ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

உயிர் உயிர்மெய் திரிபு

உயிரெழுத்துக்களில் தொடங்கிய சொற்கள் நாளடைவில் உயிர்மெய் எழுத்துத் தொடக்கமாக மாறுவது தமிழில் காணப்படும் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம். சில சமயங்களில் பொருளில் வளர்ச்சி காணப்படும்.

எடுத்துக்காட்டாக, கலகம் என்ற சொல்.  கலகத்தில் பலர்  நெருங்கி வந்து அடிதடியில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இவர்கள் இப்படிக் கலக்காமல் தங்கள் தங்கள்  இடத்திலேயே இருந்துவிட்டால்  கலகமே இருக்காது என்று கண்டுகொண்ட ஊர்க்காவல் அறிஞர்கள், ஊரடங்கு என்ற ஒரு நடபடிக்கையை உண்டாக்கினர்.  ஆகவே கலகத்துக்குக் காரணம் கலத்தலே. அடி என்ற சொல்லிலும்,அடுத்துச்சென்றாலே அடிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம். அடு> அடி. இதுபோலவே
அண்டையில் சென்றாலே ( நெருங்கினாலே)  சண்டையைப் போடமுடியும்.
இவற்றிலிருந்து, சொல்லில் சிறு மாறுதலும், அதற்கேற்பப் பொருளில் சிறு வளர்ச்சியும் ஏற்பாடுதல் காணலாம்,

அண்டை >  சண்டை.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாக மாறுவது மட்டுமின்றி,
வேறு உயிர்மெய்களாகவும் மாறும்.

 எடுத்துக்காட்டு:

உச்சி > முச்சி.

உச்சி என்பது முன் உச்சியை (அதாவது உச்சியில் முன் பக்கத்தைக்)
குறிக்க எழுந்த சொல்லாகலாம்.  முன் உச்சி ? முச்சி.  ஓர் ஒற்றும் உகரமும் கெட்டன. தேவையற்ற விரிவுகள் ஒழியும். அல்லது உச்சி என்னும் சொல்லின்முன் உள்ள உகரத்தில் ஓர் மகர ஒற்று ஏறிற்று எனினும் அமையும்.



கருத்துகள் இல்லை: