சனி, 14 ஆகஸ்ட், 2021

சொல்லாக்கச் சிந்தனைகள் - அறிவிப்பு

சொல்லாக்கத்தில் நாம் அடுத்து இரண்டு சொற்களைக் கவனிக்கப்போகிறோம். அவையாவன:

1 ]   மகரந்தம்.

2 ]   வசீகரம்  வசீகரித்தல்.

யாம் அவற்றை இன்னும் மூன்று  நாட்களில் வெளியிடுவோம்.  இச்சொற்கள் எவ்வாறு அமைந்தவை என்று நீங்கள் அறிந்திருந்தால்,  உடனே இவ்விடுகைக்குப் பின்னூட்டம் இட்டுவிடலாம்.  வெளியிடவேண்டாம், நாங்கள் வெளியிடவிருக்கிறோம் என்றும் நீங்கள் குறிப்பிடலாம்.  அல்லது அவற்றைச் சுருக்கமாக இங்குக் குறிக்கலாம்.  இதன் நோக்கம் மற்றவர்களுக்குச் சந்தர்ப்பம் அளிப்பதே  ஆகும்.  அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் காலை, யாம் ஒன்றும் வெளியிடமாட்டோம்.   பழைய ஆய்வாளர்கள் இச்சொற்களை ஆய்ந்து இருந்தால்  ( நீங்கள் அல்லர் ஆனால் )  முன் ஆய்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயர்கள் குறிக்கவும்.

இதன்மூலம் நீங்களே அசல் சிந்தனையாளர் என்பது ஒருவாறாவது உறுதிப்படும். சில சொற்கள் பல்பிறப்பிகளாக இருக்கும். அதில் ஒரு வரவினை யாம் எழுத, இன்னொன்றை நீங்கள் எழுதுவதும் தவிர்க்கப்படும்.  பகர்ப்புச் செய்தல் ( காப்பியும் )  இராது.

எல்லாம் நலமும் உங்களுக்கே.

கருத்துகள் இல்லை: