வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஆணின் பின்னால் பெண் ஓடுவதில்லை.

 ஆண்களின் முகமெல்லாம் கொள்ளை அழகென்றே

ஆண்டவன் நினைத்ததுண்டு-----  அதனால்

அதை மறைப்பதும் வேண்டுமென்று  -----  அந்த

ஆண்டவனும் நினைத்ததுண்டோ?


அவன்முகம் மறைக்க மீசையும் தாடியும்

ஆண்டவன் கொடுத்ததுண்டு----- இருந்தால்

அவனை விலகிச் செல்வாள் -----  அதனால் 

அவள்தன்னைக் காத்துக்கொள்வாள்.


உலகைப் படைத்து முடித்தபின் நோக்கினால்

பெண்பின்னே  ஆண் ஓடினான்,

பலவும் அறிந்தவர் சிலவே சிந்தித்தார்

படுதாவைப் போட்டாகிலும் ---- பெண்முகம்

தடுத்தாலே தக்கதென்றார்.


அப்பப்பா உலக நிறுவாகம் என்பது

ஒற்றைத் தலைவலியாய்   ----- இங்கு

உண்டாகி விட்டதப்பா.


பின்னே ஓடாமல் முன்னால்  போவதே

தன்னைத் தான் காப்பதாம்.


கருத்துகள் இல்லை: