புதன், 27 ஏப்ரல், 2016

குற்றவாளியும் சட்டமும்

இல்லா தனசொலும் குற்ற வாளியை
நல்லா ரைப்போல் நடத்தலும்  அருஞ்செயல்
சொல்லான் இவனெனச்  சூழநின்  றதட்டினும்
கொல்லாப் புடைக்கா மெல்வழி மேற்கொளல்.

கடமை செய்தலில் காணும்   கோடிது
கடிதே  ஓச்சுதல்  எறிக மெல்லவே
கடுமை  வேண்டினும் கொள்ளல்  சொல்லிலே
உடமை உயிர்கொளல் சட்டத் துரிமையே.




கருத்துகள் இல்லை: