வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கோவிட் நிலையில் பூசை. ஆள்நுழைவுக் கட்டுப்பாடு.


 கோவிட்டுக்கு முந்திய நாட்களில் இப்பூசைக்கு 300 பேர் வரை ஆதரவளிப்பர். பெருங்கூட்டம் வந்து, அன்னதானம் பூசை அபிஷேகம் ஹோமம் ஆகியவையும் நடக்கும்.  இப்போது கோவிட் என்பதால்  அமைப்பாளர்கள் தவிர வேறு யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. பூசை நடைபெறுகிறது. ஓரிருவரே படத்தில் காணப்படுகின்றனர்.  கோவிட்டினால் அச்சம் மிகுதியாக வுள்ளது. நம் இறைவி சிவதுர்க்கை எல்லோரையும் காக்கவேண்டும். ஒவ்வோருயிரும் அம்மையின் அருள்பெற்று வாழ்க,

கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் பெருந்திரளானவர்கள்  கூடியபோது எடுத்த படம் காண்க:

சுமங்கலிப் பூசையில் பெருந்திரள்.

அந்த நன்னாள் அணுகுமோ  மீண்டும்?
சொந்தம் சூழ்வரு மக்கள் யாண்டும்!
மந்தம் வீழ்ச்சி மாட்சியிற் குந்தகம்
நொந்ததிவ் உலகே உந்துதல் ஒழிந்தே.

----சிவமாலையின் கவிமாலை.

யாண்டும் - எப்போதும்.
சூழ்வரு -  சுற்றி நிற்கும்
மந்தம் - நிறைவின்மை
குந்தகம் - கெடுதல்.
உந்துதல் - உற்சாகம்.



தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன 1427  21082021
If our readers gain access to the compose window by error, please exit without changing 
the text.  By moving your mouse over the text, you may effect unwanted changes and
errors.  Please cooperate.

கருத்துகள் இல்லை: