வெள்ளி, 1 ஏப்ரல், 2016

சான்றுகள் இல்லா வழக்குகள்

சான்றுகள்  இல்லா  வழக்குகள் ஒட்டினும் 
ஈன்றது கட்டி,   குழந்தையோ  அன்றெனல்போல் 
உற்ற நிலைதான் ஒருசிலர் கொள்பிடியால் 
பெற்றது யாதோ பயன்.

போதிய சாட்சியங்கள் இல்லாத வழக்கு நடத்திப் பயனில்லை; 
இவற்றை நடத்தும் படி பிடியாய் நிற்பதும் வீண். 

எதுகை மோனையுடன் அமைத்தாலே இன்புறு கவியென்பர் ஆதலால் இப்போது இதனை இப்படியாக மாற்றியமைப்போம்:

சான்றுகள் இல்லாத சாய்வழக் கோட்டினும் 
ஈன்ற திழிகட்டி இன்குழந்தை அன்மைபோல்
உற்ற நிலைதான் ஒருசிலர் கொள்பிடியால்
பெற்ற தியாதோ பயன\


இதையும் சுவையுங்கள்:

உள்ளீ   டிலாத (து) ஒழிவழக் காயிடிலோ
அள்ளு கருக்கட்டி அன்புக் குழந்தையன்றே
தெள்ளு நிலையிலர் தேடித்தம் கொள்பிடியால்
உள்ளுவ‌ தியாதோ பயன்.

An error keeps surfacing in this post and even after numerous \\
attempts the formatting still does not fall in line with our edit.
Hence we would desist from editing this any further. We have 
no idea how the display in your computer or other device would
 present itself. \



கருத்துகள் இல்லை: