திங்கள், 4 ஏப்ரல், 2016

எலும்புடைந்த பாம்புக்கும் ............

எலும்புடைந்த பாம்புக்கும் இரக்கம் காட்டி
எடுத்ததனை மருத்துவர்பால் கொண்டு சென்று
வெறும்பார்வை செய்யாமல் அறுவை ஆற்றி
வேதனையைக் குறைத்திட்டார் விதறல் நீங்க!
அரும்பணியைச் செய்திட்டார் அனந்தல் இன்றி!
அனையவர்க்குப் புகழாரம் சூட்டு கின்றோம்.
பெரும்பாரில் இடருற்ற  உயிர்கள் யாவும்
பிணிநீங்க வலி நீங்க முயல்க நன்றே.
-------சிவமாலா 


 செய்தி
http://www.dinamani.com/tamilnadu/2016/04/02/உயிருக்குப்-போராடிய-பாம்பு/article3358533.ece


 தமிழ் முரசு 3.4.2016 பக்.5

கருத்துகள் இல்லை: