ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அரோகம் - சுகம், அசுகம் இரண்டும்

 சிலர் எப்போதும் " சுகமாகவே" இருக்கிறார்கள்.  சிலர் சிலவேளைகளில்தான் சுகம் காண்கிறார்கள்.  வாழ்வின் பேரளவு துன்பத்தில் அவர்கட்குச் சென்றுவிடும் போலும். எல்லாம் இன்பமயம் என்பார் ஒருபுறமிருக்க, எல்லாம் துன்பமென்பாருமுண்டு.  வேறுசிலர், தத்துவக் கருத்தாக, இன்பம் யாவுமே பின் துன்பமாகிவிடும் என்றும் கூறுவதுண்டு.  இன்பம் துன்பமிரண்டும் ஒரே கிணற்றில் ஊறிய மட்டைகள் என்னலாம் போலிருக்கின்றது.

சிலருக்கு இன்பம் அரிய பொருள் ஆகிவிடுகிறது.  அரியது என்றால் அடிக்கடி கிட்டாதது.  சிலருக்குத் துன்பம் அரியது.

துன்பம் வாராமல் காத்துக்கொள்தல் எவ்வாறு என்று புத்தர்பிரான் அருளியிருக்கிறார்.  பிறரும் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

எது சரி, எது தவறு என்பதைவிட, ஒவ்வொருவரும் தாம் பட்டறிந்த படியே இதில் எண்ணுவர் என்பதே உண்மை.

சுகம் என்பது ஓர் உகந்த நிலை.   உக >  சுக > சுகம்.  அகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பது சொல்லியலில் தெளிவான முடிபு ஆகும்.

சுகம் அல்லாதது அசுகம் என்பர்.   அல் ( அல்லாமை) > அ ( கடைக்குறை ) > அ + சுகம் >  அசுகம் ஆகும்.

இன்று நாம் அரோகம் என்ற சொல்லை  அறிந்துகொள்வோம். 

இன்பம் துன்பம் என்பவை, சிலருக்கு அரியவை;  சிலருக்கு அவ்வாறு அல்லாதவை.

ஓங்குவதென்பது,   மிகையாவது.  ஓங்கு(தல்) >  ஓகுதல் > ஓகு+ அம் > ஓகம் ஆகும்.

அரிதாக ஓங்குவது அரு+ ஓகம் > அரோகம்.  அது துன்பமாகவும் இருக்கலாம்; இன்பமாகவும் இருக்கலாம்.  நோய் - துன்பம் ஆகும்.

ஓகம் இடைக்குறைச் சொல்.

ஆகவே அரோகம் என்ற சொல்லுக்கு இருபொருளும் உள.  ஒன்று சுகம், இன்னொன்று அசுகம் அல்லது நோய்.

ஆகவே அரோகம் என்பது இரண்டும் குறிக்கும் பொதுச்சொல்.  இன்பம் துன்பம் அவ்வப்போது ஓங்கி நிற்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: