வியாழன், 18 ஆகஸ்ட், 2016

Forgetting One's Guru "ஆன்பாலும் தேனும்"

இது  http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_17.html  இடுகையின் தொடர்ச்சி:


"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் ‍=== தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"

பொருள்:

ஆன் பாலும் தேனும் :  பசுவின் பாலும்  தேனும்;
அரம்பை முதல் முக்கனியும்:   வாழைப்பழம் தொடங்கி மூன்று
வகைப் பழங்களையும்;   முக்கனி : மா, பலா, வாழை

தேம் பாய உண்டு :  இனிப்புச் சுவை மிகும்படியாக உட்கொண்டு;

தெவிட்டும்:   அது அப்போது  மேலும் உண்ணவியலாது போய்விடும்;
திகட்டும் என்றும் சொல்வர் .

வெண்ணெய் வரு சடையா :  திருவெண்ணெய்நல்லூரான் ஆகிய சடையப்ப வள்ளலே உன்னை:


கம்பன் :  கம்பனாகிய யான்;

இறக்கும்போதேனும் :  இறந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலுமே

இனி :  இனிமேல். நினைவு என்பது இருக்குமாயின் இறந்த பின்னும்.

தீம்பாய் மறக்குமோ :  கெடுதலாக  மறப்பேனோ

என்றவாறு

ஆசிரியனை மறத்தல்  நன்றி கெட்ட செயலாகும்  என்பது கருத்து, இது  தீம்பு  என்று குறிக்கப்பட்டது .

கருத்துகள் இல்லை: