சனி, 14 ஆகஸ்ட், 2021

ஆப்கான் நிலவரத்துக்கு ஒரு கவி

எண்சீர் விருத்தம். 

நடுவிலொரு தூண்போல நின்று கொண்டு

நாற்புறம் மேலுயர்த்தி  நாட்டிக் கொண்டு.

கெடுதலென வாராமல் பார்த்துக் கொண்டான்

கேடற்ற நண்பனவன்  ஓடிப் போனான்!

படுவீழ்ச்சி அதன்பின்னே தொடரும் என்று

பார்த்தவர்கள் யார்க்குமன்று வேர்த்த துண்டோ?

கொடுங்கோன்மைப் பின்புலத்தார் கூரை ஏறிக்

குறுஞ்செயலால் விரைந்தெழுவார் பரந்த வானில்.


{ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரத்தைக் குறித்தெழுந்த எண்ணங்கள்

இந்தக் கவிதை வரிகட்கு ஊட்டம் தந்தன.} 

கருத்துகள் இல்லை: