புதன், 23 ஜூலை, 2014

சேரனிடம் மோதாதீர்!................

பெரிய அறிவாளிகள் ஆகட்டும், அரிய அழகுடைய அணங்குகளாகட்டும், யார்  உன்னை எண்ணினாலும்,   அவர்களுக்கு நீதான் இடமாகுவாய், அன்றி எக்காலத்தும் எவ்விடத்தும் அவர்களில்  எவருமே! உனக்கு உவமை ஆகமாட்டார்கள். அத்தகைய ஈடற்ற ஒரு பெருவேந்தனே....

பெருஞ்சேரல் இரும்பொறையை இவ்வாறு பாராட்டுகிறார் அரிசில் கிழார்.

மருத நிலத்திலே, பூத்துக் குலுங்கும் வயல்களில் தங்கி நிற்கும் நீரிலே, வந்திறங்கும் நாரைகளை ஒலி எழுப்பி விரட்டும் மகளிர் பகலும் இரவும் உனக்காகத் தங்கள் அணிகளைக் கழட்டாமல் காத்துக் கிடக்கிறார்கள். கண்டு காதலைத் தெரிவிக்க வேண்டுமென்றால், உன் போன்ற வெற்றி வீரனையல்லவோ எதிர்கொள்ள வேண்டும்?

மண்டிவரும் காவிரி நீரின் செவ்விய விரிப்புக்கு உடையோனாகிய புகார்ச் செல்வனே!

மழை தவழும் கொல்லி மலைப்  போர்வீரா!

கொடிகட்டிய தேரையுடைய பொறையனே.......

நீ மனிதனின் அளவுகளைக் கடந்துவிட்ட செயற்கரிய செய்தோன்.

அப்போதே அந்தப் பகை மன்னர்களிடம் சொன்னேனே!  அவர்களுக்குதாம் அறிவில் தெளிவு இல்லை.

பிற சான்றோர் சொன்னால் கேட்பார்கள் என்று நினைத்தேன். அங்கேயும் அவர்கள் மதி மருண்டுவிட்டனர்.

உன் கையில் தவிடுபொடி ஆவதை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

எங்கே கேட்டார்கள்? அவர்கள் நிலைக்கு வருந்துகிறேன்,.........................

இனி அரிசில் கிழாரின் இரும்பொறை பற்றிய பாடல் வரிகளையும் பொருளையும் கண்டு மகிழ்வோம்.  தொடரும்.


கருத்துகள் இல்லை: