இரண்டில்  " தந்த" மறைந்துவிட்டது.

அறிஞர் சிலர் வேறு விதமாகக் கூறியிருந்தபோதும்  இதுவே சரியான முடிவாகும்.

பல்லி பற்றிய சில விடயங்களை அடுதது வரும் இடுகைகள்  ஒன்றில் காண்போம்.

--------------------------------

சண்முகத்தாய்  >  சம்முத்தாய் > சுமுத்தாய் ;
Cited for interest.

கருத்துகள் இல்லை: