புதன், 16 ஜூலை, 2014

வைகுதல் வைகுண்டம்

வைகுண்டம் என்பது  ஓர்  இனிய சொல். இது இறைவன் உறைவிடம் என்று  பொருள் படும். சிவ பெருமானுக்கு கைலாயம் இருப்பதுபோல் விண்ணனாய
பெருமானுக்கு வைகுண்டம் உறைவிடம் எனப்படும்.

வைகுண்டம் என்பது எப்படி அமைந்தது என்று காணலாம்

வைகுதல் என்பது வசித்தல் ,  வாழ்தல் . தங்குதல் என்று பொருள்தரும் .

உண் என்ற சொல் பல பொருள் தருசொல்.  உண் என்பதற்கு  ஒத்துப்போகின்ற,   இசைவான,  பொருந்திவருகிற என்றும் இச்சொல் அமைப்பில் பொருள் கூறலாம்.(1)  (2)

தம் என்பது ஒரு விகுதி. இது து மற்றும் அம்  என்பவற்றின் சேர்க்கை.

வைகு + உண் + தம் = வைகுண்டம்     இறைவனார் தங்குதற்குரிய இடம் என்பது சொல்லமைப்புப் பொருள். ,  சொல் வழக்கில் பொருளும் அதுபற்றிய சிந்தனைகளும் விரிந்து,  புதிய வரையறவு  பெறுதல் தேவைக்கு ஏற்ப ஆகும்.

இச்சொல் ஒரு காரணப்  பெயர்.

இனி இது வைகுந்தம் என்றும் மெலியும்    கடின ஒலிகளாகிய  "ண்ட " மாறி,  மெல்லெழுத்துகள் பெறும்.


=============================================================

1. to harmonise with, to be agreeable to

2 உண் என்பதன் அடிச்சொல்  உள் என்பதுதான்.  இதைப்   பின்  ஓர்  இடுகையில் விளக்குவோம்.

கருத்துகள் இல்லை: