வெள்ளி, 22 ஏப்ரல், 2016

poetry topic: DEATH OF WIFE.

வண்ணான்  ஆடை  துவைத்தல்  தப்புதல்  என்றும் சொல்லப்படும். ஆகவே வண்ணான் தப்பிப் பிழைக்கிறான் எனில் அதன் பொருள் தெளியக்கூடியதே.1

குற்றவாளி தப்பிவிட்டான்  என்று காவலர் கூறுவதுண்டு.  இதற்கு  "escaped" -- நேரான ஆங்கிலச்  சொல் .

பயனற்றுப் போவது,  பிறழ்வது,  காணாமற் போதல், விலகுவது ,   பிழை செய்வது,  தவறுவது,  விட்டுப்போவது,   இடர்  நீங்குதல் ,  இறப்பது  எனவும் பொருள் தரும் "தப்புதல் "  பலபொருள் ஒருசொல். இப்பொருள்கள் வரும் வாக்கியங்களைக்  குறிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

தப்புதல் (இறத்தல்)  என்பது,  தபுதல் என்று இடைக்குறையும்  2.  இதில் ஒரு பகர ஒற்று ஒழிந்தது.   என்னில் > எனில்;  இல்லாது > இலாது  என்றெல்லாம் வருவன போலவே.

தாரம் என்பவள் கணவனுக்குத்  துணை தருபவள்;  பிள்ளைகள் தந்து குடும்பம் போற்றுபவள்.  தாரம்  : முதனிலை  திரி  தொழிற்பெயர்.

தபுதாரம் -   தாரம்  இறத்தல்.   இது குறித்த பாடல்.

இது தொல்காப்பியத்தில்  தபுதார நிலை எனப்பட்டது.

தபுதாரம் -  வினைத்தொகை.   தாரம் த(ப் )புதல்.

இது குறித்த பாடல் ; அதில் வரும் வரணனை .


1.  தமிழ்க் களஞ்சியம்  -   அறிஞர்  க. ப. மகிழ்நன்  .  
       ( "மகிழ்நன் பேசினார்;  அவரே சங்க இலக்கியம்; சங்க இலக்கியமே அவர்"  என்று  திரு வி க  அவர்களால் புகழப்பட்டவர்.    ) 
2   மறைமலையடிகள்.

இது  பிற அறிஞரால் விளக்கப்பட்டது.  அதனால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

will edit,

கருத்துகள் இல்லை: