சனி, 9 ஏப்ரல், 2016

கல்லாடனார் குறிக்கும் மரங்கள்

இதைத்  தொடர்வோம்:

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_8.html


வழையம லடுக்கத்து     
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.=----  கல்லாடனார் 

அவர்தம் குறுந்தொகைப் பாடலில் ஓமை மரம்பற்றிக் குறிப்பிடுகிறார். இதன் குச்சியைப் பல்துலக்க பயன்படுத்தலாம் என்பதால் இதை பல்குச்சி மரம் (tooth brush tree )  என்றும் சொல்வர்.  சல்வடோரா பெர்ஸிகா  1   என்ற
தாவரவியற் பெயரையும் உடையதாகும் இது. கீதா மணவாளன் முதலிய இந்திய அறிவியல் ஆய்வாளர்கள் இதில் மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன என்பதாகவும் குறிப்பிடுவர். நபி நாதர் இதனைப் பலதுலக்க பயன்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளார் என்று அறிகிறோம்.  மேல்விவரங்களுக்கு விக்கிபீடியாவைப் பார்க்கவும்.
ஓமை என்பது மாமரத்தையும் குறிப்பதாகக் கூறப்பட்டாலும்  கல்லாடனார் பாலையைக் குறித்திருப்பதால், இந்தப் பாடலில் மாமரம் பற்றியதொன்றுமில் லை என்று கருதவேண்டும்.

வழை :  gamboge

வழை என்னும் மரத்திலிருந்து காவி நிறப் பிசின் எடுக்கப்பட்டு, துறவிகளில் உடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தையும் புலவர் குறிக்கிறார்.

இவற்றைப் பாடலுடன் அடுத்துக் காண்போம்.

தொடர்ந்து வாசிக்க:

தொண்டைமான்களின் அரசின் சிறப்பு

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html

-------------------------------------------------------------------------------------

1  Salvadora persica (ArakGalenia asiaticaMeswakPeeluPīlu,Salvadora indica, or toothbrush treemustard treemustard bush)

கருத்துகள் இல்லை: