செவ்வாய், 20 அக்டோபர், 2020

சாம்பவர், சாம்பவ மூர்த்தி

பவம் - சொல் தோற்றம்.

தலைப்புச் சொற்களை ஆய்வு செய்யுமுன், பவம் என்ற சொல்லைப் பொருளறிந்து கொள்வோம். இது பரவு என்னும் வினையில் திரிந்தமைந்த சொல்லே என்று கொள்ளவேண்டும்.

இதிலுள்ள ரகரம் இடைக்குறைந்தால் பவு என்றும் அதில் அம் இணைந்தால் பவம் என்றுமாகும். பரவுதல் என்ற செயலின் பல்வேறு வகைகளுள் ஒன்றான பிறப்பினாலும் உயிர்கள் எங்கும் பரவும் என்பது தெளிவு. ஆகவே பிறப்பு என்று  கூறப்படும் பொருளதான பவம் என்பது,  "பரவம்" என்றே முன் னிருந்திருக்கிறது என்பதை இஃது உறுதி செய்கிறது

பிறவிப் பவம்

பவத்திறம் (பவத்திரம்) என்று மணிமேகலைக் காப்பியம் கூறும்  ---"வீணே பிறந்து உலகிற் பரவிப் பல்வகைத் துன்புறுதலுக்கும் ஆளாதலை" க் குறிக்க எழுந்த --- பொருத்தமான பதமாகவே இஃது உள்ளதென்பதும் மறு உறுதி ஆகிறது . பிறவிப் பவம் என்பதும் நோக்குக. பவநோய் தணிக, மாயை அகல்க என்ற கூவுதலும் இதை நல்லபடி விளக்கும்.

உலகப் பவம்

இவ்வாறு பிறப்பினால் வீணாக மனிதர்கள் பரவியது உலகம் ஆகிறது. இதனால் பவமென்பதற்கு உலகம் என்ற பொருளும் உண்டாகி நம்மைத் தெளிவிக்கிறது. உலகில் மக்களிருத்தல் அவர்கள் இதை விட்டு நீங்கி ( இறந்து ) பேரின்ப வாழ்வெனும் மேலுலக வாழ்வினை அடைதற்கு என்பதனால், மேலும் அவர்களின் பவம் (பரவம், பரவுதல் ) அதே உண்மையையே வெளிப்படுத்துகிறது என்பதனால், பவம் என்பதற்கு உண்மை, பேரின்பவாழ்வு என்ற பொருளடைவுகளும் உண்டாகின்றன

பவம் -  உண்மை

நிகழ்வு என்பது நோக்கினையும் அஃதை அடைதலையும் உணர்த்தும் ஒரு வித ஆகுபெயர்போல் ஆகிவிடுகிறது. இதைச் சொல்லாகுபெயரினுள் அடக்கிவிடலாம். "ஒன்றின் பெயரால் அதற்கியை பிறிது " (நன்னூல்). பிறப்பும் பின் இறப்பும் பேரின்பத்திற்கு ஆகிவருதல்பிறப்பு பல என்பதனால் இடையில் இறப்பு குறிப்பிடவேண்டாமை காண்க

காலப் பரவல் -  பவம்

கரணங்கள் கணியநூலில் ( சோதிடத்தில்) பதினொன்று , இதுவும் காலப் பரவலும் அதனின் உட்பகுப்பும் ஆகும். எனவே இது பரவம் > பவம் என்பதை மீண்டும் திறப்படுத்தும்.


பவம், பரை என்பவற்றில் பரவுதல் கருத்து

பர என்ற வினைச்சொல்லினின்று தோன்றிய வேறு சொற்கள், பரவை, பரமன், பரையன் (பறையன் அதன் பின்வடிவம்) என்பன. பரையன் என்பது பர+ஐயன், பரை+அன் என்றும் இருவழிகளில் பிரியும். பறை(தல்) என்ற வினைச்சொல் பரவுதல் என்ற சொல்லினின்றும் கருத்தினின்றும் தோன்றியதே. பறைதலாவது, சொல் வழியாக கருத்தைப் பரவச் செய்தல். இதுவும் பரவுதற் கருத்தே. உண்மையறிய, பவம் என்பது pavam என்றே பலுக்கப்படுதல் வேண்டும். Bhavam அன்று.

அடிப்படைக் கருத்து: பரவுதல் என்பதே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பரையர் என்ற சொல், நால்வகை நிலங்களுள்ளும் அடங்காமை பற்றி எழுந்ததொரு பெயர். சாதி அல்லது தொழிலால் எழுந்த பெயரன்று.    தமிழர் வகுத்த நானிலங்களிலும் பரந்து வாழ்ந்தமையே பரையர் என்னும் சொல் எழக்காரணமாயிற்று. நால் வகை நிலமே தமிழ் இலக்கியத்திலும் " உலகம்" என்று அறியப்பட்டது. மேற்கூறிய பவம் - உலகம் என்ற விளக்கத்தினை மறக்கலாகாது.  ஒருவரை " நானிலம் போற்றும் நாவலர்" என்று சொன்னால் இலக்கிய நெறியில் அது உலகம் போற்றும் நாவலர் என்றே பொருள்படும். பாலையையும் சேர்த்துக்கொண்டால், ஐந்நிலம் ஆகினும், இதன் பொருள் மாறாது

நானிலமே உலகம். இவ்வாறு பல நிலங்களிலும் பரவி இருந்த இவர்கள் பூசாரிகளாகவும் ஐயர்களாகவும் இருந்துள்ளனர். ஆதலின் பர ஐயன்> பரையன் > பறையன் என்று எழுத்துத் திரிபுச் சொல் அமைந்துள்ளது. செய்தி அறிவிப்பதும் பரவுதல் > பரப்புதலே. அதைப்பரப்பப் பயன்படுத்திய இசைக்கருவி பரை என்றே குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அதைப் பறை என்று எழுத்துவேறுபாட்டினைப் பெரிதும் கருதாமல் எழுதினர் என்று கருதற்குரியது.

ஒரு பறவை பறப்பதும் இடம்விட்டு இடம்சென்று பரவுதலே ஆகும். இவ்வாறு பரவுதல் "பறத்தல்" என்று சொல் ஏற்பட்டு அது பறவை என்றும் அறியப்பட்டமையின் பற - பர என்றுவரும் வேறுபாடு கருதுவதற்குரிய ஒரு பெரிய வேறுபாடு அன்று. அடிப்படைக் கருத்து பரவுதலே ஆகும். இவ்வேறுபாட்டுக்கு வெவ்வேறு எழுத்துகளை வரையறுத்தது பரவை (கடல்), பறவை (பறக்கும் உயிரி) என்று அறிந்துகொள்ள உதவியதே அன்றி அடிப்படைப் பரவுதல், பரப்புதல், பரந்திருத்தல் கருத்துகளில் மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை

அத்வைதப் பறையன் என்பவர்கள் இருந்தமையின் இவர்கள் கடவுட் கொள்கைகள் தொடர்பான சிந்தனைகளில் மிகுதியாய் ஈடுபட்டிருந்தமை அறிகிறோம். இவர்களில் ஒரு பிரிவினர் பிரம்ம சூத்திரம் ஒதியுள்ளனர். சாவைப் பற்றி பெரிதும் சிந்தித்துச் சாத்திறம் இவர்கள் உண்டாக்கினர். அதுவே பின் சாத்திரம் சாஸ்திரம் என்று திரிபுற்றது

இராமாயணம் பாடிய - "தேவபாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினாராகிய" வால்மீகியாரும் இக்குமுகம் சார்ந்தவரே. இவர் பெரும் சங்கதக் கவியும் முதல் அம்மொழிக் கவியுமாவார். இதை யாம் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சங்கத மொழிக்கு இலக்கணம் பாடிய பாணினியும் ஒரு பாணக் குல ஆசானே ஆவான், அதற்கு அவன் பெயர் சான்று ஆகும். பாண் > பாணினி ( பாண்+இன் +). பாரதம் பாடிய வியாசர் மீனவர் ஆகவே, பரையருள்ளும் உட்பிரிவு மீனவர்கள் இருந்துள்ளனர்

வந்தார் போனார் இருந்தார் என்பவற்றில் வரும் ஆர் விகுதியிற் றோன்றிய ஆரியன் என்ற சொல்லும் ஐரோப்பியச் சொல் அன்று. ஆர்தல் நிறைதல்  ---வினைச்சொல். எந்தமொழியில் வினைச்சொல் உள்ளதோ அதுவே அச்சொல்லுக்கு உரிய மொழி. இதை வகுத்துச் சொன்னவர்கள் மேலை ஆய்வாளர்களே. யாம் சொல்லவில்லை. இவர்களுக்கு உள்ள டி.என்.ஏ என்னும் இரத்தத் தொடர்புகளும் நோக்கத்தக்கவை.

சாகும் - சாம் இடைக்குறை அல்லது தொகுத்தல்.

சாதல் என்பது மக்களிடைப் பரவலாக நடக்கும் ஒரு துன்ப நிகழ்வே. ஆனால் சின்னாட்களில் அவர்கள் அதை மறந்துவிட்டு முன்போல் நடந்துகொள்வர். எப்போதும் சாவு முதலிய துன்பங்களில் தொடர்புகொண்டு அதனில் மனமும் செயலும் பரவி நின்றோர் " சாம் பவர்" ஆயினர் எனலும் ஒன்று. சாம் என்பது சாகும் என்பதன் இடைக்குறை. " தான் சாம் துயரம் தரும்" என்ற தொடரைக் காண்க. சாம் என்று இங்கு குறுகி நிற்பது சாகும் என்ற எச்ச வினையே எனலும் ஆகும். இவர்களே சாத்திறம் அறிந்து சாத்திரம் உண்டாக்கினர், அது சாஸ்திரம் ஆயிற்று. இதை (சாத்திறம் > சாத்திரம் என்பது) முன்னோர் இடுகையில் குறிப்பிட்டுள்ளேம். ஆயினும் சாம் என்பது சாம்பவர் என்ற கூட்டுச்சொல்லில் பொருளையைபு உடையதாய் வரவில்லை.

சாத்திரம் இடைக்குறைந்து சாம் ஆதல்

சாம்பவர் என்பதில் சாம் என்ற முன்பாகம் சாத்திரம் என்பதன் இடைக்குறையாம் தகுதி இலக்கணத்தில் உள்ளது.. சாத்திரம் என்பதே சாவினைப் பற்றிய அறிவின் தொகையேயாம். எனவே சாகும் சாம் என்று சொல்வதினும் சாத்திரம் > சாம் எனல் மேலும் பொருந்துவதாகிறது. சாம்பவர் = சாத்திரம் பரப்பியோர்.

சாம்+பவ(ம்)+அர் =  சாம்பவர்.


மூர்த்தி என்ற சொல்

சாக்காடுகளில் தோன்றி ஞானம் தரும் மூர்த்தியே சாம் பவ மூர்த்தி ஆகிறார்.

மூர்த்தி - தோன்றியவர். முகிழ்த்தல் - தோன்றுதல். முகிழ்த்தி > மூர்த்தி.

இச்சொல்லில் முதலாக முகு என்பது மூ என்று திரிந்தது.

அடுத்து இழ் என்ற இரண்டாம் சொற்பாகம் இர் என்று திரிந்தது.

முகு + இழ் = முகிழ். முகு (முன்னுக்கு). இழ் என்பது இர் ( இருத்தல்) தான். இகரச் சுட்டு விகுதி.

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:

சூழ் > சூர். (சூழ்தல் > சூர்த்தல் ). தகரம் இரட்டிப்பது : 1 புணர்ச்சி. 2 ஒலி நயம்.

சூர் > சூறாவளி. ( சூழ்ந்துவீசும் வளி). வளி = காற்று.

முடிவுரை

(1)

இங்கு பவ என்ற பரவற்கருத்து வந்தது பெரும்பான்மை பற்றி. எல்லாச் சாக்காடுகளிலும் பரந்து நிற்பவர் எனற்பொருட்டு பவ என்று வந்தது என்றும் கருதலாம்.

பவ என்ற சொல் வந்த இன்னொரு பெயர் சரவணபவன்

சரவணபவன் என்பதில் பவன் - பரவிநிற்போன். பரமன், பரம்பொருள் கடவுள் என்பது பொருளாகிறது. சரவணப் பொய்கையில் விளையாடி நிற்போன்.  விளையாடி நிற்றல் என்பது பரவி ( வியாபித்து ) இருப்போன் எனற்பாலதே.

பவித்திரம் என்பதிலும் பரவற்கருத்து உள்ளது.  பவித்திரம் என்பது பரவி நிற்கும் திறம். பரவி - பவி. திறம் - திரம். உணரவைக்க இவ்வாறு விளக்குவது எளிது. தூய்மை என்பது அதில் பெறுபொருள் அல்லது அடைவு. கடவுள் எவ்வாறு நிற்பினும் செயல்படினும் தூய்மை என்பது மாறாப்பண்பு.

(2)

சாம்: சாத்திரம் இடைக்குறை. "த்திர" வீழ்ந்தது.

பவம் : பரவம், ரகரம் இடைக்குறை.

சாம்பவர்  குறைச்சொற்களின் ஒரு கோவைச்சொல்.

பரையர்  என்றாலும்  பறையர் என்றாலும் நான்கு நிலங்களிலும்  பரந்து வாழ்ந்த , பரந்து பல்தொழில் புரிந்த, பலசொல்லும் (அறிவிப்புகளும் ) பரவச்செய்த கூட்டத்தினரானவர்கள் என்பதே உண்மை. இச்சொல்லை ஆய்ந்த ஐரோப்பியர்களும் பறை வாசித்தலினால் இப்பெயர் வரவில்லை என்றே கூறினர். பறை என்ற வாத்தியம் எல்லா நிலங்களிலும் வாசிக்கப்படுவதாயிற்று என்றாலும் ஒரு சிறு தொகையினர் ஆங்காங்கு தொழிலாக  அதைச்செய்து பிழைத்தனர் என்பதே சரி. 

(எடுத்துக்காட்டு:  [ மாறாக ]  இடையர் என்போர் முல்லை நிலங்களில் வாழ்ந்தோர்.  )

சமஸ்கிருத முதல் கவியும் இப் (பரையர்தம்) கூட்டத்தில் வந்தவரே. பெருமுனிவர்.

தமிழர்களில் ஒரு சிலர் மிருதங்கம் /  தவில் வாசிக்கிறார்கள் என்பதால் எல்லோரும் தவில்வாசிப்போர் என்பது அறியாமையே. அதற்குப் பயிற்சி உடையோரே வாசித்தல் இயலும்.

இதற்கு வேறு விளக்கங்களும் சொல்லப்படும். ஆயினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

--------------------------------------------------------

தட்டச்சுப்பிறழ்வு - பின்னர் சரிபார்க்கப்படும்.

இதில் முதற் பத்தியில் சில பதிவுக்ள்  மறைந்துவிட்டன.

அப்பத்தி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது

குறிப்புகள்:

Religion is based on or arises from fear. (Lord Russel ) Read his philosophy.

The word "Sasthiram" from சா ( சாஸ்திரம். சாத்திரம், சாத்திறம்) supports this theory. Death, Infirmity and Old Age cause this fear. The Life of Buddha proves it. 

Also consider the terminology: " God-fearing". 

God punishes the wicked. 

பவம்¹ pavam n bhava 1 Birth origin பிறப்பு பின் பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை மணி 30 2 Earthly life உலக வாழ்க்கை சரியாப் பிறவிப் பவந்தரும் திவ் இரா மாநுச 94 3 World உலகம் பேரின்ப வீட்டுப் பவம் சிவப் பிர வெங்கைக்க 75 4 Astrol A division of time one of eleven karaṇam q v கரணம் பதினொன்றனுள் ஒன்று 5 Existence உண்மை கொள்பவத்தின் வீடென் சி போ 8 2 வெண்பா 2  

Tamil Lexicon

பவம், பரவுதல், ---  தொடர்வருதலும் அடங்கும்.


-------------------------------------------------------------------------------

---என்பவை அறிந்து மகிழ்க.


பார்வையிடப்பட்டது:  17092021 1219


திங்கள், 19 அக்டோபர், 2020

இராணுவம் தமிழ்

 "இராணுவம்"  - சொல்லினாக்கம் அறிவோம்.

ராணுவம் என்பது இகரம் இயைத்து இராணுவம் என்றும் எழுதப்பெறும் என்றாலும் அது தமிழில் ரகர வரிசையில் சொல் தொடங்கலாகாது என்பதற்காகவே ஆகும். எனவே ராணுவமென்பது தமிழ் என்று காணாது முடிப்பாரும் உளர்.

பல ரகர வருக்கத்துச் சொற்கள் தமிழில் தலையிழந்தவை.  அரங்கசாமி என்பது ரங்கசாமி என வருதல் போலுமே அது.  ஆற்றிடை நிலத்து அமைந்துள்ள கோயில் ஓர் அரங்கில் அமைந்துள்ளது போல்வதே ஆதலின்,  அரங்கசாமி என அத்தெய்வம் பெயர்பெற்றது.  ராணுவம் என்ற சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளதே.  இதுபோது தாளிகைகளிலும் பயன்பாடு காண்கிறது.

ஓர் அரணினுள் தங்கவைக்கப்பட்டுப் போருக்கு அணியமாய்1 உள்ள படையைக் குறிப்பதே ராணுவமென்பது.  இப்போது அரண் அல்லது கோட்டைக்குளில்லாமல் வேறிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளும் இராணுவம் என்றே சொல்லப்படுகிறது.

அரண் > அரணுவம் > ராணுவமென்பதே இச்சொல்லின் பிறப்பு ஆகும். அர் என்பதே இதன் அடிச்சொல்.   அர் > அரண்;  அர் > அரசன்;  அர்> அரசி எனக்காண்க. இதனை விளக்கும் இடுகைகளைக் கீழே தந்துள்ளேம்.

அரணில் தங்காமல் ஒரு படுதாப் பந்தலில் தங்கினாலும் இற்றை நாளில் ஒரு படையணி  -   ராணுவமே.  இச்சொல் பொதுப்பொருண்மை அடைந்துவிட்டது.

அரணம் என்ற இன்னொரு சொல்லும் காவல், கவசம் என்னும் பொருளது. கோட்டை, மதில் என்பவும் பொருள்.

அரண் உவப்பது படையணிகளையே.  ஆதலின் அரண் + உவ + அம் = அரணுவம் என்பது படையணிகளைக் குறிக்கும். ராணுவம் என்பது தலையிழந்த  திரிபு. ராணுவம் என்பது படை நிறுவாகம் என்றும் பொருதரும்.

அரண்+ உ + அம் = அரணுவம் என்று முடிப்பினும், உகரம் இடைநிலை என்று கொள்ளினும் இழுக்கில்லை.

தமிழில் நிகண்டுகள் முதலியன பல சொற்களைப் பாதுகாத்து வைத்துள்ளன. தமிழில் நூல்கள் பல போற்றுவாரற்று ஒழிந்தன.  அவற்றில் நம்மை வந்தடையாத சொற்கள் பல இருந்திருக்கக்கூடும்.  அரணுவம் என்ற சொல்லும் அத்தகைத்தாகும்.

அரணி = ராணி என்பதும் கருதுக.

அரசன் வாழ்மனை அரண்மனை எனப்படுதலும் காண்க.  அரமனை என்ற பேச்சுவழக்குச் சொல் அர் -  அர என்ற அடிச்சொல்லுடன் இணைந்துநிற்றலின் சொல்லியலில் ஒரு போற்றற்குரிய வடிவம் எனின் மிகையாகாது.. அரண் என்ற சொல்லும்  அர் + அண் என்று இணைந்து,  அரசு நடாத்துவோர் அண்மி வாழும் இடம் என்று பொருண்மை பெறுதலும் கண்டுகொள்க.

அர் >  அர > அரசு.

அர் > அரசு >  அரசன்

அர் > அரசு > அரசி

அர் > அரை > அரையர்.   ( அர் + ஐ + அர் ). அரசுத் தலைவர்.  ஐ = தலைமை.

ஐ விகுதி எனலும் இழுக்கிலது.

அரை > ராய் ( தலையிழந்த அயல்வடிவம்).

ராஜ் ( அயல்வடிவம்)  ரெக்ஸ் - இலத்தீன் திரிபு)

ரெஜினா -  அரசி. ( அயல்வடிவம்.)

அரள், அரட்டு, மூல முழுவடிவங்கள். 

சில தமிழ்ச்சொற்கள் தமிழில் வழக்கிழந்து இனமொழிகளில் வழங்கி வீடுதிரும்பி அறியப்படுதலும் உண்டு. இவ்வாறு அயல் எட்டிய சொற்கள் பெரும்பாலும் திரிந்துவிடுதல் இயல்பு.  ஆய்வின்மூலம் இவற்றை அறிந்துகொள்ளுதல் இயல்வதே என்றறிக. 

குறிப்புகள்:

நிறுவாகம் : நிறுவப்பெற்ற ஆட்சியமைப்பு.  (  நிருவாகம் என்பது சரியன்று).

அரசன் முதலிய சொற்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

மற்றும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

1  அணியமாய் -  தயாராய்

அர் > அரமன் > ராமன்.

அர =  ஆளும்;  மன் > மன்னன் என்றலும் நுணுக்கமாய் அணுகத் தக்க வடிவமே.

இர் > இர் ஆம் மன் : இருள் நிறத்து மன்னன். ( நீல நிறத்து மன்னன் ).  ஆகும்> ஆம்.


தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

சில திருத்தங்கள்  20.10.2020


 


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சீர்கரித்தல் சீகரித்தல்

 கரித்தல் என்ற இறுதியாய் முடியும் பல சொற்கள் உள்ளன. இவ்வாறு முடியும் சொற்களில் ~கரித்தல் என்பது ஓர் துணைவினையாய் முடிவதாகும். 1* இதைக் கொஞ்சம் விவரிக்கலாம் ( "விரி- வரிக்கலாம்").

உப்புக் கரித்தல் -  இங்கு கரித்தல் என்பது துணைவினையன்று.  பொருண்முடிபு காட்டுவதால்.

சேகரித்தல் -  இதில் கரித்தல் என்பது ஒரு துணைவினை.  கரித்தல் என்பது " வர" என்று பொருள்படும்.  "கரித்தல்" எனற்பாலது,   ஆதலின் ஒரு துணைவினை.

சேகரித்தல் என்பதில் சே என்பது சேர் என்பதன் கடைக்குறை.

அருகுதல் என்பது குறைதல் என்னும் பொருள் உடையது.  இன்று செப்புக்காசுகள் அருகியே உலகில் வழக்கத்தில் உள்ளன.  இவ்வாக்கியத்தில் அருகி என்பது மிகக்குறைந்து என்ற பொருளைத் தரும்.

அரு என்ற உரிச்சொல்,  அருகு(தல்),  அரி(த்தல்)  என்று வினைச்சொற்களாகும்.

அருகுதல் என்பதில் போல,  அரித்தல் என்பதிலும்  குறைதல் என்பதே அடிப்படைப் பொருள்.  ஏனெனில் நீங்கள் ஓர் ஆற்றங்கரையில் உட்கார்ந்துகொண்டு, எதிரில் நீரில் உள்ள செடிகொடிகளை  அரித்தெடுக்கும்போது,  கைக்கெட்டிய தூரம் வரை உள்ள அவற்றை உங்களுக்கு வேண்டிய அளவு அருகில் (கிட்டக்)  கொண்டுவந்துகொள்கிறீர்கள்.

அப்படிக் கொணர்ந்து அவற்றை எடுத்துக்கொள்கிறீர்கள். இதனைக் காண்பவர், கொடிகளை அரித்து எடுத்தார் என்பர். விரலால் எடுத்திருக்கலாம். அல்லது ஓர் இரும்பு வரட்டியால் எடுத்துமிருக்கலாம். ஒரு முனைவளை குச்சியால் எடுத்து இருக்கலாம்.  எப்படியோ காரியம் ஆயிற்று.

மீண்டும் சொல்வது  அரு > அரி > அரித்தல் ( அருகிற் கொணர்தல்) என்பதே.

எனவே, சேகரித்தல் என்பது சேர்+ கு+ அரித்தல் >  சேகரித்தல் ஆகி உருவான சொல்.

கு என்பது சொல்லாக்க இடைநிலை. சேர்தலிடம் குறிக்கும்.

சீர்கரித்தல் என்பது சீர்மிகும்படியாகவும் வருமாறும்  தன்னிடத்து அடைவுகொள்ளுதல்.  

சீர்கரித்தல் > சீகரித்தல் > ( ஸ்ரீகரித்தல்) [ என்றும் வழங்கும்].

தமிழில் அருகியும் ஏனை இனமொழிகளில் மிக்கும் வழங்கும். 


குறிப்புகள்

1*    ~கரித்தல் என்று முடியும்  சொற்கள் சில:

அலங்கரித்தல் 

கொக்கரித்தல்

சங்கரித்தல்

அபகரித்தல்

பரிகரித்தல்


கடைக்குறை:

சீர் > சீ.  சீர் + தனம்.  > சீதனம்.  சீர்> ஸ்ரீ.  ஸ்ரீதனம்.

சீர் கொண்டுவந்தால் உடன்பிறப்பு.  (சகோதரி.)  பழமொழி.


இவற்றுள்  அறிந்தன பின்னூட்டமிட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சீகரித்தல் -    சில அகராதிகளில் இது கிட்டுவதன்று.

மெய்ப்பு ( பின்னர்.)





புதன், 14 அக்டோபர், 2020

கண்ணும் கடைக்கணித்தலும்.

 ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எதிர்கொண்டு  தேடிப்பிடித்து அறிந்துகொள்ளலாம். ஆனால் இவ்வாறு செல்வதாயின், அதிக முயற்சியும் காலமும் தேவைப்படும்.  குறைந்த கால அளவில் மிகுந்த எண்ணிக்கையிலான சொற்களை உணர்தல் விழைந்தால்,  சொற்களின் அமைப்புகளையும் மூலங்களையும் அறிந்துகொள்வது பெரிதும் உதவும் என்று ஆசிரியன்மார் சொல்வர். எடுத்துக்காட்டாக, பூ என்ற சொல்லுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல்( உண்டாதல் )  என்பதும் ஒன்றாம்.

இவ்வுலகம் உண்டான ஒன்று என்று மக்கள் நினைத்தனர். ஆகையால் உலகிற்கு ஏற்பட்ட பெயர்கள் சிலவற்றில் இப்பொருளைக் கண்டு மகிழலாம்.

பூமி. -- "பூத்த இவ்வுலகம்." --   தோன்றிய இவ்வுலகம்.   இச்சொல்லை வாக்கிய வடிவில் தருவதானால்,  பூத்திருக்கும்  இது என்ற கருத்துதான்   --- சுருங்கி  பூ-ம்-இ என்று என்று அமைந்தது.  பூம் = பூத்திருக்கும்   > பூ~ம்.  இ - இது.

இப்புவியும் அழகியது.  ஓர் பூவனம்.  தோன்றிய வனம்.  இது சுருங்கிப் புவனம் ஆனது.

பூ இ - பூத்த இது >  பூவி ( முதல் சுருங்கி )  புவி,  அதே பொருள்.


இவ்வாறே கண் என்ற சொல்லினின்று அமைந்த சொற்கள் பல.  பழங்கால மனிதன் கண்ணால் கவனமாக எண்ணித்தான் கணிக்க அறிந்துகொண்டான்.

ஆகையால் கண் என்ற சொல்லினின்று கணித்தல் என்ற சொல்லும் வந்தது.

கண் > கணக்கு

கண் > கணிதம்.

கண் > கணி

கண் > கணியன் ( சோதிடன்)

கண்ணை மூடிக்கொண்டும் கணிக்கலாமே என்பீர். எனினும் அஃது இயல்பன்று.

இவ்வாறு அறிக.

மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_9.html

குணமென்னும் சொல்:   https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_18.html

நம் குறைகளைச் சொல்லி இறைவனிடம் / இறைவியிடம் கண்கலங்கினால்

நம்மைக் கடைக்கண்ணால் சிறிது பார்த்து அவ் இறை அருளுமாம்.  இதற்கு

கடைக்கணித்தல் என்ற சொல் உருவானது. கடைக்கண்ணால் நோக்கி அருளுதல்.

அறிவீர். மகிழ்வீர்.


தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

மெய்ப்பு:  15.10.2020.




ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சீணித்தல்

 நன்றாக வளர்ந்துவந்துகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு,  அதன் வளர்ச்சி நிற்கவோ குறையவோ செய்யுமாயின் அது சீணித்துப் போய்விட்டதென்பார்கள். ஊர்ப்புறங்களில் "வசக்கெட்டு"ப் போய்விட்டது என்று சொல்வதுமுண்டு. இச்சொல்  (சீணித்தல் ) இவ்வாறு உருவாயிற்று:

நிற்றல் >  நித்தல். என்றாகும்.  -ற்ற என்பது -த்த என்று மாறுவது பெருவழக்கான திரிபு. ஓர் எடுத்துக்காட்டு:-

சிற்றம்பலம்

சித்தம்பரம்  லகரமும் ரகரமாய் மாறிற்று.

இச்சொல் இடைக்குறைந்து:

சிதம்பரம் ஆனது.1


இச்சொல்லின் உருவாக்கத்தை வேறுவிதமாகக் கூறுவோருமுண்டு. ஆயினும்

இதுவே சரியான சொல்லமைப்பு ஆகும்,


நித்தல் என்பது இவ்வாறமைய,3

சீர் + நித்தல் >   சீணித்தல்.

சீர்நித்தல் > சீணித்தல் >  க்ஷீணித்தல். என்றாம்.


இன்னோர் எடுத்துக்காட்டு:

சீர்த்தேவி >  சீதேவி > ஸ்ரீதேவி.

சீர் என்றது சீ என்றானது கடைக்குறை.

வாருங்கள் <  வார் + உம்+ கள் >  வா(  )+(  ) ம் + க(ள்) > வாங்க.

வார் > வா.  சீர் > சீ.

வாராய், நீ வாராய்.  வரு+ ஆய் என்பது வாராய்  ஆகும்.

வாரீர் வாரீர். என்பதும் காண்க.

 எடுத்துக்காட்டுகள் சில தரப்படும். இன்னும் வேண்டின் நம் இடுகைகள் பலவும் வாசித்துக் குறிப்புகளும் கொண்டு போதிக்கவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சீர்+வனைதல் > சீவனை > சீவனம் > ஜீவனம்.2

வனைதல் : செய்தல், அலங்கரித்தல்  என்பது.

வாழ்நாளைச் சீராக்கிக் கொள்ளுதல்.

சீர் நிற்றலே சீணித்தல் என்றாயிற்று அறிக, மகிழ்க.


குறிப்புகள்

1  பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. பிறரும் கூறியுள்ளனர்.  எமது

ஆய்வும் இம்முடிவினதே.

2  உயிர் > யிர் > ஜீ.  > ஜீவன், ஜீவன.  இலங்கை ஞானப்பிரகாச அடிகளார்.

3 வற்றல் > வத்தல்.  வத்தச்சி என்ற பேச்சு வழக்கும் காண்க.

தொற்றல் > தொத்தல். ( தொற்றிக்கொண்டு நடப்பவன்).

உடற்குறை உடையோர்க்கு முன் காலங்களில் யாரும் அவ்வளவு இரக்கம்

காட்டுவதில்லை என்று அறிகிறோம்.


தட்டச்சுப்பிழைத் திருத்தம் பின்

வியாழன், 8 அக்டோபர், 2020

புட்பக விமானம்.

 புள் என்பது பறவை என்று பொருள்படும்.

புள் போல  மூக்கு, வால், பக்கங்கள் அமைவுண்ட ஒரு விமானம்தான்

புள் + பகம் + விமானம் >  புட்பக விமானம்.

பகம் எனின் பகுதி(கள்).

விழுமிய அளவுகளை உடைய ஊர்தி விமானம்.

விழு+ மானம் = விமானம் ( இங்கு ழு குறைந்தது).

விழுமிய = சிறந்த.

மானுதல் - ஒத்தல்

மானு + அம் = மானம்.  அளவு.

மானம் வரின், மானம் உடையவன் என்ற தொடர்களில்,

மானம் ஒரு பெருமை குறித்தது. சமுகத்தில் போற்றப்படும் அளவுடன்

தானும் அளவொத்து இருப்பதே மானம். அடிப்படைப் பொருள் அளவு என்பதே.

புஷ்பத்தினால் செய்யப்பெற்ற வானூர்தி பறக்காது. மலர்கள் அலங்காரம் ஆகலாம்.

புதன், 7 அக்டோபர், 2020

தூரமும் தொலைவும்

 முன் காலங்களில் தொலைவைக் கணக்கிட சில வழிகள் இருந்தன.  ஆனால் தொலைந்து போய்விட்ட ஒரு பொருள் எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அது தொலைவை அடைந்துவிட்டது என்றனர். ஆகவே தொலைவு என்ற சொல்லுக்கு  "தூரம்" என்ற பொருள் ஏற்பட்டது. பண்டை மனிதன் இவ்வாறு உணர்ந்துகொண்டது ஒரு வகையில் அவன் சிந்தனைத் திறனைக் காட்டுகிறது. ஒரு நாய்க்கு அதன் இயமானன் ( எஜமானன்)  தொலைவிற்போய்விடின் ஊளையிட்டுக் கேட்டுவந்திடுவான் என்று நம்பிக்கொண்டிருக்கும்.

தொலைவைக் கணிக்க முற்பட்டுவிட மாட்டாது

ஒருவன் துரத்தப்பட்டு தொலைவிற் சென்றுவிட்டால் துரத்தியவனுக்கும் துரத்தப்பட்டவனுக்கும் உள்ள இடைவெளி தூரம் எனப்பட்டது. தூரம் அல்லது தொலைவு என்பதை இப்படியும் அறிந்துகொண்டனர். துர > துரத்து.  துர + அம் = தூரம். முதனிலை நீண்டு விகுதிபெற்ற தொழிற்பெயர். இல்லற வாழ்வு வேண்டாமென்று ஒருவன் தானே தொலைவிற் சென்றுவிட்டால்,  அதுவும் துறவு என்றே சொல்லப்பட்டது. இவ்வாறு கூறவே.  துர> தூரம்,  துற > துறவு என்பனவற்றின் தொடர்பு இவற்றிலிருந்து தெளிவாகிறது.

துருவு என்ற வினைச்சொல்லும் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் துளைத்துச் செல்லுதலைக் குறிக்கும்.

துள் > துளை. ( ஐ )

துள் > துருவு.   துள்> துர.

இவற்றுள் உள்ள உறவினை ஆய்ந்து தெளிந்துகொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.


திங்கள், 5 அக்டோபர், 2020

சாதி, தொழில் சில கற்பனை உதாரணங்கள். நெல்லர், கடலையர்.

சாதி (ஜாதி)களை வகுத்தவர்கள் அரசர்களா பூசாரிகளா என்பது ஒரு கேள்வி. இது அவ்வந் நிலப்பகுதிகளில் இருந்த நிலைமைகட்கு ஏற்ப, அரசனாகவோ அல்லது பூசாரிகளாகவோ இருக்கலாம். கோயிலுக்கு வழங்குவதற்காக ஒரு கூட்டத்தார் எப்போதும் கடலை என்னும் கூலத்தையே கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். பூசாரியும் அதைப் பெற்றுக்கொண்டார். அம்மனுக்கும் அதை ஆக்கிப் படைத்துத் தாமும் தம் குடும்பத்தினரும் வீட்டிலும் ஆக்கி உண்டு மகிழ்ந்தார். வந்து பணிந்த பிறருக்கும் வழங்கினார். நாளடைவில் இவர்கள் கடலை கொடுத்தோர் என்பதனால் "கடலையர்" என்று குறிக்கப்பட்டனர். இப்படிக் குறிப்பது ஒரு சுட்டும் வசதிக்காகத்தான் என்றாலும் அது ஒரு சார்பினரைக் குறிக்க வழங்கும் சொல்லாகிவிட்டது. இதற்குக் காரணம், நெல் க ொடுத்தோரிடமிருந்து இவர்களைப் பிரித்துச் சுட்ட ஒரு தேவை இருந்ததுதான். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு ஒரே மாதிரி நிகழ்வுகள் அமைந்துவிடின், கடலையர் என்பது ஒரு சாதியாகிவிடும். தொடங்கிய தொழிலானது, பிறப்பினோடு ஒட்டிக்கொண்டு பிறப்பின் அடிப்படை உடையதாக மாறிவிடும். இவர்கள் என்ன சார்பினர் எனின், "கடலையர்" சார்பினர் என்றாகிவிடும். சார்பு - சார்பினர்; சார்பு (பு விகுதி) > சார்தி ( தி விகுதி). இது இடைக்குறைந்து சாதி ஆகிவிடும். ரகர ஒற்றுக்கள் ( ர் ) மறைதல் பெருவரவு. எம் இடுகைகளைப் படிக்கும்போது குறித்துக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்வதா அல்லது கூடாதா என்பதை முடிவில் செய்துகொள்ளுங்கள். பிற்காலத்தினர் இந்தக் கடலையர் பிறப்பினால் அவ்வாறு ஆனார்கள் என்று எண்ணுவது இயல்பான ஒரு விளைவுதான். சொல்லும் கடலையர் > கலையர் என்றோ, கடலையர் > கடயர் என்றோ, கடலையர்> கயர் > கயரி என்றோ வந்து தொலையும். இலத்தீன் மொழியாயின் கயருஸ் என்று திரிந்திருக்கும். சீனமொழியாயின் "கைருங்" என்றிருக்கும். மலாய் மொழியில் கய்ராங் என்பது ( சீமாங் போல ) தோன்றக்கூடும். அவனவன் வாய்க்கிசைய வருமாயினும் சில விதிகள் மேல் எடுபடலாம். நெல் கொடுத்தோர் நெல்லர் என்று பெயர் பெறுவது இயல்பு. எப்படியும் இதெல்லாம் காலப்போக்கில் திரியும். நாக்கு என்னும் உறுப்பும் உதடுகளும் காரணம். பூசாரிக்குப் பதில் கடலை அரசன் அல்லது அவனது அதிகாரிகளிடம் இறுக்கப்பெற்றிருப்பின், இதெலாம் அரசு தொடர்பான நிகழ்வுகளும் விளைவுகளாகவும் ஏற்பட்டிருக்கும். நெல்லர் உயர்வும் கடலையர் தாழ்வும் எப்படி வந்திருக்கும்? நெல்லுக்கு அதிக விலை அரசு க ொடுத்தால் நாளடைவில் உயர்வு தாழ்வு ஏற்படும். சில நாடுகளில் உயர்வு தாழ்வு ஏற்படவில்லை. இது மக்களையும் மனப்பாங்கையும் பொறுத்ததாகும். கடலை கொடுத்தோர் தங்கள் சாதிப்பெயரை கடலை + அர் என்று பிரித்தறிதலின்றி, கடல் + ஐயர் என்று பிரித்து, கடலாடு பிரபுக்கள்1 என்று கூறி, மேனிலை கூர்தல் கூடும். எவையாயினும் எளிமையாகுவதில்லை. நெல்லர் கடலையர் என்ற சொற்கள் புனையப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் இல்லாத சொற்களைக் கொண்டு உணர்விக்க இவ்விடுகை முனைந்துள் ளது. நெல்லரி என்ற சொல் உள்ளது. நெல்லரி தொழுவர் என்ற தொடர் புறநானூற்றில் (209) வந்துள்ளது. நெல்லரி - கைப்பிடி நெல்கதிர். நெல் உழவு தொடர்பான சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. இற்றை நாளில் இவற்றைக் காப்பதும் கடினமே. முயற்சி செய்க. திருத்தம் பின்னர். குறிப்பு: 1. பெரு > பெருமை; பெரு > பெருபு > பிரபு ( திரிசொல் ). ஆகுபெயராய் பெருமை உடையவரை (ஆளைக்) குறிக்கும். edits and paragrahing have been lost. (error) after posting.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முல்லும் மூலதனமும்

 இந்நாள் வேறொரு கோணத்தில் சிந்திப்போம்.

முல் என்பதொரு தமிழ் அடிச்சொல். பழங்காலத்தில் மொழியில் புதிய சொற்கள் தேவைக்கேற்பத் தோன்றிக்கொண்டிருந்த சமையத்தில்,  விகுதிகள் சேர்க்காமல் அகத்திரிபுகளின் மூலமாகவே சொற்கள் உருவாகின.  அவ்வாறு சொற்கள் தோன்றியமையை பின்வரும் சொல்லமைப்பில் கண்டுகொள்ளலாம்.

முல்   ( அடி )  >   முன்..

முன் என்ற சொல் காலமுன்மை,  இடமுன்மை இரண்டுக்கும் உரியதாய் வரும்.

எடுத்துக்காட்டு:

நேற்று முன்  (  இது கால முன்மை).

வீட்டின் முன்  ( இது இடமுன்மை).

தந்தைக்கு முன் ( இதுவும் காலமுன்மை).

முல் என்பதிலிருந்து முன் என்பதை உண்டாக்க,  விகுதி ஏதும் இன்றியே ஓரெழுத்து மாற்றத்தின்மூலம் சொல் பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறே  ஆள் என்ற பெண்பால் விகுதியினின்று ஓர் ஆண்பால் விகுதியைப் படைக்க, ஓரெழுத்துத் திரிபே போதுமானதாய் இருந்தது.

ஆள் >   ஆன்.   ( ள் >ன்) 

வந்தாள் >  வந்தான்.

ஆள் என்பது திறச்செயல் குறிக்கும் சொல்லாகும்.   அரசி ஆள்கிறாள். அதாவது எதை எப்படிச் செய்து எவ்வாறு நடத்திமுடிக்க வேண்டுமென்பதை அரசி தீர்மானிப்பதுடன், அதற்கான செயல்பாட்டு மக்கட்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறாள். செயல் முற்றுறுவிக்கின்றாள்.   இதுதான் ஆள் என்பதன் பொருள். பெண்கள் இது செய்தமையால்,  அவள் வெறுமனே  வந்து, தந்து என்று வினைகளால் சொல்லப்படாமல்  வந்தாள், தந்தாள் என்று  ஆள் என்னும் விகுதி கொடுத்துச் சொல்லப்பட்டாள்.  பிற்காலத்தில் ஆண்மகன் செயல்களை முடித்த காலக்கட்டத்தில்  ஆள் விகுதியே ஆன் விகுதியாய் மாறியமைந்தது. அவனது செயல்முடிப்புத் திறனைக் காட்டிற்று.

ளகர ஒற்று ணகர ஒற்றாகவும் மாறும். அவ்வாறு மாறியபின், பொருண்மையிலும் சற்று மாற்றமுற்று தொடர்புடைய (அணிமைப்) பொருளுக்கு மாறிவிடும்.  இதற்கு  ( உதாரணம் : உது ஆர் அணம் அல்லது ) எடுத்துக்காட்டு:

உள் ( உட்பக்கம்)

உள் >  உண்  ( தின்பொருளை வயிற்றினுள் வாய்வழிச் செல்லவைப்பது)

எழுத்தும் மாறிப் பொருளும் தொடர்புடைய வேறு கருத்துக்கு மாறியது.

இதுபோலவே  ஆள் என்ற சொல்லினின்று ஆண் என்ற சொல் தோன்றியது.


முல் என்பது முன்னிருப்பைக் குறித்ததென்பது மேற்கூறியவற்றால் அறியப்படும். கவனிக்க:

முல் - முலை ( முன்னிருக்கும் பால்தரும் உடற்பகுதி )

முல் > மூல் > மூலை : சுவரின் முன்பகுதிகள் இணைப்பில் ஏற்படும் இடம்

முல் > மூல் > மூலம் :  காலத்தால் முற்பட்டு பின்வருவனதொடர நிற்பது.

முல்> மூல் என்பது முதனிலைத் திரிபு. ( நீட்சித் திரிபு)

முல் > மூல் > மூலிகை:  முன்னாளிலிருந்து நோய்நீங்க இயைந்த  மருந்து.

   இயை > இகை.   கை விகுதி என்றும் விளக்கலாம். 

தனமென்பது தன் செல்வம்   தன் - தனம். 

மூலதனம் எனின், முன் ஒருவன் இடும் தனம்.   முதல் எனினும் அதுவாகும்.


இவற்றை நேரம் கிட்டினால் விரித்து அறிந்துகொள்வோம்.



இப்போது இவற்றை அறிந்து மகிழ்க

இடையில் வந்து கண்டோர் பொருட்டு இருமுறை நிறுத்தவேண்டியதாயிற்று.



தட்டச்சுப் பிறழ்வு பின் கவனிக்கப்படும்.


இவற்றையும் வாசித்து அறிக:


தனம் :  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_23.html

முகமாவு பூசிக் கவின்பட்ட சொற்கள்: 

 https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_6.html

விபசாரி  https://sivamaalaa.blogspot.com/2017/01/how-formed.html

மூலம் https://sivamaalaa.blogspot.com/2009/05/etymology-by-mala-ref-page9-extract.html

சொல்லாய்வுகள் https://sivamaalaa.blogspot.com/2017/02/postings-on-etymology-retrieved.html

வற்சிறம் https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_20.html

காமுகம் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

காமி  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_32.html


  



 

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தியானித்தல், தியாகம் இன்னும் சொற்கள் சில

முன் நாட்களில் தியானம் செய்தவர்கள், பெரும்பாலும் ஒரு விளக்கின் முன் அமர்ந்து தியானித்தனர். அது பின்னர் நிலவு ஒளியில் தியானம் செய்தலாக வளர்ச்சி அடைந்தது. இப்போது வெளியில் அமர்ந்து தியானிப்பது என்பது மிகவும் குறைந்துவிட்டது.  கொசுத்தொல்லை, மற்றும் திருடர்கள் தொல்லை, வழிப்போக்கர் தொல்லை என்று பலவிதத்தொல்லைகள் வருதல் கூடுமாதலின்.

இன்னுமே, தீயானியைத்தல் ( அதாவது தீயால் மனவுணர்வுகளை நிலைநிறுத்தி இயைத்தல் ) என்பதே பெரிதும் ஏற்புடைத்தாகிறது.  தீ என்ற சொல்.,  விளக்கு, தீபம், நெய்விளக்கு என்று பலவகைப்படும் ஒளிதாரிகளையும் உள்ளடக்கும்.

தீயானியைத்தல் என்பதில் யை குன்றியதாலும் தீயா என்ற முதல் தியா என்று குறுகியதாலும்  தியானித்தல் ஆனதெனபது உணரற்பாலது. முதனிலை குறுகித் திரிந்து இடைக்குறைந்த சொல்

தியாகம் என்பதும் தீயின் தொடர்பானதுதான்.  ஆகுதல் என்ற சொல் முடிதலையும் குறிக்கும்.  குழம்பு ஆகிவிட்டது என்று சொல்வதை அறிந்திருக்கலாம்.  எனின், குழம்பு தீர்ந்துவிட்டது என்பதே பொருள்.  ஆகுதல், ஆதல் என்பவை தொடக்கம் குறிப்பவை. இங்கு முடிவு குறிக்க வந்தது இடக்கர் அடக்கல். எதுவும் முற்றுப்பெற்று இருந்தாலும், முடிந்தது என்று சொல்லாமல் மாற்றமாகவே சொல்லுதல் யாதிலும் நலமே காணும் உயர்பண்பு ஆகும்.  கெடுதலையும் தொடுதலையாகக் கொள்ளுதல் வேண்டும்.  தொடுதல் - தோண்டுதல், தொடங்குதல் குறிக்கும் சொல்.

எ-டு: 

தொட்டதெல்லாம் பொன்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி.


தீ + ஆகு + அம் =  தியாகம் ,   இது சா > சவம் என்பதுபோல் முதல் குறுகிற்று.

தீயில் புகுந்து உயிர்விடுதல் ஓர் உயர்வகை ஈகமாகக் கருதப்பட்டது,  முன்னாட்களில்


ஊழ்குதல் என்பதும் தியானித்தலாம்.  ஆயல் என்ற சொல்லும் இதையே

விளக்குவதாகும்.

அறிக மகிழ்க.


தட்டச்சுப் பார்வை பின்.










 https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_10.html

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாட்டுக் கலைமேதை பாலசுப்ரமணியம் மறைவு

 பாட்டினால் மனங்கவர் பண்பாளர் அவரில்லை

வீட்டினில் இருப்பதும் பாட்டின்றி வீண்படுமே

கூட்டுவார் குழைவினைச் செவிகளில் நறவெழுகும்

நாட்டினுள் பாலையே பாலசுப்ரர் மறைவாலே. 

சனி, 19 செப்டம்பர், 2020

சரணாகதம்

 சரணாகதம் என்பது   அடைக்கலம் புகுதல், தஞ்சம் அடைதல் என்னும் பொருளில் ஆளப்படும் சொல்.

சரண் + ஆகு + அது + அம் = சரணாகதம்.

சரண்புகுதல்.

இனி, கதம் என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டு:

கதம் -  அடைதல்.

சரண் +  கதம் >  சரணாகதம் எனினுமாம்.

சரண் + கதி > சரணாகதி என்பதுபோல்.

இடையில் வருவது  ஆ ; ஆதல் குறிக்கும் சொல். இடையில் ஆகதம்,  ஆகதி என்பவாய் வருதலின்,  இவை வினைத்தொகை.  வலிமிகாது. இவ்வாறும் விளக்கலாம்.

சரண் என்பதன் மூலம் அரண்.

அரண் > சரண்

சரண் என்பது முழுமையாய் " சரண்புகுதல் " என்பதே.

அரண்புகுதல் என்பதும் அது.

நாளடைவில் புகுதல் என்பது விடுபட்டு,  சரண் > சரணம் ஆயிற்று.

இன்னொரு காட்டு:  அமண் - சமண்.

அடு > சடு > சட்டி.   ( + இ).

இந்தப் பாடலில்   சரணாகரம் என்பது  ஆளப்பட்டுள்ளது.

" தாண்டவம் செய் தாமரை,  பூஞ்சரணாகரம்   நம்பும் யானும்

அடிமை அல்லவோ?  --  எனை

ஆண்டருள் ஜெகதம்பா யானுன்

அடிமை அல்லவோ".  (பாபநாசம் சிவன்)

பொருள் :  குளத்தில் ஆடும் தாமரை உன்னைப் பணிகிறது. 

உன்னிடம் அடைக்கலம் புகுகின்றது,  அதுபோல்  யானும் பணிகின்றேன். நான்

உன் அடிமை ஆவேன். (என்னைக் காப்பாற்று ) என்றபடி.

பூவினால் சொல்லப்படும் சரணம் பூஞ்சரணாகரம்


உங்கள் உசாவலுக்கு:

சாம்பிராணி  https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2261.html

"உழிஞைத் திணை" https://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_77.html

பரிகாரம்  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_95.html

அரசன் அரட்டன் https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரசனும் அரணும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

சாம்பிராணி முதலிய பொருட்கள் https://sivamaalaa.blogspot.c

Pom/2018/09/blog-post_23.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_31.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_20.html

( இவற்றுள் தொடபற்றவற்றை புறக்கணித்துவிடுங்கள்.  நன்றி).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிபார்க்கப்படும்.



வியாழன், 17 செப்டம்பர், 2020

குபேரன்

 குபேரன் யார் என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லை அமைத்த விதம் நாமறிவோம்.

குவை என்ற சொல் குவியலைக் குறிக்கும் சொல்.  வேண்டிய பொருளோ வேண்டாத பொருளோ -  ஓரிடத்தில் குவிந்துவிட்டால் அது குவை. மணற் குவை "ஓங்கு மணற் குவை"  (புறநானூறு  24). பணம், செல்வங்கள் ஓரிடத்துக் குவிந்துவிடுகின்றன.  முற்றத் துறந்த முனிவருக்கு செல்வக்குவியல் தேவையற்றது. உணவுகூட மிகுதியாய் எடுத்துக்கொள்ளமாட்டார்.  மூச்சுப்பயிற்சிகள் செய்து பசி, தாகம் ( நீர்விடாய்) முதலிய அடக்கிக்கொள்வார்.  கிடைப்பன பிறர்க்களித்துவிடுவார்.  தேவர் சொன்ன " என்பும் உரியர் பிறர்க்கு" என்பதை எண்பிப்பவர் அவர்.  செல்வம் தேவை என்பவர், அவற்றைக் குவித்து வைத்துக்கொள்வர்.  இவர்போன்றோருள் " ஈதல் இசைபட வாழ்தல் " என்று இயன்ற மட்டும் ஈந்து வாழ்வாரும் சிலர் உலகில் உளர்.

குவை என்ற சொல் வகர பகரத் திரிபு விதிப்படி,  குபை என்று திரியும்.  ஆனால் குபை என்னும் சொல் கிட்டவில்லை..  மொழியில் மறைந்தொழிந்த சொற்கள் பல. அவற்றுள் இதுவும் ஒன்றாகலாம்.  அல்லது தனித்து இத்திரிபு இலங்கவில்லை என்பதாகவும் இருக்கலாம்.  இது நிற்க.

குவி > குவை > (குபை) > குப்பை ( வேண்டாத குவியல்) என்பது உள்ளது. பகர ஒற்று இரட்டிப்பு : காண்க. இவ்வாறு வடிவங் கொள்வது செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோர்க்கு ஏற்புடைத்தென்று நாம் எண்ணலாம்.

ஏர் என்பது "உழவு ஏரைக்" குறித்தல் மட்டுமின்றிப் பிற பொருளும் உடையதே. அப்பொருள்களில் உயர்ச்சி ஒன்றாகும்.  ஏர்தல் என்ற வினைச்சொல்லும் உள்ளது.  ஏர்தல் - எழுதல். மேலெழுகை.

செல்வக் குவியலால் மேலெழுந்தவன் குவை + ஏர் + அன் =  குவேரன் > குபேரன் ஆவான்.  குபேரன் என்ற திரிசொல் நிலைவழக்கு உற்றபின், குவேரன் என்னும் இடை வடிவம் ஒழிதல் மொழியியல்பே.

அறிக. மகிழ்க


மெய்ப்பு பின் .



 

புதன், 16 செப்டம்பர், 2020

பொம்மலாட்டம்

 இச்சொல்லை அறிவோம்.

பொய்+ மெல் + ஆட்டம் >  பொய்ம்மெல்லாட்டம் > பொம்மலாட்டம்.

உலகைப் பொம்மலாட்டம் என்றே இரு;

வாழ்வைக் குடங்கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு!

இவை பட்டினத்தடிகள் தந்த பொன்மொழிகள்.

நிலநடுக்கம் முதலிய கடுமையான ஆட்டங்களுக்கு முன் மனிதன் ஆடும்  ஆட்டம்  ஒரு மெல்லாட்டம். 

எல்லா ஆட்டங்களும் உண்டாகும்; பின் ஒழியும்; இனியும் தொடங்கும்; பின் ஒழியும். இவ்வாறே உலகம் சென்றுகொண்டிருப்பது.

முகக்கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடித்து

உடல்நலம் போற்றுவீர்.


குறிப்பு:  பொருமலால் ( பொறாமையால் ) ஆடுதல் -  பொம்மலாட்டம்.பொருமல் > பொம்மல்.  எனலும் ஆம்.  ஆதலின் இத்திரிசொல்  ஓர் இருபிறப்பி. இடனறிந்து பொருள்கொளல்.  அழுதுவிடாமல் விம்முவதும் பொருமல்.  அச்சமும் பொருமல். பல்பொருளொருசொல் 

பொரு > பொம் என்றாகும்.

ஒ.நோ:  பெருமான் -  பெம்மான்.   பெரு> பெம் போன்ற திரிபு.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

திருத்தம் : 17092020 செய்யப்பட்டது.

தயார் ( போருக்குத் தயார் !)

 நாம் இப்போது தயார் என்ற சொல்லை அமைப்பறிந்து கொள்வோம். இச்சொல் தமிழர்  சிற்றூர்களிலும் வழக்கிலுள்ள சொல்லாகும்.  இதற்கு மாற்றாக வழங்கத் தக்க தமிழ்ச்சொல் " அணியம்" என்பதாகும். " நாம்  நூல்நிலையத்துக்குச் செல்ல அணியமாய் உள்ளோம்" என்னும் வாக்கியத்தில், அணியமாய் என்பது தயாராய் என்று பொருள்படும்.

அணியம் என்ற சொல்லில் மட்டுமின்றித் தயார் என்ற சொல்லிலும்கூட அடிப்படையாக நிற்பது அணிமைக் கருத்து ஆகும். அண் என்ற அடிச்சொல் அருகில் இருத்தலைக் குறிக்கும்.  அருகில் இருத்தல் என்பது  இடம், காலம்,  பொருள் உருவம் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுட் படும். காலத்தால் அடுத்தது, பின் இடத்தால் அடுத்தது, உருவத்தால் அடுத்தது ( மந்தியும் மனிதனும் போல ).... என்றிவ்வாறு விரித்துக்கொள்ளலாம்.

குற்றவாளியைக் கொல்வதற்கு அரசன் தீர்மானித்தபின் அதற்கேற்ற காலத்திற்காக அவன் காத்திருப்பானாகில், அதுவே அவனைத் தயங்கி நிற்கும்படி செய்கிறது. (காலத்தால் தயக்கம்).  அரசவையில் வீற்றிருப்பவன் குற்றவாளியைக் கொல்வதற்கு அதற்குரிய களத்திற்குச் செல்லக் காத்திருத்தலும் கூடும்.  அரசவையிலே அவனைக் கொல்வது வழக்கமன்று என்பதொரு காரணமாயும் இருத்தல் கூடும். இஃது இடத்தால் தயங்குதல். அரசன் அணிமைநிலைக்கு வந்துவிட்டான் எனினும், தள்ளிவைத்து நிற்றலும் பின்னர் செயல்படுத்தக் குறித்துவைத்தலும் தயங்குதல் > தய > தய+ ஆர் = தயார் ஆகிறது. ஆர்தல் - நிறைதல்.  இஃது தயக்க நிறைவு.  அது நீங்கிடில் செயல் தொடரும்.

தயங்கு - தய என்னும் சொல்வடிவங்கள்  தங்குதல் என்பதனோடும் தொடர்பு உடையவை.  தூங்குதல் என்பதும் தயங்குதல், காலம் கடத்துதல் என்பவற்றோடு தொடர்புடைய கருத்தே ஆகும். மொழியின் தொடக்க காலத்தில்  த - தூ என்று மிக்கச் சிறிய வடிவங்களாய் இருந்திருக்கவேண்டும். ( சீன மொழியிலும்  (த >) தான் என்பது சற்றுநிற்றல், பொறுத்தல் என்று பொருள் படுகிறது).  இனி இலத்தீன் தர்டரே tardare  என்பதும் ஆங்கிலம் தாரி/( டாரி)  tarry என்பவும் ஒப்பீடு செய்யத்தக்கன.  நில் என்று சொல்ல விழைபவன் "த" என்று அதட்டி நிறுத்துவது இன்றும் காணக்கிடைப்பது ஆகும்.

த ய என்ற அடிச்சொல் த - அ என்ற இரு உள்ளுறுப்புகளை உடையது. இதை வாக்கியப்படுத்தின்  த = நில்;  அ = அங்கே என்னலாம்.   தய+ அங்கு = தயங்குஆகும்.  இதைத் தய + அம் + கு என்றோ த + அ + கு என்றோ பகுத்தும் பொருளுரைத்தல் எளிதே. 

இதை விரித்தல் விழையோம்.  தய+ ஆர் = தயார் ஆனது தெளிவு.

தயார் இது தொடராமை நிலையாதல். தொடரப் பொறுத்தல்


தட்டச்சுப் பிறழ்வுகள் கவனம் பின்.




ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஓதம் ஊதுதல் ( காற்று, நீர் மிகுதல்).

ஓதம்:

 ஓதம் என்ற சொல் மனிதனின் விரை அளவின் பெரிதாதலைக் குறிக்கும்.இது ஒரு நோய். இதனை ஆங்கிலத்தில் hydrocele  என்று சொல்வர். ஒரு தேய்வைப்பை baloon /   நெகிழிப்பை காற்று ஊதிப் பருத்தலைப் போல் விதைப்பை ( விரை)   ஊதிப்போகும் நோய்.  ஆனால் இதில் நீர் மிகுந்து பருத்துவிடுகிறது என்பர்.  இதை மருத்துவரிடம் அறிக.

ஊது (ஊதுதல் ) என்ற சொல்லினின்று இது வருகிறது,  ஊகாரம் ஓகாரமாய்த் திரியும்.   எனவே ஊது > ஊதம் > ஓதம் ஆயிற்று.  

ஓதமென்ற சொல் அண்டவாதம் என்னும் இந்நோய் குறிப்பதுடன், வேறு அர்த்தங்களையும் உணர்த்தும்.  அவற்றுள் நீர்ப்பெருக்கு என்பதும் ஒன்று.  எனவே இந்த நோய் நீர்பெருக்கினால் விளைந்தது முன்னோர் உணர்ந்திருந்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இவையல்லாமல்  கடல், கடலில் எழும் அலை, ஈரம் முதலிய அர்த்தங்களையும் இச்சொல் தெரிவிக்கும்.

ஊதுதல், ஓதை, அண்டம்:

கடலில் காற்று " ஊது"வதாலும்,  அலைகளும் "ஊது"தலால் உண்டாவதாலும் ஊது > ஓது என்ற திரிபு பொருத்தமானதே.  ஓதை என்ற சொல்லுக்கும் காற்று என்னும் பொருள் உள்ளது.

இங்குக் குறித்த அண்டமென்னும் சொல்,  விரைப்பை உடலை அண்டி அமைந்திருத்தலால்  அண்டு > அண்டம் என்று வருவதாகும்.  அண்டுதலாவது அடுத்து நிற்றல்.   அடு> அண்டு. இடையில் ஒரு மெல்லெழுத்துத் தோன்றி அமைந்த சொல்.  " அண்டம் .....  அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் " என்று தாயுமான அடிகள் பாடலில் வருகிறது.  ( தாயுமானவர், மண்டலம் 1)

 அண்டம் என்னும் சொல்லுக்கு முட்டை என்பது உட்படப் பிற பொருள்களும் உள.

"  அண்டமா முனிவரெல்லாம்

அடங்கினார் பெண்டுக்குள்ளே"

என்பது ஒரு நாட்டுப்பாடல் வரி. இதில் அண்டமென்பது பூமியுடன் வானத்தையும் சேர்க்கும் சொல். நாமறியா நாட்டுப்புறத்துப் பாவலர்கள் எவ்வளவு அழகாகத் தம் கவிதைகளை வடிக்கிறார்கள் கண்டீரோ?  அண்டம் பூமி மட்டுமே குறிப்பதுமுண்டு. இடனறிந்து பொருள்கொளல் அறிவார் கடன். முந்திரிக்கொட்டைக்கு  அண்டி என்ற பெயரும் உளது, அது பழத்துக்கு வெளியில் அதனை அண்டி இருப்பதானால்தான்!.

காற்று, வளி,  வாய்வு (பேச்சில் ), வாயு

 

குருதி  ( (அ)ரத்தம் ),  வாயு (காற்று) முதலியவை உடலை அண்டி நிறுவப்பெற்று, அவ்வுடலையே உடலின் திறன் குறைந்தக்கால் நோயுறுத்துவன.  ஆகையால், கல்லண்டம், குடலண்டம் என்று நம் தமிழ்மருத்துவம் கூறும். வளிமுதலாய் எண்ணிய மூன்றும் மிகினும் குறையினும் நோய்செய்யு மென்றார் நாயனார். பல  வலி இழுப்பு முதலிய ஆக்கி உடலின் குறித்த இடங்களில் தொல்லை தருவதால், மற்றும் மூச்சு முதலியவற்றால் உயிரையும் வயப்படுத்துவதால்,  வயம் > வய > வாயு ஆகும்.  வாய் - இடம் என்றும் பொருள். எவ்விடத்தும் உள்ளிருப்பதால் வாய் > வாயு  எனவும் படும்.  வாய்  இடமெனவே, உ - உள்ளிருப்பது,  வாயு ஆம். உயிர்கள் காற்று உட்கொண்டு வெளிவிடுகின்றன. எங்கிருப்பதும் காற்று. வாய் +உ  ஆகும். இவ்வாறு பலபிறப்பி ஆவது இக்காற்றுச் சொல்.. வாழ்வு வாய்க்கப்பெற்றோம் காற்றினால் ஆதலின் வாய்த்தல் > வாய் > வாயு எனினுமாம்.  வாய்வு என்ற பேச்சுவழக்குச் சொல்லில் இன்றளவும் இச்சொல்லில் பகுதி நிலைத்துள்ளமை காண்க.  வாய்த்தல் > வாய்வு.   வாய்வு காலைக் குத்துகிறது, தோளில் குத்துகிறது என்பர்.

உ ஒ திரிபு

உடனென்ற சொல் (உருபும் ஆம்),  உடு என்பதுடன் அன் விகுதி பெற்றது.  உடனென்பதை வேறு சொற்களால் சொல்வதாயின்,  உடு- கூடவே,  அன் - அங்கு என்று கூறி விளக்கலாம். ஒடு எனபது அப்பொருளதே.  உ - ஒ உறவை அறிந்துகொள்க.  ஒடு > ஒடுங்கு ( வினை). ஒடுங்கி நிற்பது ஒருங்கு செல்லுமாகலின்,  ஒடு > ஒரு.   மடி - மரி  திரிபு கவனிக்க.

ஊங்கு என்ற சொல் மிஞ்சிவருதல், கூடுதல் குறிக்கும்.  "அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை" என்ற சொற்றொடர் அறிக.  ஊங்கு  ( மிகுதல்) - ஓங்குதல் மிகுதலே.   ஊங்கு - ஓங்கு.

உடனே என்பதை ஒடனே என்பது பேச்சில்.

 ஊ - ஓ திரிபு அறிக. 

 

தட்டச்சு மெய்ப்பு  பின்.

சனி, 12 செப்டம்பர், 2020

அருணாசலம் என்பது

 இனி, இன்னொரு சொல்லைக் கண்டு தெளிவோம். இச்சொல் அருணாசலம் என்பதாகும்.

இதைச் சொல்லத் தொடங்குமுன் ஆசலம் என்ற சொல்லைப்பற்றி சில கூறல் நலம்  ஆகும். 

இடச்செலவு நிகழ்த்துவோற்குக் கடினம் தந்து ஆதரவாய் நில்லாதது என்ற பொருளிலேதான் " ஆசலம்"  என்ற சொல் உருப்பெறுகிறது. ஆசு+ அல் + அம். ஆசு எனற்பாலது பற்றுக்கோடாக நிற்பது என்று பொருள்தரும்.  "ஆசிடையிட்ட எதுகை" என்ற யாப்பியற் குறியீட்டில் ஆசு என்ற சொல் நன்றாக வந்துள்ளது.

நாள் என்ற சொல் ஆங்கிலமொழியிற்போல பகல்நேரம் என்ற பொருளும் உடையது ஆகும்.  இச்சொல் " நாளங்காடி" என்ற சொற்றொடரில் வந்துள்ளது,

இமயம் போன்ற மலைப்பகுதிகளில் நாள் அல்லது பகல் நேரம் என்பது மிக்க அருமை உடையது ஆகும். கடுங்குளிர் சற்றுக் குறைவுறும். ஆகவே அருநாள் என்பதன் பொருள் அறிந்துகொள்ள எளிதானதே.  அருநாள் என்பது அருநா என்று குறையும். அருநா + ஆசலம் என்பது  அருணாசலம் ஆகிறது. இதன்பொருள் மிக்கத் தெளிவாகவே உள்ளது.

அருணாசலம் என்பதன் ஏனைப் பொருண்மை முன் விளக்கம் கண்டுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்க.

உங்கள் மேல் வாசிப்புக்கு: ( உசாத்துணைக்கு)

ஆசலம் என்பது:   https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html .

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும் https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_2.html

அருணன் அருணாசலம் அருணோதயம்  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_27.html

 

 குறிப்புகள்.

[ஒருசொல்லை ஒரே பொருளில்தான் கையாள வேண்டுமென்பதில்லை. சொல்லுக்கும் சொற்றொடருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிருக்கலாம். இதை உணர்ந்தோர் பலர் எனினும், யாம் பெரிதும் போற்றுவது வழக்கறிஞர்களைத் தாம். எடுத்துக்காட்டாக, சிங்கை வழக்கறிஞர் திரு டேவிட் மார்ஷல் அவர்கள். Trafficking in drug is not the same as "possession of the drug  for the purpose of trafficking " என்பதை விரித்து வாதிட்டு, மரண தண்டனையிலிருந்து குற்றவாளியைக் காப்பாற்றியவர். மேலும் ejuisdem generis என்ற இலத்தீன் சொற்பொருள் விளக்க நெறியைத் தம் வழக்குரையில் பயன்படுத்தி வெற்றிபெற்றவர். அண்மையில் ஒரு தாளிகைக் கட்டுரையின்மேல் நடந்த விவாதத்தில் line of actual control என்பது தற்போது யார் எவ்விடத்தில் குறித்த காலத்து ஆள்கின்றாரோ  அவ்விடம் (அந்த நிலம்) அவர்வயம்  இருக்கிறது என்று  பொருள் என்பதை எடுத்துச்சொல்ல நேர்ந்தது. இலக்கியத்தில் மட்டுமின்றி வாழ்வின் எப்பகுதியிலும் எந்நிலையிலும் பொருள்விளக்கம் என்பது முன்னிற்கும் ஒரு தேவையாய் உள்ளது.

இதை எதற்காக இங்கு சொல்கிறோம் என்றால், யாம் முன்னொரு முறை சொல்லாமல் விட்ட பொருள், ஆங்கு இல்லை என்பதாகாது என்பதற்கே ஆகும்.

சுருக்கம் கருதியும் சில பொருண்மைகள் விடுபாடு கண்டிருக்கலாம். அது ஏன் விடுபட்டது என்பது யாம் வெளியிடாத ஒன்றே ஆகும்.]


மெய்ப்பு:  பின்னர்




துட்டன் (துஷ்டன்)

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல்.

இது பின்னர் துண் என்று திரிந்தது.

துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. பின் அதே துண் என்ற அடி பிரிவு, துண்டு படுதல் என்ற கருத்தையும் தழுவியது. இதற்கு இன்னோர் உதாரணம் தரலாம் என்று நினைக்கின்றோம், காண்க:

இல்   -  இடம்:    " கண்ணில் விழுந்த கரித்தூள்."   இங்கு இல் என்பது இடப்பொருள் தந்தது.  ( உருபு).

இல் -      இல்லை.  " அஃதொப்ப தில் "   உளதாகிய இடம் குறித்த இல் என்னும் சொல் ( உருபு,  இடைச்சொல் )  இங்கு இலதென்று இன்மைப்பொருள் தந்தமை ஒரு முரண் என்று கருதலாம்.

இல்  -   இல்வாழ்வான் மற்றோருக்கு நல்லாற்றில் நின்ற துணையாவான்.

இது இல் என்று வீடு குறித்தது.  உருபில்போல் இடமென்னும் பொதுப்பொருளில் வாராமல்  குறித்த இடமாகிய இல்லத்தையே சுட்டியது. ஒருவற்கு எல்லா இடனும் வீடாமோ?

உதாரணம் என்பது முன் நிறைவாய்ப் போன்றமைந்தது,  உது -   முன்னிற்பது. ( அது இது உது சுட்டடிச் சொற்கள்).  ஆர் (தல்) -  நிறைவு,  அண்+ அம் - விகுதி (  அணித்தான அமைவுப் பொருள் ). அணம் என்றும் ஒருவிகுதி என்று கொள்ளினும் அமையும்.  எனவே இல் என்பது உதாரணமாய்க் காட்டப்பெற்றது.  எடுத்துக்காட்டு,  காண்மானம் ( காமானம் என்பர் பேச்சில்.) எனவும் சொல்வர்.

இனி,  துட்டன் ( துஷ்டன்) என்ற சொல்லுக்கு வருவோம்.   துள் என்பது அடங்காமை குறிக்கும் அடிச்சொல். வேறு பொருளதுமாகும். " ரொம்பத் துள்ளுகிறான் என்பது வழக்கில் சொல்லப்படுவது. துள்ளுதல் பலவகை. மகிழ்வால் துள்ளுதல் ஒன்று.   அடங்காமல் துள்ளுதல் மற்றொன்று.  வேறு துள்ளுதல்களை வந்துழிக் காண்க. இந்தத் துள் என்ற அடி துடு என்று திரியும். ளகர ஒற்று டுகரமாதல் காண்க..பலவுள. ஒன்று:  பள் > படு > படுகை. இன்னொன்று: நள் > நடு.  நள்ளாறு = நடு ஆறு > நட்டாறு.

துடு >  துடு + கு =  துடுக்கு.  ( கு விகுதி ).

இன்னோர் எடுத்துக்காட்டு:   அடு >  அடுக்கு என்பது.  கு விகுதி.

பிடு > பிடுக்கு.

துடு  + அன் =  துட்டன்.  இங்கு டகரம் சொற்புனைவில் இரட்டித்தது.

துடு என்பது துடி என்று இகரம் இறுதியாகி மற்றொரு சொல்லாம்.கர்வம் (கருவம்), கோபம் என்/றும் பொருள்தரும்.

துடு > துடும்புதல் என்பது கூடுதல் ஆவது குறிக்கும்.

துடு > துடைக்குதல்  அழிவு செய்தல் பொருளதுமாம்.

துள் -  துட்குதல்,   வெருவுதல் என்பதுமாம்.

இவ்வழிச்சென்று துட்டகுணங்கள் அறிந்துகொள்க.  இக்குணங்கள் இவ்வுருவங்களில் படிந்துள்ளன.

இடு அம் இட்டமெனல்போல் துடு அம் துட்டமென இரட்டிப்பு ஆயிற்று,

துட்டம் துஷ்டமானது இட்டம் இஷ்டமானதுபோலுமே.  இட்டமாவது மனத்தை ஒன்றில் இடுவது,  இடு > இட்டம்.

"வடவெழு தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" ( தொல்).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் திருத்தம்.



 





வியாழன், 10 செப்டம்பர், 2020

அரட்டுதல்: அரசனும் அரட்டனும்

 அரசன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

அரட்டுதல் அல்லது கத்திக்கொண்டு கட்டளையிடும் முறையின் மூலமே பட்டாளத்திலும் "ஆட்சி" நடைபெறுகிறது. அணிவகுப்பு முதலியவைகளில் இதனை நீங்கள் காணலாம்.

அரசன் அரண் உடையவன்.  அரணன் ஆன அவனுக்கு அரணன் > ராணா  ( மகாராணா)  என்ற பெயர்களும் வழங்கியுள்ளன.

ஒருவன் அரட்டப்படுவது அச்சத்தை விளைக்கிறது.  அரள் > அரளுதல் என்பது அச்சமுறுதல். அன்புடன் பேசி பல்வேறு சலுகைகளையும் வழங்கி வேலைவாங்குவது என்பதெல்லாம் இக்காலத்து நெறி.   பண்டை நாட்களில் கத்திச் சவுக்காலடித்து அல்லது உதைத்து வேலைவாங்கினர்.

நாளடைவில் இந்த ஒலி எழுப்புதற் கருத்தும் அச்சக்கருத்தும் அரசன் என்ற சொல்லினின்று மறைந்துவிட்டது.   அர் என்ற அடிச்சொல் ஒலி குறிப்பது.

இதையும் வாசித்து அறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

அரசனிலும் சற்றுக் குறுகிய அதிகாரமுடைய ஆட்சியாளன் அரட்டன் என்று குறிக்கப்பட்டான். இச்சொல் நேரடியாக அரட்டு என்ற சொல்லினின்றே புனையப்பட்டது தெளிவு.  அரட்டு + அன் = அரட்டன்.   திவாகர நிகண்டு அரட்டனைக் குறுநிலமன்னன் என்று குறிக்கின்றது.

அரட்டிப் பிறரை அடக்கியாள்பவனே ஓரிடத்தை ஆளவும் தகுதி உடையோன் என்று பண்டையர் எண்ணினர் என்பது இச்சொற்கள் மூலம் தெளிவாகிறது.

அறிந்து மகிழ்வீர்.


 

 



புதன், 9 செப்டம்பர், 2020

சேர்வில் தோன்றிய பிரிவுக்கருத்து. துண் - அடிச்சொல்.

 

துண் என்ற அடிச்சொல் சேர்ந்திருத்தல் என்ற கருத்தை மையமாகக் கொண்ட அடிச்சொல் என்பதை முன் இடுகையிலே கண்டோம். இந்த அடிச்சொல்லுக்கு ஒரே ஒரு பொருள்மட்டும்தான் உண்டு என்று எண்ணிவிடலாகாது. வேறு அர்த்தங்களும் உண்டு. இவ்வாறு இலங்கும் பொருள்களில் இன்னொன்றை இங்கு அறிந்துகொள்வோம்.


ஒன்றாய் அல்லது முழுமையாய் இருப்பதே உடையும், துண்டுபடும். இரண்டாய் இருப்பனவும் இரண்டு ஒன்றுகள் - இரண்டு தனிப்பொருள்கள் எனின், ஒவ்வொன்றும் ஒரு முழுமை எனக் கொள்ளவேண்டும். எது முழுமையாய் இருக்கிறதோ அது உடையவும் துண்டுபடவும் செய்யும். துண்டுபடுதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லாக்கத்தில் எப்போதாவது உள்வரும். பெரும்பாலும் வராமலும் போகும்.


காண ஒன்றாய் இருப்பனவெல்லாம் சேர்ந்திருக்கின்றவை என்று பொருள். அணு என்ற சொல்லை ஆதியிலேயே உடையது தமிழ்மொழி ஆகும். டால்டன் முதலிய மேலை அறிஞர் அணு பற்றிய தெரிவியலை ( theory) அறிந்து கூறுமுன்பே அதைக் கண்டுசொல்லிவிட்டனர் நம்மனோர். தனித்தனி முழுமைகளாய் ஒன்றையொன்று அண்மி ( அண்) நிற்பது அணு. இங்கு உ என்பது விகுதி. உகர விகுதிக்கு இன்னோர் எடுத்துக்காட்டு: வல் > வலு. இன்னொன்று: கொள் > கொளு. இவ்விகுதி வினையிலும் பெயரிலும் வரும். அணு இயற்கையில் தனித்தியங்குவது என்பது விளக்கம் இன்றியே புலப்படுவது ஆகும். மேலும் அணுவைக் காண இயலாது. மிக்கச் சிற்றுருவினவற்றுள் மேலும் சிற்றுருவை அடைய இயலாத ஒன்றுதான் அணு. அணுவையும் பிரிக்கலாம் என்பர் அறிவியலார். ஆனால் அக்காலத்தில் அணுவுடன் தமிழன் நின்றான். இதுவே அக்காலத்துக்குப் பேரறிவு ஆகும். ஆகவே சேர்ந்துள்ளது துண்டுபடும், அது இயற்கை; இதிலிருந்து துண் > துண்டு என்ற சொல் அமைந்தது.


துண் > துண்டு (துண் + து).

துண் > துணி > துணித்தல்.

( வெட்டுப்படுதல் ).

ஒன்றாய் இருப்பது வெட்டுண்டால், வெட்டுண்ட ஒவ்வொன்றும் தனித்தனி இயக்கம் உடையவை ஆகின்றன. பிரிந்தவற்றுள் ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் சேர்ந்து இருக்கின்றன. எனவே, பிரிதல் சேர்ந்திருத்தல் எல்லாம் சொல்லாக்கத்தில் ஒன்றுதான். சேர்வில் பிரிவும் பிரிவில் சேர்வும் ஒன்றே. ஆகவே சொல்லாக்கத்திற்கு ஒரே அடியைப் புழங்கியது பொருத்தமே.


பலர் ஒன்றுபட்டு இயங்கும்போது ஒருவன் துண்டுபட்டு நின்றுகொண்டிருப்பான். இவனைப் பெரும்பான்மையினர் நம்பாமையினாலும் அவன்றன் பின்செயல்பாடுகளாலும், அவனைக் கபடு உடையவன் என்று நினைத்தனர். அதனால் அவன் துண்டகன் எனப்பட்டான்.


துண்டு + அகம் + அன் = துண்டகன்;


அகத்துள் துண்டுபட்டு நிற்போன் எனினும் ,


துண்டு + அகல் > துண்டகல் > துண்டகன்


துண்டாய் அகன்று நிற்போன் எனினும்,( ல்-ன்)


துண்டு + (ங்)கு + அன் = துண்டகன்


ங் - இடைக்குறை எனினும்,

எவ்வாறு விளக்கினும் செய்துகொள்க.


விளக்கம் ஏற்பச் செயல். ஒரு பூனையைப் பலவாறு தோலுரிக்கலாம் என்பது ஆங்கிலப்பழமொழி. கபடு சூது வஞ்சகம் நெஞ்சகத்துடையான் துண்டகன். அதுவே பொருள்.


இனித் துண்டன் என்று சொல் நிறுவுற்று, அது கொலைஞனைக் குறிக்கிறது.


துண்டு > துண்டித்தல்.


இது இகர வினையாக்க விகுதி பெற்று, துண்டுபடுதலைக் குறிக்கிறது.


மூங்கில் பல இணைப்புகள் உடையதுபோல் உள்ளபடியால் "துண்டில்" என்பது மூங்கிலுக்கும் பெயராயிற்று.


திடுக்கிட்டவன் மூச்சு விடுகையில் மூச்சு விடுதல் பல துண்டுபட்டதுபோல் இழுப்புடையதாவதால் துண் என்ற அடியிலிருந்தே "துண்ணிடுதல் " என்ற சொல்லும் அமைந்தது.


தன் தந்தை கொலையுண்டதறிந்த அவன், தான் ஆடித் தன் தசையாடித் துண்ணிட்டான்


என்று வாக்கியம் செய்யலாம்,.


இனித் துண்டு என்ற சொல் முண்டு என்றும் திரியும். முண்டினைத் தலையிலணிய, முண்டு + ஆசு = முண்டாசு ஆகும். ஆசு என்ற சொல் பற்றிக்கொள்வு குறித்தது. தலைப்பற்றுத் துணி எனலாம். ஆதல் வினை. ஆசு என்பதில் ஆ -வினையடி. சு - விகுதி.


உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிட்டு

மகிழ்ந்திருங்கள்.


அறிக. மகிழ்க.

 

குறிப்பு:

பிரியம் என்ற பற்றுதல் குறிக்கும் சொல் ,"பிரியோம்" என்ற  எதிர்மறை வழக்கினின்று தோன்றியதுஇவண் கூறிய வகையுட் படுமெனக் காண்கபிரியா என்ற பெண்பெயர் பிரியாள் என்பதன் கடைக்குறை. ( பிரியமாட்டாள் ஆதலின் "பிரியம்" உடையாள் ).


அச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


துண் - அடிச்சொல்: சேர்ந்திருத்தல் கருத்து,

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல். இது பின்னர் துண் என்று திரிந்தது. துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. துண் - துணை. துண் - துணங்கல் ( கூத்து: சேர்ந்து நடித்தல். ஆடுதல்) துண் - துணங்கை ( கூத்து, திருவிழா) துண் - துணர் ( பூங்கொத்து) துண் - துணைத்தல். ( பிணைத்தல்) துண் -துணைமை ( ஆதரவு) துண் -துணையல் - பூமாலை ( பூக்கள் சேர்ந்திருத்தல்) துண் -துணைவன் - கணவன். துள் துண் : வேறு பொருள் உடைய சொற்கள் பின்பு அறிவோம்.

திங்கள், 7 செப்டம்பர், 2020

ஆக்கிரமிப்பு - கிரமித்தல் முதலிய

 இன்று ஆக்கிரமிப்பு என்பதை அறிவோம் - சுருக்கமாக.

கிரமித்தல் என்பது ஒர் பிறழ்பிரிப்புச் சொல் என்பதை யாம்

முன்னர் வெளியிட்டுள்ளேம்.

இதனைப் பழைய இடுகைகளிற் காண்க.

ஆக்கு + இரு + அம் + இ + பு =  ஆக்கிரமிப்பு ஆகும்.

தமக்கு ஆக்கம் நேருமாறு ஓரிடத்தில் இருந்துகொண்டு

நிலைமையை அமைத்துக்கொளுதலே ஆக்கிரமிப்பு.

ஆக்கு  இரு :  ஆக்கம் இருக்குமாறு

அம் -  அமைந்து

இ - இது வினையாக்க விகுதி. 

உது -  முன்னது;  + இ ( வினையாக்க விகுதி).

உது + இ = உதி > உதித்தல். முன் தோன்றுதல். இஃது

எடுத்துக்காட்டு.

இதில் உள்ளது எளிமையான கருத்து.

வலிந்துகவர்வு என்றும் இதைக் கூறலாம். வலிமை

காட்டுதற்கு நிலம்/பொருள் இவற்றுக்கு உரியோன் 

இடத்தில் இல்லாதவிடத்தும் ஆக்கிரமிப்பு

நிகழலாம். உரியோன் பின்பு வந்து அறியினும்

வலிந்துபற்றுதலின் பாற் படுவதே.


மெய்ப்பு பின்பு