திங்கள், 4 ஏப்ரல், 2016

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி.........

உறுதல் என்னும் புலனுணர்ச்சி,  தோலுணர்ச்சியையே சிறப்பாகக் குறிப்பது. எனினும் நாவுடன் உண்பன உறும்போது,  உரசும்போது, படும்போதுதான் நாவும் பொருளின் சுவையை அறிந்துகொள்கிறது. நாவினை அண்டிவராத பொருளை அறிதல் யாங்ஙனம்? எனவே உறுதல் என்ற உணார்ச்சி, நாவில் உறுதல், மூக்கில் உறுதல், செவியில் உறுதல், கண்ணில் உறுதல் என்று  பல்வேறு வகைப்படும். கண்ணுறு, செவியுறு என்ற சொல்லாட்சிகளும் உண்டே!

நாவுறுதலே உறு > உறுசி எனப்பட்டது.

இது பின் உருசி எனத் திரிந்து, அதன்பிறகு தலையிழந்து ருசி என்றும் ஆயிற்று.

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி வேறு திரிபுகள் யாதுமில்லை.

பொருளும் தெளிவாகவே உள்ளது. சி விகுதி .

கருத்துகள் இல்லை: