சனி, 16 ஏப்ரல், 2016

வேதம் கீதம் வேவு வேடம்

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_89.html

continue reading from the above post:

சில (அறிஞர் கூறும்) திரிபுகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள‌
வேண்டும்.

எ‍‍~டு;

வித் >   வேதம்.  இ >ஏ.

தமிழில் இதுபோலும் திரிபு:   களி > களிக்கை > கேளிக்கை. (  அ>ஏ)  கிளை> கேள்  (கிளைஞர்> கேளிர்)   (இ‍‍‍>ஏ)  விகுதிகள்
நீக்கி,  கிள்> கேள் என்றாகும். கிளை என்பதில் ஐ விகுதி. கேளிர் என்பதில் இர் விகுதி (பன்மை).

"கிளை கேடுறுதலின்" (மணிமேகலை)


இன்னொன்று:

கத்  >கீதை.  கீதம்

This  "kath" is the root of  kaththu,   kathaRu,  kathai(thtal),  kAthai etc).  Connected to Arabic kAtib, kItab....).

வித்து என்பது தமிழில் விதை என்று பொருள்தரும். வித் என்ற அடி. தமிழ் வித்து என்பதினின்றும் பெறப்படுகிறது.

கற்பிப்பது, வித்திடுதல் போன்றதே. ஒப்புமை.\

உண்மையில் வேய் > வேய்தம் >  வேதம்.

வேய்தலாவது, மேற் புனைந்துகொள்ளப்படுவது.  கூரை வேய்தல்
போல. ஆங்கிலம் text  டெக்ஸ்ட் என்பது நூலாற் புனைதல் அல்லது
நெசவு என்பதோடு ஒப்புமைக் கருத்து.

ஒ.  நோ:  வேய்வு >  வேவு. யகர ஒற்றுக் கெடல்

முன்காலத்து ஒற்றர்கள் மாற்றுருவு புனைந்துகொண்டமையே இது
காட்டும்.

வேடு >  வேடம்.
(மேற்புனைவு. தன்னுரு மறைத்துப் புனைதல்)

வேடு கட்டுதல்: பானைக்குத்   துண்டுத்துணி மேற்கட்டுதல்.

அறிந்து இன்புறுவீர்.

கருத்துகள் இல்லை: